சபரிமலையில் இன்றிரவு மாளிகைபுறத்தமன் கோயிலில் குருதி பூஜை, நிறைவடைந்த பிறகு நாளை கோயில் நடை சாத்தப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற வந்த நெய்யபிஷேகம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு மாளிகைபுறத்து கோயிலில் குருதி பூஜை நடக்கிறது. அதன்பின்னர் நாளை முதல் கோயில் நடை சாத்தப்படுகிறது.
நாளை காலை 6.30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் கோவில் நடை அடைத்ததும், திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்படும். இந்தாண்டுக்கான மண்டல மகரவிளக்கு காலத்தில் சபரிமலை கோயிலின் வருமானம் ரூ. 225 கோடியை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply