gaumari-amman-mandiram

கவுமாரன் என்றால் குமரன் என்று பொருள். குமரன் என்பது முருகக்கடவுளைக் குறிக்கும். ஈசனாலும் உமையவளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர் தான் குமரக்கடவுள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் அம்சம்தான் இந்த கவுமாரி. இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயிலை வாகனமாக கொண்ட இந்த அன்னை, அஷ்ட திக்குகளுக்கும் அதிபதியாவாள். இவளை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

‘ஓம் சிகி வாஹனாயை வித்மஹே
சக்தி ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கெளமாரி ப்ரசோதயாத’

என்ற கவுமாரி காயத்ரி மந்திரத்தை, தினமும் 108 முறை பாராயணம் செய்து வந்தால், குழந்தைப் பேறு விரைவில் கிடைக்கும் என்பது ஐதீகம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *