friday-viradham-mandiram

நம: கமலவாஸின்யை, நாராயண்யை நமோ நமஹ
க்ருஷ்ண ப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோ நமஹ
வைகுண்டே யா மஹாலக்ஷ்மீ: யா லக்ஷ்மீ: க்ஷீரஸாகரே
ஸ்வர்க்க லக்ஷ்மீ ரிந்த்ரகேஹே, ராஜலக்ஷ்மீ: ந்ருபாலயே
க்ருஹலக்ஷ்மீஸ்ச க்ருஹிணாம், கேஹே சக்ருஹதேவதா
இதம் ஸ்தோத்ரம் மஹா புண்யம், த்ரிஸந்த்யம்: ய: படேந் நரஹ
குபேர துல்யஸ் ஸ பவேத் ராஜராஜேஸ்வரோ மஹான்

பொருள்:

தாமரையில் வாசம் புரியும் திருமகளே நமஸ்காரம். நாராயணியாய் திகழ்பவளே, கிருஷ்ணருக்குப் பிரியமுள்ளவளே, மஹாலக்ஷ்மியாய் துலங்குபவளே, வைகுண்டத்தில் மஹாலக்ஷ்மியாகவும், பாற்கடலில் ஸ்வர்க்க லக்ஷ்மியாகவும், தேவேந்திரனின் மாளிகையில் ராஜலக்ஷ்மியாகவும், அன்பான குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் திகழும் தாயே, நமஸ்காரம். முடிந்தால் நாகை மாவட்டம், சீர்காழியில் உள்ள அண்ணன் பெருமாள் (வெங்கடாசலபதிக்கே அண்ணன்!) கோயிலுக்குச் சென்று மஹாலக்ஷ்மி தாயாரை வழிபடுங்கள். அல்லது பக்கத்திலுள்ள வெங்கடாசலபதி கோயிலில் தாயாரை வணங்குங்கள்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *