iswaryangalai-alli-tharum-ko-poojai

அனைத்துவித தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள். கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.

மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அஷ்ட வசுக்களும், நவகிரங்களும், தச நாகங்களும், அஷ்டதிக்கு பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர்.

எனவே, பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் பசுவை நீராட்டி முகத்திலும் பின்புறமும் மஞ்சள் பூசி குங்குமப் பொட்டுக்கள் வைத்து கற்பூர ஆரத்தி காட்டி பசுவை வலம் வந்து மும்முறை கோவந்தனம் செய்ய வேண்டும். பசுவிற்கு கொஞ்சம் வெல்லம் கலந்த அரிசி மற்றும் அகத்திக்கீரை அளித்திடல் வேண்டும்.

கீழ்க்காணும் சுலோகத்தைச் சொல்லி வணங்குவது சிறப்புடையது.

“சர்வதாமதுகே- தேவி

சர்வதீர்த்தா பிஷேபினி

பாவனே ஸுரபிஸ்ரேஸ்டே

தேவி-துய்யம்-நமோஸ்துதே”.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *