2018-03-27-15-23-19

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழாவின் 5ஆம் நாளில் வெள்விடைப் பெருவிழா காட்சி நிகழ்வு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் சிவபெருமான், கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள் பாலிக்கின்றனர். இந்த கோவிலின் பங்குனி பெருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 5 ஆம் நாளான நேற்றிரவு வெள்விடைப் பெருவிழா காட்சி நிகழ்வு நடைபெற்றது. காமதேனு வாகனத்தில் கபாலீஸ்வரர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வரும் 28ஆம் தேதியும், வெள்ளி விமான உற்சவத்தில், கபாலீஸ்வரர் 63 நாயன்மார்களுடன் காட்சியளிக்கும், அறுபத்து மூவர் விழா மார்ச் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *