Samaya puram Mariamman koil car festival

சக்தி ஸ்தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. 

தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்து வருகிறது. தினமும் இரவில் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சித்திரை திருவிழாவின் பத்தாம் நாளான இன்று  தேரோட்டம் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு அம்மன் திருத்தேரில் எழுந்தருளியதும் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. முக்கிய வீதிகளில் தேர் வலம் வந்தது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்து கலந்துகொண்டனர். கலந்து கொண்டனர். 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *