2017-10-06-13-04-40

பண்ருட்டி திருவதிகை ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயிலில் ஏகதின பிரம்மோற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவதிகையில் ஹேமாம்புஜவல்லி தாயார் சமேத ஸ்ரீசரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வியாழக்கிழமை ஏகதின பிரம்மோத்ஸவ விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு சுப்ரபாரதம், 6 மணிக்கு தோமாலை சேவை, தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் அம்ச வாகனத்திலும், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் யானை வாகன சேவையும், 4 மணிக்கு சூர்ணோத்ஸவம், 5 மணிக்கு குதிரை வாகன சேவையில் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாலை திருத்தேர் புறப்பாடு, தீர்த்தவாரியும் 7.30 மணிக்கு கொடியிறக்கம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டுஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் ஆணையர் பா.ஜெயசித்ரா, செயல் அலுவலர் க.நாகராஜன், சன்னதி அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார், ஸ்ரீதர் பட்டாச்சாரியார் ஆகியோர் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *