Dhyanam 3

அதிக வெளிச்சம் குறைந்த தனியறையில் வசதிக்கேற்ப சுகமாக, உடல் இறுக்கமற்ற நிலையில் நிமிர்ந்து உட்காருக, இதற்கு வஜ்ராசனம், பத்மாசனம், சுகாசனம் என்பவற்றைப் பயன்படுத்தலாம்.

 எவ்வாறு உட்கார்ந்து இருப்பினும் முதுகு முள்ளந்தண்டு வளையாது நிமிர்ந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்க. தியானம் சித்திக்க இது உதவும்.

தியானம் செய்வதில் சுயநலம் இருக்கக் கூடாது. உலகத்துக்காக, சமாதானத்துக்காக, மக்களின் நன்மைக்காக தியானம் செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட நேரத்தை தியானம் செய்ய ஒதுக்கி அதனைப் பயன்படுத்தும் போது மனம் பழக்கப்பட்டு இலகுவில் தியானநிலை சித்திக்கும். 

வடக்குப் பக்கம் பார்த்து தியானம் செய்வது சிறப்பானதாகும். சூரியன் உதயமாகும் முன்னரும், சூரியன் மறைந்த பின்னரும் வெறும் வயிற்றில் தியானம் செய்வது மிகப் பொருத்தமுடையதாக இருக்கும்.
 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *