Sivakasi Kuthu vilakku Poojai

சிவகாசியிலுள்ள ஸ்ரீ பேச்சியம்மன் கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு 108 குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

மக்களிடையே பண பற்றாக்குறை தீரவும், மக்கள் சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று சுபிட்ஷமாக வாழவும், இக்கோயிலில் சகல ஐஸ்வர்ய அலங்காரத்தில் எழுந்தருளிய பேச்சியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

 
 கோயிலுக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் ஐஸ்வர்ய அலங்காரத்தை கண்டு அம்மனை வணங்கி வழிபட்டனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 108 குத்துவிளக்கு பூஜை  நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கினர். 
முன்னதாக பேச்சியம்மன் வழிபாடு பாடலுக்கான ஆலய வழிபாட்டு மலர் வெளியிடப்பட்டது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *