2017-12-30-15-30-27

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை நவம்பர் 16 -ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி சுவாமி ஐயப்பன் சந்நிதானத்தின் நடை அப்போது திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட நாளில் இருந்து 41 நாள்கள் ஐயப்பன் கோயிலுக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்சாந்தியான ஏ.வி உன்னிகிருஷ்ணன் தலைமையில் பூஜைகள் நடைபெற்றன. தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 முதல் 11.30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெற்றது. ஒரு மணிக்கு சாத்தப்படும் நடை மீண்டும் மாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருந்தது. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலப் பூஜை முடிந்த பின்பு செவ்வாய்க்கிழமை சந்நிதானத்தின் நடை இரவு 10 மணிக்கு சாத்தப்பட்டது. இதையடுத்து, மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் சுவாமி ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது. ஜனவரி 20ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என சபரிமலை ஐயப்பன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *