vinayakarukku piditha pooranam kozhukattai

தேவையான பொருட்கள்: 
பச்சரிசி மாவு – 2  கப் 
வெல்லம் – 100 கிராம்
எள் – 2 கிண்ணம் (வறுத்தது)
வேர்க்கடலை – 2 கிண்ணம்
பொட்டுக்கடலை – 2 கிண்ணம் 
துருவிய தேங்காய் – 1/2 மூடி  
ஏலக்காய் பொடி – 1  தேக்கரண்டி 
 உப்பு – சிறிது 

செய்முறை :

வெல்லத்தைப் பொடித்து, மிக்ஸியில் போட்டு ஒரு முறை அடித்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, பொட்டுக்கடலை, எள் ஆகியவற்றை வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.   துருவிய தேங்காயை எண்ணெய் விட்டு, பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அரைத்த பொடி கலவை, வதக்கிய தேங்காய், ஏலக்காய் பொடி மற்றும்  வெல்லத்தை போட்டு நன்கு கலந்து கொள்ளவும். பூர்ணம் தயார்.

கொழுக்கட்டை செய்ய:  

ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவைப் போட்டு, அதில்  சிறிது  உப்பு சேர்த்த சுடு தண்ணீர் விட்டு, சற்று மென்மையாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.  பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் சிறு உருண்டையை எடுத்து, உருட்டி, வாழை இலையின் மேல் சிறிது எண்ணெய் தடவி, அந்த உருண்டையை வைத்து தட்டையாக தட்டி, அதில் சிறிது பூர்ணத்தை வைத்து மடித்து, முனையை நன்கு மூடி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, இட்லித் தட்டில் அந்த பூர்ணம் வைத்து மடித்துள்ள மாவை வைத்து, மூடி, வேக வைத்து எடுக்கவும். இப்போது பூர்ணம் கொழுக்கட்டை ரெடி.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *