Sivan Parvathy Thirumana kolam

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் சிவபெருமான் வேதங்களுக்கு காட்சியருளும் விதியபாத விழாயொட்டி வேதாமிர்தஏரியில் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோவில் அகஸ்தியருக்கு திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சியருளிய பெருமையுடைய ஸ்தலமாகும் ரிக், யசூர், சாம, அதர்வன வேதங்கள் வழிபட்ட ஸ்தலமாகும் இங்குள்ள இறைவனை வழிபட்ட வேதங்கள் தங்களின் பெயரிலேயே இறைவன், இறைவி, ஊர், கடல், தீர்த்தங்கள், காடு அனைத்தும் அழைக்கப்பட வேண்டும் என் வேண்டிக் கொண்டன.

அவ்வாறே அருளியதாக மறைக்காட்டீசர் தனூர் மாதத்தில் வேதங்களுக்கு காட்சியளித்து அருளினார் அதன்படி இறைவன் வேதாரண்யேஸ்வரர் என்றும் இறைவி வேதநாயகி என்றும், ஊர் வேதாரணியம் என்றும், கடல் வேதநதி என்றும் ஏரி வேதாமிர்தஏரி என்றும், காடு வேதவனம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *