Tag: பகவான்

  • Namakkal Saibaba sirappu vazhipadu

    நாமக்கல் – திருச்சி சாலை, இந்திரா நகரில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு ஸ்ரீ ஷீரடி சாய் தத்தா பிருந்தாவன் சாய்பாபா கோவிலில் ஆடி மாதம் முதல் வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலையில் சாய்பாபாவுக்கு ஆரத்தி, கலச பூஜை, சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மதியம் ஆரத்தி தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கோவிலில் பக்தர்கள் தியானம் செய்ய தனி அறை அமைக்கப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

  • July 18 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நன்மை
    ரிஷபம்         – ஓய்வு
    மிதுனம்     – சாந்தம்
    கடகம்         –  பாராட்டு
    சிம்மம்         –   நலம்  
    கன்னி         –    இன்பம்
    துலாம்         –     அசதி
    விருச்சிகம்     –  பக்தி
    தனுசு         –     லாபம்
    மகரம்         –    ஆக்கம்  
    கும்பம்         –      தனம்  
    மீனம்         –      உற்சாகம்
    சந்திராஷ்டமம்    –         பரணி

     

  • July 18 2024 Indrayanaal

    ஜூலை 18 – தமிழ்நாடு தினம்…
    குரோதி வருடம் – ஆடி 2
    ஜூலை 18 – 2024
    வியாழன்    
    நல்ல நேரம் : கா 10.30 – 12.00
    எமகண்டம் : கா 6.00 – 7.30
    குளிகை : கா 9.00 – 10.30
    ராகு : ம 1.30 – 3.00
    திதி : சூன்ய
    திதி நேரம் :  துவாதசி இ 7.23
    நட்சத்திரம் :  அனுஷம் அ.கா 2.14
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் : பரணி
    சூலம் : தெற்கு
    பரிகாரம் : தைலம்

  • Draupathi amman duriodhan padukalam

    திரௌபதி அம்மன் திருவிழாவை முன்னிட்டு துரியோதனன் படுகளம் போர் (வதம் செய்யும்  நிகழ்ச்சி ) 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்ச்சி ஆயிரம் கண்காண பக்தர்கள் பங்கேற்பு

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் காமாட்சியம்மன் பேட்டை  பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில்  உள்ளது இங்கு துரியோதனன் படுகள போர் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக 3 தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கி  அன்று முதல் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு மற்றும் ஆன்மீம நிகழ்ச்சிகள் தொடர்ந்து  நடைபெற்றது. இதனிடையே முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் போரில் வதம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இதற்காக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட துரியோதனன் சிலையில்  கூத்து கலைஞர்களால் பீமன் துரியோதனன் போரிடும் போர்க்களக் காட்சியிகள் தத்துரூபமாக நடைபெற்றது

    இதில் பீமன் வேடம் அணிந்தவர் பிரமாண்ட துரியோதனன் சிலையின் தொடை பகுதியில் கதாயுதத்தால் ஓங்கி அடித்து துரியோதனன் வதம் செய்யும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது அப்பொழுது இளைஞர்கள் ஆரவாரம் செய்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் மற்றும்  சுற்றுவட்டார பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

     மேலும்  மாதம் மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிப்படையவும் பொதுமக்களிடையே நாணயமும் பொறுமையும் மக்கள் மனதில் விதைக்கப்படவும் தர்மம் வெல்லும் அதர்மம் தோற்கும் என்பதனை உணர்த்தும் இந்த மகா பாரதம் விளங்குகிறது அதை உணர்த்தும் விதமாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு நடைபெறுவதாக  அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

  • Aadi first day amman alangaram

    ஆடி முதல் நாள் முன்னிட்டு ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி அம்மனுக்கு சந்தன வெள்ளிக்காப்பு அலங்காரம் நீண்ட வரிசையில் நின்று  பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களும் மற்றும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஆடி முதல் நாளை முன்னிட்டு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று.பின்னர் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் சாமிக்கு சந்தன வெள்ளி காப்பு அலங்காரம் சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    ஆடி முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டு சென்றனர்.தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

  • July 16 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  பக்தி
    ரிஷபம்         – பாசம்  
    மிதுனம்     – பயம்  
    கடகம்         –  பகை
    சிம்மம்         –   விவேகம்
    கன்னி         –    பாராட்டு
    துலாம்         –     பிரீதி
    விருச்சிகம்     –  உயர்வு
    தனுசு         –     வரவு  
    மகரம்         –    தடங்கல்
    கும்பம்         –      வெற்றி
    மீனம்         –      இன்சொல்  
    சந்திராஷ்டமம்    –         பூரட்டாதி, உத்திரட்டாதி

  • July 16 2024 Indrayanaal

    குரோதி வருடம் – ஆனி 32
    ஜூலை 16 – 2024
    செவ்வாய்    
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : தசமி
    திதி நேரம் :  தசமி மா 6.38
    நட்சத்திரம் :  விசாகம் முழுவதும் 0.00
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : ரேவதி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • Varahi amman pushpa alangram

    ஆசாட நவராத்திரி விழாவின் பதினோராவது  நாளான இன்று வராகி அம்மனுக்கு புஷ்ப  அலங்காரம். திரளான பக்தர்கள் நீண்ட வரிசைகள் என்று சுவாமி தரிசனம்.

    உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் வராகி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் 11 நாட்கள் ஆசாட நவராத்திரி விழா விமர்சையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு ஆசாட நவராத்திரி விழா கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது.  அதனை தொடர்ந்து பதினோராவது நாளான இன்று புஷ்ப அலங்காரம்  செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வாராகி அம்மனை தரிசனம் செய்தனர்.

  • July 14 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நன்மை
    ரிஷபம்         – செலவு
    மிதுனம்     – லாபம்
    கடகம்         –  போட்டி
    சிம்மம்         –   விவேகம்
    கன்னி         –    தடங்கல்
    துலாம்         –     அமைதி
    விருச்சிகம்     –  பொறுமை
    தனுசு         –     அன்பு
    மகரம்         –    மகிழ்ச்சி  
    கும்பம்         –      வெற்றி
    மீனம்         –      இன்பம்
    சந்திராஷ்டமம்    –         அவிட்டம், சதயம்

  • Thanjai varahiamman festival

    உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா, கனிவகை அலங்காரம்,பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

    தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது, இக்கோவிலில் தனி சன்னதியில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்,

    இந்நிலையில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி பெருவிழா தஞ்சை பெரியகோயிலில் கடந்த ஜூலை 5 ந்தேதி  தொடங்கியது,10நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் நடைபெறும், அதைப்போல் 9ம் நாளாக இன்று  ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு  கனிவகை அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது,  இதில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்.