Perumal Mundiri Maalai Video

புரட்டாசி மாதம் முதல்   சனிக்கிழமையான  இன்று  நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோயில்லகளில்  பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலைமுதலே பெருமாள் கோவிலில் எராளமான பக்தர்கள் சாமி  தரிசனம் செய்துள்ளனர். 

சென்னை திருவொற்றியூரில் 400 ஆண்டு பழமையான காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் மூலவர் கல்யாண வரதராஜ பெருமாளுக்கு விஷேச முத்தங்கி அலங்காரம் செய்யபட்டது.

இதனையடுத்து  உத்சவர் ஸ்ரீ பவழ வண்ண பெருமாள் ஸ்ரீ தேவி பூதேவி  ஆண்டாள்  தாயாருக்கு   18  கிலோ எடையுள்ள முந்திரி  மற்றும்   பழங்களில்  அலங்கார பொருட்கள் கொண்டு கோர்க்கப்பட்ட  மாலை  ஜடை ,கிரீடங்கள் அணிவிக்கபட்டு  பிரமாண்ட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.    

கோவில் வாசல்களில் அரிசி எல்லு மற்றும் மலர்களால் அலங்காரங்க  கோலங்கள் போடப்பட்டுள்ளதால் பக்தர்கள்  ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க இத்திருக்கோவிலில் புரட்டாசி மாதம் நான்கு வாரங்களும்  விதவிதமான மலர்கள் பழங்கள் என மாலை  அணிவித்து பெருமாளுக்கு அலங்காரம் செய்வதனால்  வெளிபகுதிகளில் இருந்து எராளமான பக்தர்கள்  வந்து  சாமி தரிசனம் செய்கின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *