2017-09-23-12-54-26

தமிழகத்தின் திருப்பதி என்று அழைக்கப்படும் கும்பகோணம் உப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் புரட்டாசி பெருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதம் தொடங்கியதையடுத்து, புரட்டாசி முதல் சனிக்கிழமை உப்பிலியப்பன் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்களில் ஒவ்வொரு நாளின் மாலை நேரத்திலும் வெள்ளிப்பல்லக்கு, யானை வாகனம், கருட வாகனம் என பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாட்டு நிகழ்ச்சியும் ஊர்வலமும் நடக்கும். சுவாமி புறப்பாட்டின் மிக முக்கிய நிகழ்ச்சியே ஒன்பதாவது நாள் தான். அந்த நாளில் சுவாமி கோ ரதத்தில் ஏறி ஊர்வலமாக பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். அப்போது ஊர்வலத்தில் சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *