2018-03-30-05-55-18

நெய்வேலி வேலுடையான் பட்டு சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி மற்றும் பால் குடம் எடுத்து நேர்த்தி கடன்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி வேலுடையான்பட்டு பகுதியில் உள்ள சுபபிரமணியசாமி கோவிலில் பங்குனி உத்திர விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் இந்த ஆண்டு திருவிழா கடந்த 21ம் தேதி கொடியயேற்றத்துடன் தொடங்கியது இதனையடுத்து சாமிக்கு தினம் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து வந்தது நேற்று முன் தினம் திருக்கல்யாண உற்சவமும் நேற்று இரவு தேர் திருவிழாவும் நடந்து இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெய்வேலி மற்றும் சுற்றிள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி என விதவிதமான காவடி மற்றும் பால் குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நெர்த்தி கடன் செலுத்தினார்கள்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *