2017-06-05-15-42-37

ராமேஸ்வரம் கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு ஸ்படிகலிங்க தரிசனமும், 6 மணிக்கு கால பூஜையும், 8 மணிக்கு ஸ்ரீராமர் வீதி உலாவும் நடைபெற்றது.பிற்பகல் 12 மணிக்கு சுவாமி சன்னதியில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெற்றது.

கோயில் குருக்கள் கையில் சிவலிங்கத்தை ஏந்தி அருள்கொண்டு ஆடியபடியே முதல் பிரகாரத்தில் வலம் வந்து, சுவாமி சன்னதியில் சிவலிங்கத்தை வழங்கினார். தொடர்ந்து சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் ரத வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *