2017-12-22-13-35-32

காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த 19ம் தேதி நடந்தது. தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள சனிபகவானை வணங்குவதற்காக சனிக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். சனிப்பெயர்ச்சிக்குப் பின் வரும் முதல் சனிக்கிழமை என்பதால் நாளை ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கோயில் நிர்வாகம் செய்து வருகிறது. சனிப்பெயர்ச்சி தினத்தன்று குளத்தின் படிகட்டு, தண்ணீரில் மிதந்த அனைத்து ஆடைகளும் உடனுக்குடன் அகற்றப்பட்டாலும், தண்ணீரின் உள்ளே கிடந்த ஒரு சில ஆடைகள் கடந்த இரு தினங்களாக முழுமையாக அகற்றப்பட்டு, தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்பிறகு, குளத்தில் போர்வெல் மூலம் புதிய தண்ணீர் நிரப்பப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *