Tag: Online

  • Shakthi On line Krishnajayanthi

    கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும்  வழிபாடுகள், கொண்டாட்டங்கள் நடைபெற்றன. கிருஷ்ணர் கோயிலில் மேளதாளங்களுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

    குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடினர். வீடுகளில் குழந்தைகளுக்கு தத்ரூபமாக கிருஷ்ணர் வேடம் தரித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வீட்டில் அலங்கரிக்கப்பட்ட கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள்  செய்து, கிருஷ்ணன், ராதை போன்று வேடமணிந்த குழந்தைகளுடன்  கோகுலாஷ்டமியை சிறப்பாக கொண்டாடினர். 

    கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பாக கொண்டாடிய சக்தி ஆன்லைன் வாசகர்கள் பலர் தங்கள் வீட்டு கிருஷ்ண ஜெயந்தி விழா புகைப்படங்களை அனுப்பி இருந்தாலும், தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் மட்டும் இங்கே பகிர்ந்துள்ளோம்…. 
     

    சுகன் கார்த்திக்

    ஸ்ரீ  திவ்யா

    நவ்யா

    பெர்டின்-டி-சில்வா

    கவுதம் 

  • Thirupathy Online Ticket Booking

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதம் நடைபெறக்கூடிய ஆர்ஜித சேவைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட்  மாதத்திற்கான  கட்டண  சேவைகளுக்கான முன்பதிவு செய்வதற்கான 69,254 டிக்கெட் கோட்டா வெளியிடப்பட்டுள்ளது. 

    டிக்கெட் விபரம்…
    ஆன்லைன் குலுக்கல் முறையில் 10,904 டிக்கெட்
    சுப்ரபாதம்  – 7549
    தோமாளை – 120
    அர்ச்சனை – 120
    அஷ்டதள பாதபத்ம ஆராதனை – 240
    நிஜபாத தரிசனம் – 2875
    பொது கோட்டா  ( GENERAL CATEGORY ) 58,350  நேரடியாக முன்பதிவு செய்யும் விதமாக வைக்கப்பட்டுள்ளது.
    கல்யாண உற்சவம் – 13,300
    ஊஞ்சல் சேவை – 4,200
    விசேஷ பூஜை – 1,500
    ஆர்ஜித பிரம்மோற்சவம் –  7,700
    வசந்த உற்சவம் -14,850
    சகஸ்கர தீப அலங்கார சேவை – 16,800

    இதில் பொது கோட்டா டிக்கெட் டிக்கெட் இன்று காலை 10 மணி முதல் www.ttdsevaonline.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முதல் முறையில் வெளியிடப்பட்டுள்ள 10 ஆயிரத்து 904 டிக்கெட்டுகள் பெறுவதற்கு  5 ஆம் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். 

    பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் 5 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12மணி கிடையே குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்கள் 8 ம் தேதி மதியம் 12 மணிக்குள் ஆன்லைன் மூலமாக  பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.