Tag: Slogam

  • Krishnar slogam

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு செப்டம்பர் 6 ஆம் தேதி வரும் திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அத்தகைய சிறப்புமிக்க இத்திருநாளில் கிருஷ்ணருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை பாராயணம் செய்து கிருஷ்ண பரமாத்மாவை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கப்பெறும்.

    ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
    நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
    நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
    ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்
    ஆதிசங்கரரின் க்ருஷ்ணாஷ்டகம்

    எல்லா மக்களுக்கும் ஆனந்தத்தை அளிப்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம். தாமரை போன்ற இதயத்தில் மோகத்தை உண்டாக்குப வரே, சூரியனைப் போல பிரகாசிப்பவரே, பக்தர்கள் விரும்பியதை உடனே அளிப்பவரே, கடைக்கண்ணால் எங்களைக் கடைத்தேற்று பவரே, இனிமை யாக வேணுகானம் செய்பவரே, கிருஷ்ணா நமஸ்காரம்.

  • Perumal Slogam

    நன்மைகளை பொழியும் பெருமாள் ஸ்லோகம்

    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்
     ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் :

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.

  • Maha Ganapathy Slogam

    ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய மஹா கணபதி ஸ்லோகம்

    அகிஞ்ச நார்த்தி மார்ஜநம்
    சிரந்தநோக்தி பாஜநம்
    புராரி பூர்வ நந்தனம்
    ஸுராரி கர்வ சர்வணம்
    ப்ரபஞ்ச நாச பீஷணம்
    தனஞ்ஜயாதி பூஷணம்
    கபோலதாந வாரணம்
    பஜே புராண வாரணம் !

    பொருள்  :

    தம்மைத் தியானிப்பவர்களின் வறுமை, துன்பம் போன்றவற்றை நாசம் செய்கிறவரும், வேத வாக்கியங்களால் போற்றப் படுபவரும், மகிமை பொருந்தியவரும், திரிபுர சம்ஹாரம் செய்தருளிய பரமேசுவரனுடைய மூத்த குமாரரும், தேவர்களின் விரோதிகளான அசுரர்களின் கர்வத்தை அடக்குபவரும், லோகங்களை நாசம் செய்கிற யமதர்மனுக்குப் பயத்தைக் கொடுப்பவரும், அர்ஜுனன் போன்ற வில்லில் வல்லவர்களான வீரர்களாலும் முதலில் வணங்கிப் போற்றப்படுபவரும், கபோலத்தில் ஏற்படும் மத ஜலத்தைப் பெருக விடுபவரும், புராதன கஜ சொரூபியுமான மகா கணபதியைத் தியானிக்கிறேன்.

  • Iyappan Slogam

    மாலை அணிபவர்கள் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்

    இதம் ஆஜ்யம், கமமண்டல
    கால மகரகால பரஹமசியவ்ர
    தேன ஹரிஹர புத்ர தர்ம
    சாஸ்த்ர பிமஷதர்த்தம் பூரயாகி

    பொருள்:

    ஐயப்ப சுவாமியே! மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லும் சுவாமிமார்களான நாங்கள் அறிந்தும் அறியாமலும் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, பதினெட்டுப் படிகளையும் ஏறச்செய்து, நல்ல தரிசனத்தை அளிக்க வேண்டும்.

  • Hayagreevar Slogam

    'கல்வி கடவுள்' என்ற சிறப்பை பெற்ற வர் ஹயக்ரீவர். பிரம்மனை படைத்து அவருக்கு வேதங் களை உபதேசித்தவரே ஹயக்ரீவர்தான் என்று வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    உபநிஷத்தில் ஹயக்ரீவர் பற்றியே அதிகம் சொல்லப்பட்டுள்ளது. சரஸ்வதிக்கே குரு என்ற சிறப்பு ஹயக் ரீவருக்கு உண்டு. வைணவ ஆச்சார்யார்களில் ஒருவரும், சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த வருமான வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் அருளால் சகல கலைகளிலும் சிறந்து விளங்கினார்.

    ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வ  வித்யானாம்

    ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம்

    ஹயக்ரீவ முபாஸ்மஹே

    என்று பள்ளிகளில் தினசரியும் ஸ்லோகம் கூறி ஹயக்ரீவ மூர்த்தியை வழிபட்டு அன்றைய தினத்தை தொடங்குகின்றனர். கல்விக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. அந்தக் கல்விக்கு அதிபதியாக நாம் அனைவரும் வணங்குவது சரஸ்வதி தேவியே. ஆனால் அந்த சரஸ்வதிக்கு ஒரு குரு உண்டு என எத்தனை பேருக்குத் தெரியும். அவரே ஞானகுருவான ஹயக்ரீவர். இந்த அவதாரம் ஆனது தசவதாரத்தில் இணை யவில்லை அம்பிகையின் நாமங்களை உலகுக்கு அகத்தியர் வாயிலாக லலிதா சஹஸ்ரநாமம் ஆக வெளிப்படுத்தியவர் ஹயக்ரீவரே.

    அலையாழி அறிதுயிலும் மாயவன் விஷ்ணுவின் பல்வேறு அவதாரங்களில் மிக முக்கியமானது, சிறப்பானது, பிரசித் தி பெற்றது மனித உடலும், குதிரை முகமு ம் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தியாகும். சொத்து, பணம், நகை, அஷ்ட ஐஸ்வர்யங் கள் எல்லாம் நிலையற்றவை. இடம் விட்டு இடம் செல்லும். இதனால்தான், ‘செல்வம்’ என்று அழைக்கப்படுவதாக சொல்வார்கள்.

    ஆனால், ஞானம் எனும் கல்விச் செல்வத் துக்கு அழிவே கிடையாது. மேலும் காசு, பணம், நகை, நிலம் போன்ற செல்வங்கள் கொடுக்கக் கொடுக்க குறையக்கூடியது. கல்விச் செல்வம் நேர் மாறானது.

    ஹயக்ரீவர், எப்போதும் பளீர் வெள்ளை நிறத்தில் இருப்பார். மகாபாரதம், தேவிபாகவதம், ஹயக்ரீவ கல்பம் போன்ற இதிகாச புராண நூல்கள் ஹயக்ரீவரின் பெருமைகளை பேசுகின்றன. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வந்தபோது ஹயக்ரீவரை வண ங்கினார் என்று வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

     

  • Vinayakar Slogam

    வர கணபதி

    ஸிந்தூராபம் இபாநநம் த்ரிநயநம்
    ஹஸ்தே ச பாஸங்குஸௌ
    பிப்ராணம் மதுமத் கபாலம் அநிஸம்
    ஸாத்விந்து மௌலிம் பஜே
    புஷ்ட்யாஸ்லிஷ்டதநும் த்வஜாக்ர கரயா
    பத்மோல்லஸத்தஸ்தயா
    தத்யோந்யாஹித பாணிமாத்தவ வஸூமத்
    பாத்ரோலஸத் புஷ்கரம்

    செந்நிறத் திருமேனி, மூன்று கண்கள், பாசம், அங்குசம், தேன் கிண்ணம், கொடி உள்ள நான்கு கரங்கள், ஆகியவற்றுடன், சந்த்ரனைத் திருமுடியில் தரித்த வர கணபதியைத் துதிக்கிறேன். அவர் கொடியோடு கூடிய தாமரை உள்ள கரத்தால், தம் தேவியானவளைத்  தழுவி நிற்பவர். செல்வம் நிரம்பிய மின்னலென ஒளிரும் பாத்திரத்தைத் துதிக்கையில்  ஏந்தியவர்.

    த்ரயாக்ஷர கணபதி

    கஜேந்த்ரவதநம் ஸாக்ஷாச் சலாகர்ண ஸூசாமரம்
    ஹேமவர்ணம் சதுர்பாஹூம் பாஸாங்குஸதரம் வரம்
    ஸ்வதந்தம் தக்ஷிணே ஹஸ்தே ஸவ்யே த்வாம்ரபலம் கதா
    புஷ்கரே மோதகஞ்சைவ தாரயந்தம் அநுஸ்மரேத்

    யானை முகத்துடன், அசையும் காதுகளில் சாமரம் என்னும் அணிகள் மின்னும் பொன்னிற மேனியை உடையவரும், நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம்,   தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தரித்தவரும், துதிக்கையில் மோதகம் தாங்கியருளுபவருமான  த்ர்யாக்ஷர கணபதியைத் துதிக்கிறேன்.

    க்ஷிப்ர-ப்ரஸாத கணபதி

    த்ருதபாஸாங்குச கல்பலதாஸ் வரதஸ்ச பீஜபூரயுத:
    ஸஸிஸகல கலிதமௌளி: த்ரிலோசநோருணஸ்ச கஜவதந:
    பாஸூர பூஷணதீப்தோ ப்ருஹதுதர: பத்ம விஷ்டரோல்லஸித:
    விக்நபயோதரபவந: கரத்ருத கமலஸ்ஸதாஸ்து பூத்யை

    பாசம், அங்குசம், கற்பகக் கொடி, வரத முத்திரை, தாமரை, தர்ப்பை தாங்கிய ஆறு திருக்கரங்களுடன், துதிக்கையில் மாதுளையைத் தரித்தவரும்,, சந்த்ரன் ஒளி வீசும் திருமுடி(மௌலி)யுடன் கூடியவரும் , முக்கண்ணரும், சிவந்த மேனியரும், ஆனை முகத்தவரும், ஒளிரும் ஆபரணங்கள் இலங்கும் பெருவயிறு  உடையவரும், பத்மாசனத்தில் இருப்பவரும், மேகத்தைத் தாக்கும் காற்றைப் போன்றவரும், தாமரையைக் கையில் தரித்தவரும், (பிரார்த்தித்த) உடனே வந்து செல்வங்களருளும் க்ஷிப்ர ப்ரஸாத கணபதியைத் துதிக்கிறேன்.

    உத்தண்ட கணபதி

    கல்ஹாராம்புஜ பீஜபூரக கதா
    தந்தேக்ஷூ பாணைஸ்ஸதா
    பிப்ராணோமணி கும்பஸாலி கலஸோ
    பாஸஞ்ச சக்ராந்விதம்
    கௌராங்க்யா ருசிராரவிந்த கரயா
    தேவ்யாஸ் ஸதாஸம்யுத:
    ஸோணாங்கஸ் ஸூபமாதநோது பஜதாம்
    உத்தண்ட விக்நேஸ்வர:

    நீலோத்பலம், தாமரை, மாதுளை, கதை, தந்தம், கரும்பு, வில், நெற்கதிர், கலசம், பாசம், அம்பு ஆகியவற்றைக் கரங்களில் தரித்தவரும், கைகளில், தாமரை மலரைத் தாங்கி நிற்கும் பச்சை வண்ண தேவியுடன் எப்போதும் இருப்பவரும், மங்களங்கள் அருளுபவருமான  உத்தண்ட கணபதியைத் துதிக்கிறேன்.

    திரிமுக கணபதி

    ஸ்ரீமத்தீக்ஷ்ண ஸிகாங்குஸாக்ஷவரதாம்
    தக்ஷே ததாந: கரை:
    பாஸாம்ருத பூர்ணகும்ப-மபயம்
    வாமே ததாநோ முதா
    பீடே ஸ்வர்ணமயாரவிந்த விலஸத்
    ஸத்கர்ணிகா பாஸூரே
    ஆஸீநஸ்த்ரிமுக: பலாஸருசிரோ
    நாகாநந: பாதுந:

    கூர்மையான அங்குசம், அக்கமாலை, வரதமுத்திரை ஆகியவை மூன்று வலக்கரங்களில் ஒளிவீச,  பாசம், அமுத கலசம், அபயம் இடக்கரங்களில் மின்ன, அழகான கர்ணிகையுடன் ஒளி வீசும் தங்க மயமான தாமரைப்பீடத்துடன் கூடியவரான‌, செந்நிறத் திருமேனியும், மூன்று முகங்களும் உடையவரான மும்முக கணபதி என்னைக் காப்பாற்றுவராக.

    ஸிம்ஹ கணபதி

    வீணாம் கல்பலதாம் அரிஞ்ச வரதம்
    தக்ஷே விதத்தே கரை:
    வாமே தாமரஸஞ்ச ரத்நகலசம்
    ஸந்மஞ்ஜரீ சாபயம்
    ஸூண்டாதண்டலஸந் ம்ருகேந்த்ரவதந:
    ஸங்கேந்துகௌர: ஸூப:
    தீவ்யத் ரத்ந நிபாம்ஸூகோ கணபதி:
    பாயாதபாயாத் ஸந:

    வீணை, கற்பகக்கொடி, ஸிம்ஹம், வரதம் ஆகியவை வலக்கரங்களிலும், தாமரை, ரத்ந கலசம், மலர்க்கொத்து, அபய முத்திரை ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, தடி போன்ற துதிக்கையுடன் விளங்குகின்ற ம்ருகேந்த்ர முகம் கொண்ட, சங்கு போன்ற (வெண்ணிறமுடைய) சந்த்ரனைத் தரித்த, உயர்வான ரத்நம் போன்ற ப்ரகாசமான ஆடையை அணிந்தவரான‌ ஸிம்ஹ கணபதியை முறையோடு எப்போதும் துதிக்கிறேன்.

    துர்கா கணபதி

    தப்தகாஞ்சந ஸங்காஸஸ்ச
    அஷ்டஹஸ்தோ மஹத்தநு:
    தீப்தாங்குஸம் ஸரஞ்சாக்ஷம்
    தந்தம் தக்ஷேவஹந் கரை:
    வாமே பாஸம் கார்முகஞ்சலதாம்
    ஜம்பூத்யதத் கரை:
    ரக்தாம்ஸூகஸ்ஸதா பூயாத்
    துர்கா கணபதிர் முதே

    உருக்கிய  பொன் போன்ற திருமேனியும், எட்டு திருக்கரங்களுடன் பெரிய உருவமும் கொண்டு,  ஜ்வலிக்கின்ற அங்குசத்தையும், அம்பு, அக்ஷமாலை, தந்தம் ஆகியவற்றை வலக்கரங்களிலும், பாசம், வளைந்த வில், கற்பகக் கொடி, நாவற்பழம் ஆகியவற்றை இடக்கரங்களிலும் ஏந்திய செந்நிற ஆடை உடுத்தியுள்ள துர்கா கணபதியைத் துதிக்கிறேன்.

    ஸங்கடஹர கணபதி

    பாலார்காருண காந்திர் வாமே பாலாம் வஹந் நங்கே
    லஸதிந்தீவர ஹஸ்தாம் கௌராங்கீம் ரத்ந ஸோபாட்யாம்
    தக்ஷேSங்குஸ வரதாநம் வாமே பாஸஞ்ச பாயஸ பாத்ரம்
    நீலாம்ஸூகலஸமாந: பீடே பத்மாருணே திஷ்டந்
    ஸங்கடஹரண: பாயாத் ஸங்கடபூகாத் கஜாநநோ நித்யம்

    பால சூர்யன் போன்ற நிறத்துடன் கூடியவராக, நீல மலரைத் தாங்கியுள்ள பச்சை மேனியளான தேவி இடது தொடையில் அமர்ந்திருக்க,  வரதம், அங்குசம் ஆகியவை வலக்கரங்களிலும்,  பாசம், பாயஸ பாத்ரம் ஆகியவை இடக்கரங்களிலும் தாங்கி, நீல நிற ஆடை அணிந்து, தாமரைப் பீடத்தில் நின்ற திருக்கோலத்துடன் கூடியவராகக் காட்சி தந்து, ஸங்கடத்தின் போது எல்கள் தொடர்ந்து பெற்றிட நமது ஆன்மீக தகவல்கள் குழுவில் இனையுங்கள் . குழுவில் இனையப்போதும் தோன்றி அருளும் யானைமுகக் கடவுளைத் துதிக்கவும்.

     

  • Vinayakar slogam

    பால கணபதி
    கரஸ்த கதலீ சூத பநஸேக்ஷூக மோதகம்
    பால ஸூர்ய ப்ரபாகாரம் வந்தேஹம் பாலகணபதிம்

    தனது துதிக்கையோடு சேர்ந்த ஐந்து கரங்களில்,முறையே, மா, வாழை, கரும்பு, பலா, மோதகம் ஆகியவற்றைத் தாங்கியவரும், இளஞ்சூர்ய நிறத் திருமேனியை உடையவருமான, பால கணபதியை வந்தனம் செய்கிறேன்.

    பக்த கணபதி

    நாளிகேராம்ர கதலீ குளபாயஸ தாரிணம்
    ஸரச்சந்த்ராப வபுஷம் பஜே பக்த கணாதிபம்   

    தேங்காய், மாம்பழம், வாழைப்பழம், வெல்லத்தாலான பாயஸம் நிறைந்த கலசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், குளிர் காலத்தில் மிக வெண்மையாக ஒளிரும் நிலவை விஞ்சும் வெண்ணிறத் திருமேனியை உடையவருமான  பக்த கணபதியைத் துதிக்கிறேன்.

    ஸக்தி கணபதி

    ஆலிங்க்ய தேவீம் ஹரிதாம் நிஷண்ணம் பரஸ்பராஸ்லிஷ்ட கடெளநிவேஸ்ய
    ஸந்த்யாருணம் பாஸஸ்ருணிம் வஹந்தம் பயாபஹம் ஸக்தி கணேஸமீடே

    பச்சை நிறத்தவளான தேவியைப் பரஸ்பரம் ஆலிங்கனம் செய்த திருக்கோலத்துடன், மாலை நேரச் சூரியனின் இளமஞ்சள் நிறத் திருமேனியை உடையவரும், திருக்கரங்களில் பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தாங்கியவரும், (பக்தர்களின்) அச்சத்தைப் போக்குபவருமான ஸக்தி கணபதியை வணங்குகிறேன்.

    ஸித்தி கணபதி

    பக்வ சூத பலகல்ப மஞ்ஜரீ மிக்ஷூ தண்ட திலமோதகைஸ்ஸஹ
    உத்வஹத் பரஸூஹஸ்த தே நம: ஸ்ரீ ஸம்ருத்தியுத தேவ பிங்கல

    மாம்பழம், மலர்க்கொத்து, கரும்புத் துண்டு, எள்-கொழுக்கட்டை, பரசு ஆகியவற்றைக் கரங்களில் தாங்கிய, பசும்பொன் நிறத் திருமேனியை உடைய ஸ்ரீ ஸம்ருத்தி என்ற தேவியுடன் வீற்றிருக்கும் ஸித்தி கணபதியைத் துதிக்கிறேன்.

    உச்சிஷ்ட கணபதி

    நீலாப்ஜம் தாடிமீ வீணா ஸாலீ குஞ்ஜாக்ஷ ஸூத்ரகம்
    தததுச்சிஷ்ட நாமாயம் கணேஷ: பாது மோக்ஷத:

    சதுர்புஜம் ரக்ததநும் த்ரிநேத்ரம் பாஸாங்குசம் மோதகபாத்ர தந்தகம்
    கரை: ததாநம் ஸரஸீருஹஸ்தம் உந்மத்த-முச்சிஷ்ட கணேசமீடே

    நீலோற்பலம், மாதுளை, வீணை, நெற்கதிர், ருத்ராக்ஷமாலை இவற்றைத் தரித்தவரும், முத்தியளித்துக் காப்பவருமான உச்சிஷ்ட கணபதியின் பாதம் பணிகிறேன்.

    நான்கு  கரங்களை உடையவராகவும், அவற்றில் பாசம், அங்குசம், மோதக பாத்ரம், தந்தம் இவற்றைத் தரித்திருப்பவராகவும், செந்நிறமானத் திருமேனியும், முக்கண்ணும் உடையவராகவும், செந்தாமரைப் பூவிலே எழுந்தருளி இருப்பவராகவும், உந்மத்தராகவும் உள்ள உச்சிஷ்ட கணபதியை த்யானிக்கிறேன்.

    க்ஷிப்ர கணபதி

    தந்த கல்ப லதாபாஸ ரத்நகும்பாங்க குஸோஜ்வலம்
    பந்தூக கமநீயாபம் த்யாயேத் க்ஷிப்ரகணாதிபம்

    தந்தம், கற்பகக் கொடி,  பாசம், துதிக்கையில் இரத்தினத்தால் இழைத்த பொற்குடம், அங்குசம் இவற்றுடன், செம்பருத்தி மலர் நிறத்தில் பிரகாசமான திருமேனியை உடைய க்ஷிப்ரகணபதியைத் தியானிக்கிறேன்.

    விக்ந ராஜ (விஜய) கணபதி

    பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
    விக்நம் நிஹந்து நஸ்ஸர்வம் ரக்தவர்ணோ விநாயக:

    பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிக வாகனத்தில் அமர்ந்து எல்லா இடர்களையும் களைபவராய் எழுந்தருளும், செவ்வண்ண மேனியராம் விஜய கணபதியைத் துதிக்கிறேன்.

    ஸ்ருஷ்டி கணபதி

    பாஸாங்குஸஸ்வதந் தாம்ர பலவாநாகுவாஹந:
    விக்நம் நிஹந்து நஸ்ஸோண: ஸ்ருஷ்டிதக்ஷோ விநாயக:

    பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றுடன், மூஷிகத்தை வாகனமாக உடையவரும்,  , அனைத்து தடைகளையும் நீக்குபவருமான‌ஸ்ருஷ்டி கணபதியைத் தியானிக்கிறேன்.

    ருணமோசந கணபதி

    பாஸாங்குஸௌ  தந்த ஜம்பூ ததாந ஸ்படிகப்ரப:
    ரக்தாம்ஸூகோ கணபதிர் முதேஸ்யாத் ருணமோசக:
    ஸிந்தூரவர்ணம் த்விபுஜம் கணேஸம் லம்போதரம் பத்மதலே நிவிஷ்டம்
    ப்ரஹ்மாதி தேவை: பரிஸேவ்யமாநம் ஸித்தைர்யுதம்தம் ப்ரணமாமி தேவம்

    பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவை தாங்கியவரும் வினைகளகற்றுபவரும் ஸ்படிக நிறத் திருமேனியில் ரக்த வண்ண ஆடை தரித்தவருமான  ருணமோசன கணபதியைத் துதிக்கிறேன். செந்நிறம், இரண்டு கரங்கள், பெரிய  திருவயிறு, ஆகியவற்றை உடையவரும்,  பத்மாஸநத்தில் அமர்ந்து, ப்ரஹ்மாதி தேவர்களால் ஸேவிக்கப் பெறுபவரும், சித்தர்களால் சூழப்பட்டவருமான தேவனை (விநாயகரை) நமஸ்கரிக்கின்றேன்.

    டுண்டி கணபதி

    அக்ஷமாலாம் குடாரஞ்ச ரத்நபாத்ரம் ஸ்வதந்தகம்
    தத்தேகரைர் விக்நராஜோ டுண்டிநாம முதேஸ்துந:

    ருத்ராக்ஷமாலை, கோடரி, ரத்தின பாத்திரம், தந்தம் ஆகியவை தாங்கியவரும் தடைகளகற்றுபவருமான டுண்டி விநாயகரைத் துதிக்கிறேன்.

     

  • Narashimmar Slogam

    கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு, செல்வம் பெருகிட நரசிம்மர் ஸ்லோகம்!

    தேவதா கார்ய ஸித்யர்த்தம்
    ஸபாஸ்தம்ப ஸ்முத்பவம்!
     ஸ்ரீ நரசிம்ஹம், மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!

    லஷ்மியாலிங்கித வாமாங்கம்
     பக்தானாம், வரதாயகம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    ஆந்த்ர மாலாதரம் சங்க,

     சக்ராப்ஜாயுததாரினம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    ஸ்மரணாத் ஸர்வபாபக்னம்

     கத்ரூஜ விஷ நாசனம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    ஸிம்ஹ நாதேன மஹதா

     திக்தந்தி பய நாஸனம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    ப்ரஹ்லாத வரதம் ஸ்ரீஸம்

    தைத்யேஸ்வர விதாரணம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    க்ரூரக்ரஹை பீடிதானாம்!

     பக்தானாமப்யப்ரதம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
    நமாமி ருண முக்தயே!!
    வேத வேதாந்த யக்ஞேஸம்

     ப்ரஸ்மருத்ராதி வந்திதம்!
     ஸ்ரீ நரசிம்ஹம் மஹாவீரம்,
     நமாமி ருண முக்தயே!!
    யஇதம் படதே நித்யம்

    ருணமோசன ஸம்சஞிதம்!
    அந்ருணீஜாயதே ஸத்ய :
    தனம் ஸீக்ரமவாப்னூயாத்!!

    இந்த ஸ்தோத்திரத்தை தினமும் மனமுருகி படிப்பவருக்கு எவ்வளவு பெரிய கடனும் விரைவில் நீங்கிவிடும். அதோடு நியாயமான முறையில் சகல செல்வங்களும் வந்து சேரும்.
     

  • thunbangal pokkumperuma slogam

    இந்த துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

    துன்பங்களை போக்கும் பெருமாள் ஸ்லோகம்
    ஸ்ரீய காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
    ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
    ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித வக்ஷஸம்

     ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே !

    பொதுப்பொருள் : 

    திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

    இத்துதியால் ஏழுமலையானைப் பாடி வணங்க, ஏழ்மை விலகி, சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். தவிர புதன், சனி கிரக பாதிப்புகளும் விலகும்.
     

  • Lakshmi narashimmar slogam

    அணைத்து விதமான கஷ்டங்கள் விலக மாலை வேளையில் உச்சரிக்க வேண்டிய லட்சுமி நரசிம்மர் ஸ்லோகம்

    ஓம் நமோ நாரஸிம்ஹாய
    வஜ்ர தம்ஷ்ராய வஜ்ரிணே
    வஜ்ர தேஹாய நகாய ச 

    மாலை வேளையில் இம்மந்திரத்தை 18 தடவைகள் உச்சாடனம் செய்து ஆரம்பிக்க வேண்டும்.ஒரு சுவாதி நட்சத்திரத்தன்று மாலையில் பழங்கள், புஷ்பங்கள், தேங்காய், பழம், பசும்நெய், வஸ்திரம் ஆகியவற்றை சமர்ப்பித்து அர்ச்சனை ஆராதனைகளால் வழிபாட்டை தொடங்கி நமது குற்றங்குறைகளை தீர்த்து நல்வழிகாட்டும்படி மனமுருகி வழிபட்டு விட்டு பிறகு வழிபாட்டை வீட்டில் தொடர்ந்து கடைபிடித்து வந்தால் தீராத கஷ்டங்கள் தீரும்.

    மேலும் வீட்டில் நரசிம்மரின் படத்தை வைத்து நெய்தீபம் ஏற்றி பூஜை செய்து மந்திர துதியை 18 முறை மனதார உச்சரிக்க வேண்டும். மேலும் இந்த பிரார்த்தனையின் போது அசைவ உணவை முற்றிலும் தவிர்ப்பது நல்ல பலனைத் தரும்.