sani-bagavan-veedhi-ula

திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோயில் பிரமோற்ஸவ விழாவின் 16நாள் விழாவாக, நேற்று முன்தினம் இரவு சனிபகவான் தங்க காக வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோயில் உலக புகழ்பெற்றது. இக்கோயிலில் சனிபகவான் தனி சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார்.

இக்கோயில் பிரமோற்ஸவ விழா கடந்த 11ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, கடந்த 18ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்பபல்லாக்கு செல்லும் நிகழ்ச்சியும், 23ம் தேதி பஞ்சமூர்த்திகள் ருஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா நிகழ்ச்சியும், நடைபெற்றது.

15 நாள் விழாவாக, 25ம் தேதி கோயில் வாசலில் விநாயகர், சுப்பிமணியர், தியாகராஜர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்களின் தேரோட்டம் நடைபெற்றது.16ம் நாள் விழாவாக, நேற்று முன்தினம் இரவு, சனிபகவான் தங்க காக வாகனத்தில் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *