koyilukul-engu-amara-vendum

கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.

நடந்துகொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது.

கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.

நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ கெடுக்கக் கூடாது.

கோயில் உள்ளே உரக்கப் பேசுதல் கூடாது.

வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.

கோயிலுக்குள் முக்கியமாக பூஜை நேரத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது.

கோயில் உள்ளே செல்போன் பேசுதல் கட்டாயம் கூடாது. அணைத்து வைப்பது அனைவருக்கும் சிறப்பு.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *