thiirumalaiku-malargal-anuppivaippu

திருப்பதி திருமலை நவராத்திரி பிரம்மோற்சவத்துக்கு திருச்செங்கோட்டில் இருந்து 9 டன் மலர்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

திருப்பதி திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்காக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இருந்து ஸ்ரீ திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயண நித்திய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் மூலமாக 9 டன் மலர்கள் மாலையாக தொடுத்து அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பெண்கள் சம்பங்கி, முல்லை, ரோஜா உள்ளிட்ட மலர்களை மாலையாக கட்டி திருப்பதி மலைக்கு லாரி மூலமாக அனுப்பி வைத்தனர்.

சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 900-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று பூக்களை மாலையாக தொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *