2017-05-04-16-50-12

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும், பக்தர்கள் ரூ.79.25 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். கோடை விடுமுறையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விட்டதையொட்டி வெளிமாநில பக்தர்கள் உட்பட தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் பக்தர்கள் ரூ.79.25 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியுள்ளனர். இது கடந்தாண்டை விட ரூ.1.35 கோடி ரூபாய் அதிகம். இந்த மாதம் கோடைவிடுமுறை என்பதால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *