kalahasthi-guru-dakshana-moorthi-sirappu-poojai

ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குரு பெயர்ச்சி நடைபெற்றதால் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதாக கோயிலின் ஆஸ்தான அர்ச்சகர் கருணா சுவாமி தெரியப்படுத்தினார்.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் குரு பெயர்ச்சியை யொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது .இந்நிலையில் இவ்வாண்டு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது முன்னதாக காலை 9 மணிக்கு சங்கல்பம் ,அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் நடைபெற்ற பின்னர் கலச பூஜை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து குரு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றதோடு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு நெய்வேத்தியம் தீபாரதனை நடந்தது .மாலை சந்தன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த தோடு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது தொடர்ந்து நான்கு மாடவீதிகளில் குரு தக்ஷிணாமூர்த்தி உற்சவ மூர்த்தி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *