gurubagavanaga-vittrirukkum-esan

 

நவ கயிலாயத்தில் எந்த  கோவிலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு  இந்த ஆலயத்திற்கு உள்ளது.அது என்ன வென்றால்,சிவபெருமான் ,குருபகவனாக அமர்ந்து அருள்பாலிக்கும் சிறப்பு அம்சமாகும். நவ கயிலயங்களில் ஐந்தாவது இடத்தை பெறுவது முறப்பநாடு. இந்த கோவில் நவக்கிரகத்தில் குருபகவான் ஆட்சி பெற்று ஏழாவது இடத்தை பெறுகிறது.

வியாழபகவனாய்  வீற்றிருக்கும்  அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ வயல்வெளிகளும் நிறைந்த இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது. இந்த கோவில் தாமிரபரணி  ஆற்றின்  மேற்கு கரையில் அமைத்துள்ளன. இங்கு கயிலாசநாதாரகவும்,அம்பாள் சிவகாமியாகவும் அருள் பாலிக்கிறார்கள்.

புண்ணிய நதியாம் தாமிரபரணி ஆறு,வடக்கில் இருந்து தெற்கு நோக்கி செல்கிறது. இதனால் இந்த இடத்திற்கு தட்சிண கங்கை என்று பெயர். இங்கு நீராடினால் காசியில் நீராடுவதற்கு சமம் ஆகும். அது மட்டுமல்லாது, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்கள் இக்கோவிலில் உள்ளது. இதனால்  இந்தியாவிலேயே மிக சிறப்பு மிக்க இடமாகும்.

முருகப்பெருமானால் வதம் செய்யப்பட்ட சூரபதுமனின் வழியில் வந்த அரக்கன் ஒருவன்  இந்த பகுதயில் வசித்து வந்த முனிவர்களுக்கு கடுமையான தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.அத்துன்பத்தை தாங்க முடியாமல் அனைவரும் கயிலாயத்தில் ஈசனிடம் சென்று  முறைப்படி முறையிட்டனர். சிவபெருமான் உள்ளம் உருகி முனிவர்களுக்கு அருள்பாலித்தார்.முறைப்படி முறையிட்ட காரணத்தால் தான் இத்தலம் முறைப்படு நாடு என பெயர் பெற்றது. நாளடைவில் முறப்பநாடு என்றானது.

இக்கோவிலில் கருவறை சுவர் அருகே பஞ்ச லிங்கமும்,தென்மேற்கு மூலையில்  கன்னி விநாயகரும் உள்ளனர்.வடமேற்கில் சுப்பிரமணிய சுவாமி,வள்ளி- தெய்வானையுடன் காட்சியளிக்கிறார்.,இதனுடன் சனிஸ்வரர்,சண்டேஸ்வரர், கால பைரவர் சிலை உள்ளது. இங்கு பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் இருக்கின்றனர். வாகனம் நாயுடன் காட்சி தரும் பைரவர் கால பைரவர் என்றும்,வாகனம் இல்லாமல் காட்சி தரும் பைரவர் வீரபைரவர்  என அழைக்கப்படுகின்றனர்.

இங்குள்ள கயிலாசநாதர் குரு அம்சமாக இருப்பதால் ,மஞ்சள் வஸ்திரம் சாத்தி,கொண்டைகடலை நைவேத்தியம் செய்யப்படுகிறது. சிவராத்திரி,குருப்பெயர்ச்சி,திருக்கார்த்திகை,ஆடி அமாவாசை,தை அமாவாசை  போன்ற நாட்களில் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுகிறது.

இங்குள்ள இறைவனையும்,அம்பாளையும் வழிப்பட்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடந்தேறும். உடல் ஆரோக்கியம் கிட்டும்,நல்ல குடும்பம் அமையும் என்பது பக்தர்களின் ஐதிகம். இத்தலத்தில் உள்ள இறைவனை வழிப்பட்டால்  திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள குருபகவானை(சிவபெருமானை) வழிப்பட்டதற்கு  சமம் ஆகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *