2018-01-30-05-36-07

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தை தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைமுன்னிட்டு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 3.45க்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு ரங்கா, ரங்கா கோபுரம் அருகே உள்ள தைத் தேர் மண்டபத்திற்கு 4.30க்கு வந்தடைந்தார். காலை 4.30 முதல் 5.15 வரை ரத ரோஹணம் நடைபெற்றது. பின்னர் ரங்கா, ரங்கா கோபுரம் அருகில் உள்ள அலங்கரிக்கப்பட்ட தை தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய காலை 6 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. ரங்கா ரங்கா என்ற கோஷத்துடன் பக்தர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு உத்திர வீதிகளிலும் வலம் வந்த பின்னர் நிலையை வந்தடைந்தது.
தெப்ப உற்சவம் ….
தெப்ப உற்சவம் பஞ்சபூதங்களில் நீர் ஸ்தலமான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்பம் நடக்கிறது. மாலை 6 மணி அளவில் கோயிலில் உள்ள உற்சவ மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் மரக்கேடயத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சன்னதி வீதி வழியாக வந்து திருவானைக்காவல் ட்ரங்ரோடு மேல் புறம் உள்ள ராமதீர்த்த தெப்ப குளம் வந்து சேர்கின்றனர். அங்கு குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளுகின்றனர். குளத்தில் உள்ள நடுமண்டபத்தை 3 முறை வலம் வந்து நடுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *