2017-09-21-15-41-44

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா புதன் கிழமை மாலை காப்புக் கட்டுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து திருக்கோயிலின் அம்மன் சந்நிதியில் சிறப்பு அலங்காரப் பந்தல் அமைக்கப்பட்டு அங்கு பர்வதவர்த்தினி அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையொட்டி முதல் நாளில் பர்வதவர்த்தினி அம்மன் அன்னபூரணி திருக்கோலத்தில் காட்சியளித்தார். அம்மனுக்கு அருகில் நூற்றுக்கணக்கான பொம்மைகளைக் கொண்டு நவராத்திரி கொலு திருக்கோயிலின் சார்பில் அமைக்கப்பட்டிருந்தது. கோயில்கள், பக்தர்களின் இல்லங்களில் கொலுபொம்மைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்துவர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *