Tag: Slogam

  • Vara Lakshmi Slogam

    திருமாலின் துணைவியான மகாலட்சுமி, நமக்கு வரங்களை அள்ளித் தருவதால் 'வரலட்சுமி' என பெயர் பெற்றாள். செல்வத்துக்கு அதிபதியான இவளை, நம் வீட்டுக்கு வரவேற்கும் நன்னாள் இன்று.

    பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் தருபவள் அவளே. அவளே சீதையாக, ருக்மணியாக பூமிக்கு வந்து வாழ்ந்து காட்டினாள். சீதையாகப் பிறந்த போது தன் கணவருடன் காட்டிற்குச் சென்றாள். கணவனே கண் கண்ட தெய்வம் என ராமரைப் பிரியாமல் வாழ்ந்தாள். திருப்பதி ஏழுமலையான் மார்பில் தொங்கும் ஆரத்திற்கு லட்சுமி ஆரம் என்பர். லட்சுமி தாயார் அவரது இதயத்தில் குடியிருப்பதாக ஐதீகம்.

    லட்சுமி தாயார் திருமாலின் மார்பை விட்டு பிரியாமல் இருப்பது போல சுமங்கலிகளும் தங்கள் கணவரின் இதயத்தில் இடம் பிடித்து அவர்களோடு ஒற்றுமையாக வாழ வரலட்சுமி நோன்பை மேற்கொள்கின்றனர்.இந்த நல்ல நாளில் அனைவருக்கும் சுமங்கலி பாக்கியம் நிலைக்க லட்சுமி தாயாரை வழிபடுவோம்.

    பாக்யலக்ஷ்மி நமஸ்தேஸ்து ஸௌமாங்
    கல்ய விவர்த்தினி
    பாக்யம் தேஹி ச்ரியம் தேஹி, ஸர்வகா
    மாம்ச்ச தேஹிமே
    வரலக்ஷ்மி நமஸ்தேஸ்து விஷ்ணு
    வக்ஷஸ்தலஸ்த்திதே
    வரம் தேஹி ச்ரியம் தேஹி ஸர்வகாமாம்ச்
    சதேஹிமே

  • Prachanaigal Theera Slogam

    உங்கள் பிரச்சினைகள் தீர  ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டு தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி வர வேண்டும். அப்படி சொல்லி வர அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக மறைந்து மன நிம்மதியை ஏற்படுத்தும். 

    ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் ஸ்லோகம்
    உத்ய தாதித்ய ஸங்காசம் உதார புஜ விக்ரமம் 
    க்ந்த்தர்ப கோடி லாவண்யம் ஸர்வ வித்யா விசாரதம் 
    ஸ்ரீராம ஹ்ருதயா/நந்தம் பக்த கல்ப மஹிருஹம் 
     அபயம் வரதம் தோர்ப்யாம் கலயே மாருதாத்மஜம் 

    ஸ்ரீ ராம ஆஞ்சநேயர் கிருபை உண்டாக இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். நாம் ஆஞ்சநேயரை மனம் உருகி வேண்டிக் கொண்டால் நம் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக மறைந்து விடும்.

  • Thunbangalai Pookum Perumal Slogam

    இந்த துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம்
    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்

     ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் : 

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.