thiruchendur-kandha-sasti

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. 5.30 மணிக்கு ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார். 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.

9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 13ஆம்தேதி நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடைதிறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகம், 9 மணிக்கு உச்சிகால அபிசேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு மேல் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்கிறார். 14ஆம் தேதியன்று மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும் அம்பாளுக்கும் மாலை மாற்று விழாவும் இரவு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. ஆறு நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் தங்களின் விரதத்தை முடித்துக்கொண்டு அவரவர் ஊர்களுக்கு திரும்புவதுடன் கந்த சஷ்டி விழா முடிவடைகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *