2018-03-27-15-42-49

நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர்,மகாமாரியம்மன் கோயிலில் கடந்த 24ம் தேதி கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது. சித்திரை திருவிழா தொடங்கியது முதல் சிறப்பு பூஜை, சுவாமி வீதி உலா என திருவிழா கோலகலமாக நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் பால் குடம்,கரகம்,தீச்சட்டி ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். தொடர்ந்து மதியம் கஞ்சி வார்த்தல்,அன்னதானம் வழங்கல் நகழ்ச்சியும் மாலை பூச்சொரிதலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *