2-09-85-443

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.2 கோடியே 9 லட்சத்து 85 ஆயிரத்து 443 மற்றும் தங்க நகைகள் 409 கிராம் 1 கிலோ 275 கிராம் வெள்ளி பக்தர்கள் செலுத்தினர்.
நினைத்தாலே முக்தி தரும் உலக புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கனவார்களும் பவுர்ணமி உள்ளிட்ட கார்த்திகை தீபம் நாட்களில் லட்சக்கணக்கானவர்களும் திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அண்ணாமலையாருக்கு காணிக்கையாக பணம் மற்றும் தங்க நகைள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம் வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்கம் மற்றும் அடி அண்ணாமலையர் கோவில் உள்ளிட்ட 85 க்கும் மேற்பட்ட இடங்களில் கோவில் நிர்வாகம் சார்பில் உண்டியல்கள் வைக்கபட்டு ஒவ்வொரு மாதம் பவுர்ணமி முடிந்தவுடன் எண்ணுவது வழக்கம்
அதன்படி கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி மகா தீபம் 3 ஆம் தேதி மாத பவுர்ணமி முடிவடைந்ததை நிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி தொடங்கிய நேற்று காலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. கோவில் இரண்டாம் பிரகரத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் கோவில் இணை ஆணையார் ஜெகன்நாதன் முன்னிலையில் கோவில் ஊழியர்கள் மற்றும் ஆன்மீக பக்தர் என 100க்கும் மேற்பட்டவர்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் அனைத்தும் கண்காணிப்பு கேமிரா மூலம் கண்காணிக்கபட்டது.
உண்டியல் எண்ணிக்கை முடிவில் ரூ 2 கோடியே 9 லட்சத்து 85 ஆயிரத்து 443 ரூபாய்யாகும், மற்றும் தங்க 409 கிராம். வெள்ளி 1கிலோ 275 கிராம் பக்தர்கள் காணிக்கையான செலுத்தியது கோவில் நிர்வகம் சார்பில் கூறப்படுகிறது. கடந்த ஆண்டைவிட ரூ 35 லட்சத்து 51 ஆயிரத்து 190 அதிகம் என்பது குறிப்பிடதக்கது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *