thirupathy-azhvar-thirumanjanam

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருகிற 21ம் தேதி கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கி 29ம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி நேற்று காலை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடந்தது. காலை 6 மணியளவில் சுவாமி துயில் எழுப்பப்பட்டு, முக்கிய சேவைகள் நடந்தது. பின்னர் கோயில் வளாகத்தில் உள்ள அனைத்து சன்னதிகளும், விமான கோபுரம், கொடிமரம் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி 6 மணி முதல் 8.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் கஸ்தூரி மஞ்சள், குங்குமம், கிச்சலிக்கட்டை, திரிசூணம் உட்பட பல்வேறு திரவியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட கலவை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, 8.30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *