2018-01-24-06-46-39

ரத சப்தமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 7 வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா வந்தார். ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று நடந்தது. ரத சப்தமியன்று ஒரே நாளில் 7 வாகனங்களில் உற்சவரான மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி இன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி வீதி உலா வந்தார். அப்போது மாட வீதிகளில் குவிந்திருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோ‌ஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர். 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சே‌ஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், பகல் 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் ஏழுமலையான் பவனி வந்தார். மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனத்திலும், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்திலும் உற்சவர் மலையப்ப சாமி 4 மாட வீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *