Vigari Varudathi Vananga Vendiya Kadavul

விகாரி வருஷத்தில் மழை அதிகமாக பெய்யும். பொருட்கள் விலை ஏற்றத்துடன் இருக்கும். புஷ்பங்கள் அதிகமாக விளையும். உலக நாடுகளில் போர்கள் மறையும். நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் நேர்மையாக இருப்பார்கள். தீ விபத்துக்கள் அதிகரிக்கும். 

இந்த ஆண்டு ஆதிசேஷனுக்கும் பெருமாளுக்கும் உகந்த நக்ஷத்ரமான ஆயில்ய நக்ஷத்ரத்தில் பிறக்கிறது. மண்ணில் வாழும் மக்களுக்கு எல்லாம் பொன்னும் பொருளும் போகமும் செல்வாக்கும் சொல்வாகும் இன்னும் பெருகும். கன்னியர்களின் கவலைகள் தீரவும் – காளையர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைத்திடவும் – எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறவும் லாப ஸ்தானத்தில் இருக்கும் லக்னாதிபதி சந்திரன் புதன் சாரம் பெற்றிருப்பதால் அதன் அதிதேவதையான ஸ்ரீமன் நாராயணனை வணங்கி வர அனைத்தும் நிறைவேறும். 

ஆண்டின் தொடக்கத்தில் தனாதிபதி சூரியன் நாடிப்படி குரு – சனி – கேதுவுடன் சம்பந்தம் பெறுகிறார்கள். ஆண்டின் தொடக்கத்திலேயே சுபகாரகன் குரு லக்னத்திற்கு ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் நிகழ்வானது 12 ஆண்டிற்கு ஒரு முறை நடக்கும் அறிய நிகழ்வாகும். எனவே இவ்வாண்டு சுபகாரியங்கள் அனைத்தும் நல்ல முறையில் நடப்பதைக் காட்டுகிறது. 

அல்லல்கள் அனைத்தும் தீரப் போகிறது. தனது பார்வையால் குரு செவ்வாயை பார்ப்பதால் குருமங்கள யோகத்தைக் காட்டுகிறது. மங்கள காரியங்கள் அனைத்தும் எந்த விதமான தங்கு தடையின்றி நடைபெறும். பூமியிலுள்ள மக்களுக்கெல்லாம் தைரியமும் – இறைவனின் பரம சைதன்யமும் நிறையப் போகிறது. கவலைகள் மறைந்து கை நிறைய தனலாபம் அமையப் போகிறது. 

கிரக மாற்றங்கள்:
28 அக்டோபர் 2019 – அன்று விருச்சிக ராசியில் இருக்கும் குரு பகவான் தனுசு ராசிக்கு மாறுகிறார்.  

 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/
இணையம்: http://www.kuppuastro.com/
போன் : +91 7845119542

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *