thirupathy-undiyal-vasool

திருமலை திருப்பதியில் மே மாதம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மே மாதம் மட்டும் ரூ.86 கோடி காணிக்கையை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை என்பதால் திருமலைக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டும், பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. அதன் காரணமாக உண்டியல் வசூலும் அதிகரித்துள்ளது.

கடந்த மே மாதத்தில் 24 லட்சத்து 55 ஆயிரம் பக்தர்கள் திருப்பதியில் சுவாமி தரிசனம் பெற்றுள்ளதாகவும், பக்தர்கள் 86 கோடியை 46 லட்சம் ரூபாயை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளதாகவும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்து இருக்கிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *