Tag: பகவான்

  • 70 feet height vinayakar

    ஹைதராபாத்தில் உள்ள கைராதாபாத்தில்  70 உயரத்தில் அமைக்கப்பட்ட சப்தமுக கணபதி ஷோபா யாத்திரை நடைபெற்றது. ஹைதராபாத்தில்  ஷோபா யாத்திரை என்ற பெயரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சிலைகளை உசேன் சாகர் ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கும் வரைக்கும் கணேஷ் நிமஞ்ஜனம் நடைபெற்றது.

    ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய இரட்டை நகரங்களில் பிரம்மாண்டமான உயரம் முதல் சிறிய உயரம் வரை அமைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளின் ஷோபா யாத்திரை நடைபெறுகிறது.

    ஷோபா யாத்திரையின் ஒரு பகுதியாகபகுதியாக ஹைதராபாத்தில் உள்ள கைரதாபாத்தில் 70 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான சப்த முக கணபதி சிலையை சூப்பர் கிரேன் மூலம் தூக்கி பெரிய லாரியில் நிலைநிறுத்தினார்கள்.தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட சப்தமுக கணபதி உசேன் சாகர் ஏரியை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கிறார்.

    நிகழ்ச்சியில் பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்புக்காக 700 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர ஹைதராபாத்தில் உள்ள பாலாப்பூர் உட்பட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்ட புகழ்பெற்ற விநாயகர் சிலைகளும் தற்போது சோபா யாத்திரையாக உசேன் சாகர் ஏரியில் கரைக்கப்பட்டது.

  • September 18 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  லாபம்
    ரிஷபம்         – தோல்வி  
    மிதுனம்     – வெற்றி
    கடகம்         –  உதவி
    சிம்மம்         –   போட்டி
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     தெளிவு
    விருச்சிகம்     –  பொறுமை
    தனுசு         –    தேர்ச்சி
    மகரம்         –   சிந்தனை
    கும்பம்         –     நட்பு
    மீனம்         –    தற்செயல்  
    சந்திராஷ்டமம்    –        பூசம், ஆயில்யம்

     

  • September 18 2024 Mahalyabatcham

    செப்டம்பர் 18 – மகாளயபட்சம் ஆரம்பம்…
    குரோதி வருடம் – புரட்டாசி 2
    செப்டம்பர் 18 – 2024
    புதன்
    மகாளயபட்சம் ஆரம்பம்
    நல்ல நேரம் : கா 9.00 – 10.30
    எமகண்டம் : கா 7.30 – 9.00
    குளிகை : கா 10.30 – 12.00
    ராகு : ம 12.00 – 1.30
    திதி : பிரதமை
    திதி நேரம் :  பவுர்ணமி கா 9.10
    நட்சத்திரம் :  பூரட்டாதி ம 12.56
    யோகம் : அமிர்த-சித்த
    சந்திராஷ்டமம் :   ஆயில்யம்
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

  • September 17 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  போட்டி  
    ரிஷபம்         – நன்மை
    மிதுனம்     – உதவி
    கடகம்         –  நலம்
    சிம்மம்         –   ஆரோக்கியம்
    கன்னி         –    ஊக்கம்
    துலாம்         –     பிரீதி
    விருச்சிகம்     –  சுபம்
    தனுசு         –    முயற்சி
    மகரம்         –   கோபம்
    கும்பம்         –     சுகம்
    மீனம்         –    தனம்
    சந்திராஷ்டமம்    –        புனர்பூசம், பூசம்

  • September 16 2024 Subamuhurthanaal

    செப்டம்பர் 16 – வளர்பிறை சுபமுகூர்த்த நாள்…
    குரோதி வருடம் – ஆவணி 31
    செப்டம்பர் 16 – 2024
    திங்கள்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 6.00 – 7.30)
    நல்ல நேரம் : கா 6.00 – 7.30
    எமகண்டம் : கா 10.30 – 12.00
    குளிகை : ம 1.30 – 3.00
    ராகு : கா 7.30 – 9.00
    திதி : சதுர்த்தசி
    திதி நேரம் :  திரையோதசி ம 1.30
    நட்சத்திரம் :  அவிட்டம் ம 3.52
    யோகம் : சித்த
    சந்திராஷ்டமம் :   புனர்பூசம்
    சூலம் : கிழக்கு
    பரிகாரம் : தயிர்

     

  • September 16 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  நன்மை  
    ரிஷபம்         – திறமை
    மிதுனம்     – சோர்வு
    கடகம்         –  கவனம்
    சிம்மம்         –   சாந்தம்
    கன்னி         –    அமைதி
    துலாம்         –     சுகம்
    விருச்சிகம்     –  நலம்
    தனுசு         –    புகழ்
    மகரம்         –   பயம்
    கும்பம்         –     பக்தி
    மீனம்         –    பொறுமை
    சந்திராஷ்டமம்    –        திருவாதிரை, புனர்பூசம்

  • Punniyam tharum puratasi

    பொன்னுருகக் காய்ந்து மண்ணுருகப் பெய்யும் புரட்டாசியில்’ என்பார்கள். அதாவது, புரட்டாசி மாதத்தில் பகல் பொழுதினில் தங்கம் உருகும் அளவிற்கு கடுமையான வெயில் காய்ந்து, இரவினில் மண் உருகி வழிந்தோடும் அளவில் நல்ல மழை பெய்யும் என்பது இதன் பொருள்.

    இந்த மாதம் முழுவதும் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால் இதனை கன்னியா மாதம் என்றும் அழைப்பர். புரட்டாசி என்ற வார்த்தையைக் கேட்கும்போதே நம் கண் முன் தோன்றுவது பெருமாளின் திருவுருவமே. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருப்போரும் உண்டு. நவகிரகங்களில் மகாவிஷ்ணுவின் அம்சமாக உருவானவர் புத பகவான்.

    புதன் கிரகம் உச்ச பலம் பெறுவது கன்னி ராசியில். எனவேதான் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் புரட்டாசி, பெருமாளுக்கு உரிய மாதம் என பெரியவர்கள் வகுத்திருக்கிறார்கள். அதோடு பெரும்பாலும் புரட்டாசி மாதத்தில் கன்னி ராசியில் சூரியனோடு புதனும் இணைந்திருப்பார். சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பசுபதி என்றழைக்கப்படும் சிவபெருமான்.

    புதனுக்கு உரிய பிரத்யதி தேவதை நாராயணன். இவர்கள் இருவரும் தெய்வீக மூலையாக கருதப்படும் கன்னி மூலையில் இணைவது சங்கர-நாராயணர் இணைவாகக் கருதப்படுகிறது. சூரியநாராயண ஸ்வாமி என்று சூரியன் பெயர் பெற்ற காரணமும் இதுவே.

  • Puratasi viradhangal

    புரட்டாசி மாத பிறப்பு இந்த வருடம் செப்டம்பர் 17ஆம் தேதி வருகிறது. அன்று திருவோண விரதமும் சேர்ந்து வந்துள்ளது. புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். இந்த புரட்டாசியில் வரும் விரதங்கள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க….

     சித்தி விநாயக விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும்.

    சஷ்டி – லலிதா விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைபிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பரமேஸ்வரி சர்வ மங்களங்களையும் அருள்வாள்.

    அனந்த விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைபிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வர்யங்கள் கிடைக்கும்.

    அமுக்தாபரண விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமா – மகேஸ்வரரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும்.

    ஜேஷ்டா விரதம்:

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும், விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும்.

    மஹாலட்சுமி விரதம்:

     புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியை பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஒவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும்.

    கபிலா சஷ்டி விரதம்:

    புரட்டாசி மாத தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் சித்திகளை தரும்.

    மஹாளய பட்சம்:

    மகாளய பட்சம் என்பது முன்னோர்களுக்கான காலம். மகாளயம் கூட்டாக, ஒன்றாக என்று அர்த்தம். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். நம் முன்னோர்கள் அனைவரும் கூட்டாகவும் ஒன்றாகவுமாக பித்ரு லோகத்தில் இருந்து பூலோகத்திற்கு, நம் வீட்டுக்கு வந்து நம்மைப் பார்க்கிறார்கள் என்பதாக ஐதீகம். அன்றைய தினம் உங்கள் முன்னோர்களை வணங்கி வழிபடுங்கள். உங்கள் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்திருக்க உங்களை ஆசீர்வதித்து அருளுவார்கள் முன்னோர்கள்.

    திருவோண விரதம்:

    திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வர வேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.

  • September 15 2024 Rasipalan

    இன்றைய ராசிபலன்
    மேஷம்         –  எதிர்ப்பு
    ரிஷபம்         – போட்டி
    மிதுனம்     – விவேகம்
    கடகம்         –  அச்சம்
    சிம்மம்         –   பாசம்
    கன்னி         –    தனம்
    துலாம்         –     வீம்பு
    விருச்சிகம்     –  பெருமை  
    தனுசு         –    இன்பம்
    மகரம்         –   ஆக்கம்
    கும்பம்         –     அமைதி
    மீனம்         –    நலம்
    சந்திராஷ்டமம்    –        மிருகசீருஷம், திருவாதிரை

  • September 15 2024 Oonam

    செப்டம்பர் 15 – ஓணம்…
    குரோதி வருடம் – ஆவணி 30
    செப்டம்பர் 15 – 2024
    ஞாயிறு
    ஓணம்
    பிரதோஷம்
    வளர்பிறை சுபமுகூர்த்த நாள் (காலை 7.31 – 9.00)
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : ம 12.00 – 1.30
    குளிகை : ம 3.00 – 4.30
    ராகு : மா 4.30 – 6.00
    திதி : திதித்துவயம்
    திதி நேரம் :  துவாதசி ம 3.30
    நட்சத்திரம் :  திருவோணம் மா 5.03
    யோகம் : அமிர்த-மரண
    சந்திராஷ்டமம் :   திருவாதிரை
    சூலம் : மேற்கு
    பரிகாரம் : வெல்லம்