vanabadrakali-amman-koil-kundam-thiruvizha

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோவிலில் வரும் 17 ஆம் தேதி குண்டம் திருவிழா தொடங்குகிறது.

வன பத்ரகாளியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் குண்டம் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு குண்டம் திருவிழா வருகிற 17-ந் தேதி இரவு 7 மணிக்கு பூச்சாட்டுதலுடன் தொடங்குகிறது.

20-ந் தேதி காலை 10 மணிக்கு லட்சார்ச்சனை, 21-ந் தேதி இரவு 10 மணிக்கு கிராமசாந்தி, 22-ந் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

23-ந் தேதி மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறத்தல், 24-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு, காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இதில் மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து குண்டம் இறங்குகின்றனர். 25-ந் தேதி காலை 10 மணிக்கு மாவிளக்கு பூஜை, மாலை 6 மணிக்கு பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

26-ந் தேதி இரவு 7 மணிக்கு பரிவேட்டை, இரவு 8 மணிக்கு வாணவேடிக்கை, 27-ந்தேதி மதியம் 12 மணிக்கு மகாஅபிஷேகம், மாலை 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 30-ந் தேதி காலை 10 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது. 31-ந் தேதி காலை 8 மணிக்கு மறு பூஜையுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *