thirupathy-chutney

திருமலையில் பக்தர்கள் காத்திருப்பு அறைகளில் பொங்கல் மற்றும் உப்புமாவுடன் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சட்னி வழங்கும் நடைமுறையை தேவஸ்தானம் துவக்கியுள்ளது.
திருப்பதி, திருமலைக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, தேவஸ்தானம் 24 மணி நேரமும் அன்னதானம், சிற்றுண்டி, டீ, காபி, பால் , மோர் ஆகியவற்றை வழங்கி வருகிறது.காத்திருப்புஅறைகளிலும், பக்தர்கள்அதிகம் கூடும்முக்கியப் பகுதிகளிலும் , அன்னாதனம், சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல், ரவை , சேமியா உப்புமா உள்ளிட்டவை வழங்கும்போது, அதற்கு இணையாக சட்னியும் வழங்க வேண்டும் என மாதந்தோறும், குறைகேட்பு நிகழ்ச்சியில் பக்தர்கள்தேவஸ்தான அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்து வந்தனர்.இதையேற்று , தேவஸ்தான நிர்வாகம், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், பொங்கல் மற்றும் உப்புமா சிற்றுண்டிகளுடன், வேர்க் கடலை சட்னி வழங்கும் நடைமுறையை துவக்கியுள்ளது.
இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமலை எழுமையானை தரிசிக்க, வார இறுதி நாட்கள் , விடுமுறை நாட்களில், பக்தர்கள்அதிக அளவில் வருவது வழக்கம். தற்போது, தேர்வு முடிந்து கோடை விடுமுறை துவங்கியுள்ளதால், தமிழ் புத்தாண்டு முதல் திருமலைக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.அதனால், இதற்கு முன் தர்ம தரிசனத்தில், 3 மணிமுதல், 4 மணிநேரத்தில் ஏழுமலையானை தரிசித்து வந்த பக்தர்கள், தற்போது, 15 மணிநேரம் காத்திருக்கின்றனர். எனவே தேவஸ்தானம் நிர்வாகம், பக்தர்களின் காத்திருப்பு சிரமத்தை குறைக்க, தர்ம தரிசன பக்தர்களுக்கு விரைவில் நேர ஒதுக்கீடு முறையை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *