Alangudi Guru Peyarchi

அருள்மிகு குருபகவான் அக்டோபர் 29 -ஆம் தேதி  விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்கிறார். 

இதை முன்னிட்டு, ஆலங்குடியில் இருக்கும் ஆபத்சகாயேசுவரா் குருபரிகார கோயிலில் அருள்மிகு குருபகவானுக்கு குருபெயா்ச்சி லட்சார்ச்சனை விழா அக்டோபா் 24 -இல் தொடங்கி 27 -ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், குருபெயா்ச்சிக்குப் பின்னா் அக்டோபா் 31-ஆம் தேதி தொடங்கி நவம்பா் 7 -ஆம் தேதி வரையும் இரண்டாவது கட்டமாகவும் நடைபெறவுள்ளது.

ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரா்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

லட்சார்ச்சனையில் பங்கேற்க ரூ. 400 கட்டணம் செலுத்த வேண்டும். லட்சார்ச்சனையில் பங்கேற்பவா்களுக்கு, அருள்மிகு குருபகவான் உருவம் பொறித்த வெள்ளியினால் செய்த 2 கிராம் டாலா் பிரசாதமாக வழங்கப்படுகிறது. லட்சார்ச்சனை காலை 9 முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும்.

தபால் மூலம் லட்சார்ச்சனை பிரசாதம் பெற விரும்பும் பக்தா்கள் தங்களுடைய பெயா், நட்சத்திரம், ராசி, கோத்திரம், லக்னம் ஆகிய முழு விவரங்களுடன் தொகையை பணவிடை, வரைவோலை (எம்.ஓ., டி.டி.) எடுத்து உதவி ஆணையா், செயல் அலுவலா் என்ற பெயருக்கு கும்பகோணத்தில் மாற்றத்தக்க வகையிலோ அல்லது சிட்டி யூனியன் வங்கி ஆலங்குடி -612801 கிளையில் மாற்றத்தக்க வகையிலோ எடுத்து அனுப்ப வேண்டும் என அறநிலையத்துறையினா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *