Tag: Dharshan

  • Thirupathy Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு தளர்வை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 17 நாட்களாக சோதனை அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் 800 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இதனால், நாளொன்றுக்கு 12,000 பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அதில், சர்வ தரிசனத்தில் 3,000 பக்தர்களும், 300 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்பவர்களில் 9,000 பேருக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது.

    அதன் படி, ஆன்லைனில் நாளொன்றுக்கு மூன்று ஆயிரம் 300 ரூபாய் டிக்கெட்டுகளும் திருப்பதியில் உள்ள ஸ்ரீநிவாசம், அலிபிரி, விஷ்ணு நிவாசம் ஆகிய கெஸ்ட் ஹவுஸ்களில் அமைக்கப்பட்டிருக்கும் கவுண்டர்களில் 3 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

     சுமார் 6000 பக்தர்கள் வரை தற்போது தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் இந்த நிலையில் இன்று முதல் 12,750 பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், ஜூன் 30 ஆம் தேதி வரை ஒரு நாளைக்கு 300 சிறப்பு தரிசனம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

  • June 21 thirupathy dharshan cancel

    சூரிய கிரகணத்தையொட்டி ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுகிறது. 

    ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை காலை 10.18 மணி முதல் பிற்பகல் 1.38 மணி வரை சூரிய கிரகணம் நடைபெற உள்ளது.  இதனால் ஏழுமலையான்  கோயிலில் 20 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் கோயில் கதவுகள் மூடப்பட உள்ளது. 

    ஜூன் 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு  மாலை 6 மணி வரை சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளை அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று செய்ய உள்ளனர். 

    இரவு  8 மணி முதல் 8.30 மணி வரை ஏகாந்த சேவையுடன் கோயில் மூடப்படுகிறது. எனவே ஜூன் 21 அன்று ஏழுமலையான்  கோயிலை பக்தர்களுக்கு அன்றைய தினம் முழவதும் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும் கோயிலில் பக்தர்களை  கல்யாண உற்சவ சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கிரகணத்தின் போது  தரிகொண்டா வெங்கமாம்ப அன்னபிரசாத பவன் மற்றும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் போன்ற எந்தப் இடங்களிலும் அன்னப்பிரசாதம் வழங்கபடாது என்பதை பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy Dharshan

    ஏழுமலையான் கோவிலில் 79 நாட்களுக்கு பிறகு  பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். பக்தர்கள் வருகையை அடுத்து கோவில் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. 

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக  பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் 79 நாட்களுக்கு பிறகு  இன்று முதல் அனுமதி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முதற்கட்டமாக தேவஸ்தானத்தில் பணிபுரியக்கூடிய ஊழியர்களின் குடும்பத்தினர் 6000 பேர் என இன்றும் நாளையும் அனுமதிக்கப்பட உள்ளனர். இதைதொடர்ந்து.

    புதன்கிழமை அன்று திருமலையில் வசிக்கும் உள்ளூர் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு. பதினோராம் தேதி வியாழக்கிழமை முதல் பொதுமக்களுக்கு ஏழுமலையான் தரிசனம் கிடைக்க உள்ளது. இதற்காக இன்று காலை முதல் தேவஸ்தான இணையதள வெப்சைட் மூலம் பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். வெளிமாநில பக்தர்கள் ஆந்திர மாநில அரசின் மூலம் வழங்கப்படும் மாநில எல்லையில் நுழைவதற்கான இ பாஸ் கட்டாயம் பெறவேண்டும்.   

    தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் காத்திருப்பு அறை, அன்னப் பிரசாத கூடம், தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா உள்ளிட்ட இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஆங்காங்கே கிருமிநாசினி வைக்கப்பட்டு சுத்தம் செய்த பின்னர் அனுமதிக்கப்படுகிறது. கை கழுவுவதற்கு குழாய்களின் மீது  கைகளை வைக்காமல் கால்களில் அழுத்தினால் தண்ணீர் வரும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
     

  • Thirupathy dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 11-ம் தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், கோவிலில் நடக்கும் வழக்கமான பூஜைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.  

    இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுள்ளது. முதலில் வரும் 8, 9 ஆகிய தேதிகளில் தேவஸ்தான ஊழியர்கள் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் உள்ளூர் பக்தர்கள் 10-ம் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். 
     
    11-ம் தேதி தேதி முதல் அனைத்து பக்தர்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். தினமும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிட்டு 3000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.

    முன்பதிவு செய்யாதவர்களுக்கு திருப்பதி மலை அடிவாரத்தில் கவுண்டர் அமைத்து டிக்கெட் விநியோகம் செய்யப்படும். ஒரு மணி நேரத்தில் 500 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். காலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை மட்டுமே ஏழுமலையான தரிசிக்க அனுமதி வழங்கப்படும். ஸ்ரீவாரிமெட்டு வழியாக பக்தர்கள் நடந்து திருப்பதி மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

  • Thirupathy dharshan

    திருப்பதி ஏழுமலையான் தரிசனம் மே 3-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டன.

    வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களின் தரிசனம் நிறுத்தப்பட்டது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.அனைத்து வகையான தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டன.
    நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டதால், ஏழுமலையானை தரிசிக்க பக்தா்களுக்கு ஏப்.14-ஆம் தேதி வரை அனுமதி மறுக்கப்பட்டது.

    இந்நிலையில், ஊரடங்கு உத்திரவை மே 3ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளதால், ஏழுமலையான் தரிசனத்தை அப்போது வரை ரத்து செய்துள்ளதாக தேவஸ்தான மக்கள் தொடா்புத்துறை தெரிவித்துள்ளது.
     

  • Thirupathy Newyear Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  புத்தாண்டு  31-ஆம் தேதி முதல் 1ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

    மேலும் ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்லும் தரிசனம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், நன்கொடையாளர்களுக்கான முன்னுரிமை தரிசனம்,  ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்யதரிசனம், அங்கபிரதட்சனை சேவையும்  என அனைத்து சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

     இதேபோன்று வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி ஒட்டி 5-ஆம் தேதி முதல் 7ம் தேதி வரை அனைத்து முன்னுரிமை தரிசனங்களும், ( ஆர்ஜித சேவை ) கட்டண சேவைகள் ,சர்வ தரிசனம்,  திவ்யதரிசனம் , அங்கபிரதட்சணம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. 

  • Thirupathy Dharshan

    சூரியகிரகணம் வியாழக்கிழமை காலை 8.08 மணிக்கு தொடங்கி 11.16 மணி வரை நடைபெற உள்ளது. வழக்கமாக ஏழுமலையான் கோவிலில் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்துக்கு  ஆறு மணி நேரத்திற்கு முன்னதாக கோவில் மூடப்படுவது வழக்கம். அவ்வாறு புதன்கிழமை இரவு 11 மணிக்கு கோவில் கதவுகள் அடைக்கப்பட உள்ளது. 

    இதற்காக இரவு 10 மணியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அர்ச்சகர்கள் மூலவர் சன்னதி முதல் ராஜகோபுரம் உள்ள மகா துவாரம் கதவு வரை அனைத்தையும் மூட உள்ளனர். மீண்டும் சூரியகிரகணம் நிறைவு பெற்ற பிறகு வியாழக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு ஆகம முறைப்படி  கோவில் முழுவதும் சுத்தம் செய்து சூரிய கிரகணத்தால் ஏற்பட்ட தோஷத்திற்கு பரிகாரமாக பூஜைகள் மேற்கொள்ள உள்ளனர். 

    இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை மதியம் 2 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளது. சூரிய கிரகணத்தை ஒட்டி ஏழுமலையான் கோவிலில் நடைபெறக்கூடிய திருப்பாவாடை சேவை,  கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை,  வசந்த உற்சவம் , ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகியவை வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் சூரிய கிரகணத்தை யொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் தேவஸ்தானம் சார்பில் வழங்கக்கூடிய அன்னப் பிரசாதம் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்படுவதாகவும் பக்தர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மதியம் 4 மணிக்கு பிறகு  உணவுகள் தயார் செய்யப்பட்டு வழக்கம்போல் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

    இதேபோன்று திருப்பதியிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார், கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவில்,  கோவிந்தராஜ ஸ்வாமி கோவில்,  கோதண்டராம சுவாமி கோவிலும் சூரிய கிரகணத்தை யொட்டி  வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Thirupathy dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்ய கிரகணத்தையொட்டி டிசம்பர் 25, 26 ம் தேதிகளில் 13 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டிசம்பர் 26 ம் தேதி காலை அதிகாலை 8.08 மணி முதல் 11.16  மணி வரை சூர்ய கிரகணம் ஏற்படவுள்ளது. கோயில் சம்பர்தாயபாடி சூர்ய கிரகணம், சந்திர கிரகணத்தின் 6 முன்னதாக கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம் . 

    அதன்படி டிசம்பர்  25 ஆம் தேதி இரவு 11 மணிக்கு கோயில் கதவுகள் மூடப்படுகிறது. 26 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 12 மணிக்கு கோயில் கதவுகள் திறக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம், தோமாலை சேவை,  பஞ்சாங்கம் படித்து, அர்ச்சனை போன்ற சேவைகள் ஏகாந்தமாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் அர்ச்சகர்கள் மட்டும்  நடத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பிறகு சர்வ தரிசனத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

  • Thirupathy Dharshan

    திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெற்ற 8 நாட்களில் 7 லட்சத்து 7,737 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர்.

    தேவஸ்தான செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் செய்தியாளர்களுக்கு  அளித்த  பேட்டியில் கூறுகையில்  ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் மூலவரை 5 லட்சத்து 90,584 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். 

    இந்த ஆண்டு பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் 7 லட்சத்து 7737 பக்தர்கள் தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் ரூ 20.40 கோடி  காணிக்கை செலுத்தினர்.

    பிரம்மோற்சவத்தில் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க 8 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டதால்  34 லட்சத்து  1384 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 3 லட்சத்து 23 ஆயிரம் பக்தர்கள் மெட்டையடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 

    18 மாநிலங்களை சேர்ந்த 357 கலைக்குழுவினர் 8210 பேர் சுவாமி வீதி உலாவின் போது கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதே போன்று அடுத்த ஆண்டு 25 மாநிலங்களில் இருந்து பக்தர்களை வரவழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Thirupathy Divaya Daharshan

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததன் காரணமாக ரத்து செய்யப்பட்ட திவ்ய தரிசனம் மற்றும் சர்வ தரிசன டிக்கெட்டுகள் நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 

    புரட்டாசி மாதத்தை ஒட்டி நடைபெற்ற பிரம்மோற்சவத்தில் தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் இருந்து வந்த நிலையில் கடந்த 3 ம் தேதி முதல் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலமாக வழங்கப்பட்டு வந்த சர்வ தரிசனம் டிக்கெட்கள் 14 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டதாக தேவஸ்தானம் அறிவித்தது.  

    இந்நிலையில் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதையடுத்து பக்தர்கள் கூட்டம் தற்போது குறைந்துள்ளதால் நாளை முதல் மீண்டும் வழக்கம்போல் மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு வழங்க கூடிய திவ்ய தரிசனம் மற்றும் ஆதார் அட்டை மூலம் வழங்கக் கூடிய சர்வ தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் வழங்கப்படும் என தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.