punnai-nallur-mariamman-car-festival

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத திருவிழா கடந்த மாதம் 8ம் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைதொடர்ந்து 12ம் தேதி இரவு முத்து பல்லக்கு வீதியுலா நடந்தது. 14ம் தேதி முத்து பல்லக்கு விடையாற்றி விழா நடந்தது.

இதைதொடர்ந்து நேற்று ஆவணிமாத கடைசி ஞாயிற்றுக்கிழமை விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர் விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.

மூத்த இளவரசர் பாபாஜிராஜாபோன்ஸ்லே, இணை ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர்கள் மாதவன், சுரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். கோயிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் தேர் வலம் வந்தது. நாளை (18ம் தேதி) கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *