Yoga Narashimarkoil karthigai vazhipadu

108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம சாமி கோவில் கார்த்திகை மாத முதல் வார வழிபாடு துவங்கியது.

பதினொரு மாதங்கள் கண்மூடி அருள்பாலித்து வரும் யோக லட்சுமி நரசிம்மர் கார்த்திகை மாதம் ஐந்து வாரங்களில் பக்தர்களுக்கு கண்திறந்து அருள்பாலிப்பார் என்பது ஐதீகம்.

நரசிம்மரை தரிசிக்க தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.

தற்போது வரை 50,000 பேர் தரிசனம் செய்து உள்ளனர். பாதுகாப்பு பணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *