murugan-temples

முருகப் பெருமான் மகர வாகனத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் வடிவம் காங்கேயம் தலத்தில் உள்ளது.

திருமருகல் (நாகை) திருத்தலத்தில் முருகன் கஜவாகனராய் காட்சியளிக்கிறார்.

திருவையாறுக்கு அருகே திருக்கண்டியூரில் ஞானஸ்கந்தனைக் காணலாம்.

கொல்லி மலைக்கு அருகே பேருக்குறிச்சியில் உள்ள “கூகைமலை’ கோயிலில் எழுந்தருளியுள்ள முருகன், பழனி ஆண்டவர் வடிவம் கொண்டவர்.

திருச்சிக்கு அருகில் திண்ணியத்தில் கோயில் கொண்டுள்ள முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனியாக ஆளுக்கொரு மயில் வாகனத்தில் எழுந்தருளியிருப்பர்.

சென்னைக்கு அருகில் போரூர் பாலமுருகன் பனை மரத்தின் கீழ் பூமிக்கு அடியில் இருந்து வெளிப்பட்டவர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *