2017-05-02-07-18-40

செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் சாலையில் உள்ள ஈச்சங்கரணை மகா பைரவர் ருத்ராலய பிரம்மோற்சவம் விழா தொடங்கியது.
காலையில் கணபதி ஹோமம், விநாயகர் உற்சவத்தைத் தொடர்ந்து பைரவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அங்குரார்ப்பணம், பைரவர் ஹோமத்துடன் கொடியேற்றமும், புதன்கிழமை காலை அஷ்டமி தின சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.அன்று மாலை பைரவருக்கு வெள்ளிக் கவசம் அணிவித்தலும், இரவு அன்னவாகன வீதியுலாவும் நடைபெறுகிறது. 3-ஆம் நாளான வியாழக்கிழமை மகா பைரவர் ஹோமம், அன்னதானம், நந்தி வாகன வீதி உலாவும், 6ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை பைரவருக்கு சந்தன காப்பும், ஸ்ரீ ஆனந்த மகா பைரவருக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது.
8ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை தேர்த் திருவிழாவும், 9ஆம் நாள் மாலை படிபூஜை, இரவு யானை வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது.
மே 11-ஆம் தேதி வியாழக்கிழமை காலை தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தினமும் பட்டிமன்றம், இன்னிசை விழா, பரத நாட்டியம், கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *