kalabairavar-maha-ashtami

சிவகங்கை மாவட்டம் அருகே வைரவன்பட்டியில் உள்ள மூல பாலகால பைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.
இக்கோயிலில் மூல பாலகால பைரவர் தங்கக் கவசத்தில் எழுந்தருளி மகா கணபதி பூஜை செய்து தீபாராதனைகளுடன் மகா பைரவ அஷ்டமி விழா தொடங்கியது. பின்பு கோ பூஜை மற்றும் கஜ பூஜை நடந்ததும் மகா பைரவ ஹோமம் 20-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களால் வேதமந்திரங்கள் முழங்க நடைபெற்றது. பின்னர் வஸ்திர யாகமும், மகா பூர்ணாகுதியும் நடந்ததும் தீபாராதனை காட்டப்பட்டது.
யாகத்தில் வைக்கப்பட்ட புனிதநீர் கோயில் சுற்றுப்பிரகாரம் வழியாக சிவாச்சாரியார்களால் சுமந்து கொண்டு வரப்பட்டது.
பின்பு மூல காலபைரவருக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, பன்னீர், இளநீர் மற்றும் யாக வேள்விகளில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரால் அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து பால காலபைரவருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *