Tag: பகவான்

  • sakthi-perdangal-thondriya-varalaru

    சிவ பெருமான் சக்தியின் உடலை தூக்கி நடனம் ஆடி உடலை 51 பாகங்களாக துண்டுகளாக அகண்ட பாரதத்தில் வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்கள்!
    பிரம்ம புத்திரனான தட்சன் ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்து, சிவபெருமானிடம் ‘பிரஜாபதி பட்டத்துடன், ஈரேழு உலகங்களை ஆளும் வல்லமையையும்’ வரமாகப் பெற்றான்’. மேலும் ஜகன் மாதாவான அம்பிகையைப் புதல்வியாக அடையும் வரத்தையும் வேண்டிப் பெற்றான்.

    இப்படி எண்ணற்ற ஆண்டுகள் அனைத்து உலகங்களையும் ஆட்சி செலுத்திய மமதையால் அகங்காரம் மேலிட, தானே ஈஸ்வரன் என்று எண்ணத் துவங்கினான். தர்ம நெறிகளில் இருந்து முற்றிலும் விலகி செயல்படவும் துவங்கினான். வரமளித்த இறைவனிடமே குரோதம் கொண்டு, சிவபெருமானை அவமதிக்கும் பொருட்டு ஒரு யாகமும் தொடங்கினான்.

    ஹரித்வாரில் அமைந்துள்ள ‘கனகல்’ என்னும் தலத்தில் யாகம் தொடங்கப் பட்டது. அன்னை சதி தேவி தட்சனுக்கு அறிவு புகட்ட எண்ணி…. யாக சாலையில் தோன்றி அருள, தட்சனோ தேவியை அவமதித்ததோடு நில்லாமல் ஈசனையும் நிந்தித்துப் பேசினான். சிவ நிந்தனை பொறுக்காத அன்னை, ஹோம குண்டத்தில், யோகத் தீயினால் உடலை மாய்த்துக் கொண்டார்.
    இந்நிகழ்வுக்குப் பின், சிவபெருமானின் கோபத்தால் தட்சனும், அவன் யாக சாலையும், சர்வ நாசத்துக்கு உள்ளானதை சிவபுராணம் விரிவாகப் கூறுகிறது.

    சிவபெருமான், சதி தேவியின் திருவுடலைச் சுமந்த படி உக்கிர தாண்டவம் ஆடத் துவங்க, மகா பிரளயம் உருவாகும் அபாயம் தோன்றியது. ஸ்ரீமகா விஷ்ணு, சர்வேஸ்வரரை அமைதியுறச் செய்யும் பொருட்டு, தன் சுதர்சன சக்கிரத்தால் தேவியின் திருவுடலை பல்வேறு துண்டுகளாக அகண்ட இப்புவியில் சிதறும் வண்ணம் செய்தருள, அவை 51 சக்தி பீடங்களாக உருப்பெற்றன.
    இதோ 51 சக்தி பீடங்கள்.
    1 மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா
    2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு
    3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு
    4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி.
    5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி.
    6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு
    7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு
    8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு
    9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு
    10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு
    11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி.
    12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு
    13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர்
    14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர்
    15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா
    16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசலபிரதேஷ்.
    17. ஞானாம்பிகை-காளஹஸ்தி-(ஞான பீடம்), ஆந்திரா
    18. காமாக்யா-கவுகாத்தி-(காமகிரி பீடம்) அஸ்ஸாம்
    19. சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர்- (ஜ்வாலாமுகி பீடம்) காஷ்மீர்
    20. அபிராமி-திருக்கடையூர்-(கால பீடம்), தமிழ்நாடு
    21. பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்), கேரளா
    22. மகாலட்சுமி-கோலாப்பூர்-(கரவீரபீடம்) மகாராஷ்டிரம்
    23. ஸ்தாணுபிரியை-குரு÷க்ஷத்ரம்-(உபதேசபீடம்)ஹரியானா
    24. மகாகாளி-திருவாலங்காடு-(காளி பீடம்) தமிழ்நாடு
    25. பிரதான காளி-கொல்கத்தா-(உத்ர சக்தி பீடம்) மேற்கு வங்காளம்
    26. பைரவி-பூரி- (பைரவி பீடம்) ஒரிசா
    27. மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா-(மாணிக்க பீடம்) ஆந்திரா
    28. அம்பாஜி-துவாரகை-, பத்ரகாளி- (சக்தி பீடம்) குஜராத்
    29. பராசக்தி-திருக்குற்றாலம்-(பராசக்தி பீடம்), தமிழ்நாடு
    30. முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம்(ஜெயந்தி பீடம்) ஹரியானா
    31. லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை(சாயா பீடம்) தமிழ்நாடு
    32. காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம்-(காயத்ரிபீடம்) ராஜஸ்தான்
    33. சந்திரபாகா-சோமநாதம்-(பிரபாஸா பீடம்) குஜராத்
    34. விமலை, உலகநாயகி-பாபநாசம்(விமலை பீடம்), தமிழ்நாடு
    35. காந்திமதி-திருநெல்வேலி-(காந்தி பீடம்), தமிழ்நாடு
    36. பிரம்மவித்யா-திருவெண்காடு-(பிரணவ பீடம்), தமிழ்நாடு
    37. தர்மசம்வர்த்தினி-திருவையாறு-(தர்ம பீடம்), தமிழ்நாடு
    38. திரிபுரசுந்தரி-திருவொற்றியூர்-(இஷீபீடம்), தமிழ்நாடு
    39. மகிஷமர்த்தினி-தேவிபட்டினம்-(வீரசக்தி பீடம்), தமிழ்நாடு
    40. நாகுலேஸ்வரி-நாகுலம் -(உட்டியாணபீடம்) இமாசல பிரதேசம்
    41. திரிபுர மாலினி-கூர்ஜரம் அருகில் ஜாலந்திரம் (ஜாலந்திர பீடம்) பஞ்சாப்
    42. திரியம்பக தேவி-திரியம்பகம்- (திரிகோணபீடம்) மகாராஷ்டிரம்
    43. சாமுண்டீஸ்வரி-மைசூர்-(சம்பப்பிரத பீடம்) கர்நாடகா
    44. ஸ்ரீலலிதா-பிரயாகை-(பிரயாகை பீடம்) இமாசலப்பிரதேசம்
    45. நீலாம்பிகை-சிம்லா-(சியாமள பீடம்) இமாசலப்பிரதேசம்
    46. பவானி-துளஜாபுரம்-(உத்பலா பீடம்) மகாராஷ்டிரா
    47. பவானி பசுபதி-காட்மாண்ட்-(சக்தி பீடம்) நேபாளம்
    48. மந்த்ரிணி-கயை- (திரிவேணிபீடம்) பீகார்
    49. பத்ரகர்ணி-கோகர்ணம்- (கர்ணபீடம்) கர்நாடகா
    50. விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்uபூர்- (விரஜாபீடம்) உ.பி.
    51. தாட்சாயிணி-மானஸரோவர்-(தியாகபீடம்) திபெத்.

  • 2016-08-08-16-07-17

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி 7 ஆம் தேதி மாலை 5 மணியளவில் திறக்கப்பட்ட கோயில் நடை 8 ஆம் தேதி இரவு 10 மணிக்கு அடைக்கப்பட்டது.

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, அண்மையில் ஆடி மாதத்தின் முதல் 5 நாட்கள் கோயில் நடை திறக்கப் பட்டிருந்தது.

    அதன் பிறகு, நிறை புத்தரிசி பூஜைக் காக நடை திறக்கப்பட்டது. அச்சன்கோயிலில் இருந்து நெற்கதிர்கள் ஊர்வலமாக சபரிமலை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு, மாலையில் பம்பை வந்தடைந்தது. பின்னர், அங்கிருந்து சன்னிதானத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதேபோல் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டில் இருந்தும் நெற்பயிர்கள் கொண்டு வரப்பட்டன.
    அச்சன்கோயிலில் இருந்து நிறை புத்தரிசி பூஜைக்கு நெற்கதிர்கள் கொண்டு வரப்பட்டது இதுவே முதல்முறை.
    பூஜை செய்யப்பட்ட நெற்கதிர்கள், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த நெற்கதிர்களை பூஜையறையில் கட்டி வைத்தால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்

  • 2016-08-07-10-20-15

    பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருகே 15 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது திருப்புட்குழி என்ற புண்ணிய பூமி..
    ராவணன் சீதையை கடத்திசெல்லும்போது ஜடாயு என்ற அரச பறவை வழிமறித்து அவனுடன் போரிட்டது. ஆனால் வெல்லமுடியவில்லை. வெட்டப்பட்டு மரணத்தறுவாயிலிருந்த ஜடாயுவை அங்கே வந்த ராமபிரான் சந்திக்க, நடந்த சம்பவங்களை விவரித்தபடியே உயிரைவிடுகிறது. ஜடாயு விருப்பப்படி, அதற்கு ஈமக்கிரிகைகளை செய்து தீமூட்டி ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் ராமன் காட்சிஅளிக்கிறார். அப்போது வெப்பம் தாளாமல் ராமனின் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி நாச்சியார் இடப்பக்கமும் இடப்பக்கம் இருந்த பூதேவி நாச்சியார் வலப்பக்கம் மாறி அருள்பாவிக்க நேரிட்டது.

    அதனால்தான் திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும் ஆண்டாள் சன்னதி வலப்புறமும் இருக்கும்.
    முன்னோர்களுக்கு அமாவசையன்று தர்ப்பணம் செய்தால், செய்பவர்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதே போல இன்னொரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கான குழந்தை பேறு விஷயம்.

    திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இங்கு வந்து மரகவதவல்லி தாயாரை மனமுருக வேண்டுதல் செய்யவேண்டும். மடப்பள்ளியில் பயிறை வறுத்து கொடுப்பார்கள். அதனை பெற்றுக்கொண்டு கோவிலின் ஜடாயு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு வறுக்கப்பட்ட பயிறை ஈரத்துணியில் சுற்றி மடியில் வைத்துக்கொள்ளவேண்டும்.அன்றிரவு முழுவதும் கோவில் அருகே உள்ள மடத்தில் படுத்துறங்கவேண்டும்.

    காலையில் விழித்துப்பார்த்தால், வறுக்கப்பட்ட பயிறுகள் முளை விட்டிருக்கும். இப்படி ஆச்சர்யகரமான நிகழ்வு நடந்தால் அந்த பெண்ணுக்கு உடனே குழந்தை பேறு பாக்கியம் உண்டாகும் என்பது திருப்புட்குழி கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
    அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
    புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
    குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
    இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே என திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட திருத்தலம் இது..

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.

     

  • 2016-08-07-10-20-15

    பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருகே 15 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது திருப்புட்குழி என்ற புண்ணிய பூமி..
    ராவணன் சீதையை கடத்திசெல்லும்போது ஜடாயு என்ற அரச பறவை வழிமறித்து அவனுடன் போரிட்டது. ஆனால் வெல்லமுடியவில்லை. வெட்டப்பட்டு மரணத்தறுவாயிலிருந்த ஜடாயுவை அங்கே வந்த ராமபிரான் சந்திக்க, நடந்த சம்பவங்களை விவரித்தபடியே உயிரைவிடுகிறது. ஜடாயு விருப்பப்படி, அதற்கு ஈமக்கிரிகைகளை செய்து தீமூட்டி ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் ராமன் காட்சிஅளிக்கிறார். அப்போது வெப்பம் தாளாமல் ராமனின் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி நாச்சியார் இடப்பக்கமும் இடப்பக்கம் இருந்த பூதேவி நாச்சியார் வலப்பக்கம் மாறி அருள்பாவிக்க நேரிட்டது.

    அதனால்தான் திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும் ஆண்டாள் சன்னதி வலப்புறமும் இருக்கும்.
    முன்னோர்களுக்கு அமாவசையன்று தர்ப்பணம் செய்தால், செய்பவர்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதே போல இன்னொரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கான குழந்தை பேறு விஷயம்.

    திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இங்கு வந்து மரகவதவல்லி தாயாரை மனமுருக வேண்டுதல் செய்யவேண்டும். மடப்பள்ளியில் பயிறை வறுத்து கொடுப்பார்கள். அதனை பெற்றுக்கொண்டு கோவிலின் ஜடாயு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு வறுக்கப்பட்ட பயிறை ஈரத்துணியில் சுற்றி மடியில் வைத்துக்கொள்ளவேண்டும்.அன்றிரவு முழுவதும் கோவில் அருகே உள்ள மடத்தில் படுத்துறங்கவேண்டும்.

    காலையில் விழித்துப்பார்த்தால், வறுக்கப்பட்ட பயிறுகள் முளை விட்டிருக்கும். இப்படி ஆச்சர்யகரமான நிகழ்வு நடந்தால் அந்த பெண்ணுக்கு உடனே குழந்தை பேறு பாக்கியம் உண்டாகும் என்பது திருப்புட்குழி கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
    அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
    புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
    குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
    இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே என திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட திருத்தலம் இது..

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.

     

  • 2016-08-07-10-20-15

    பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருகே 15 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது திருப்புட்குழி என்ற புண்ணிய பூமி..
    ராவணன் சீதையை கடத்திசெல்லும்போது ஜடாயு என்ற அரச பறவை வழிமறித்து அவனுடன் போரிட்டது. ஆனால் வெல்லமுடியவில்லை. வெட்டப்பட்டு மரணத்தறுவாயிலிருந்த ஜடாயுவை அங்கே வந்த ராமபிரான் சந்திக்க, நடந்த சம்பவங்களை விவரித்தபடியே உயிரைவிடுகிறது. ஜடாயு விருப்பப்படி, அதற்கு ஈமக்கிரிகைகளை செய்து தீமூட்டி ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் ராமன் காட்சிஅளிக்கிறார். அப்போது வெப்பம் தாளாமல் ராமனின் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி நாச்சியார் இடப்பக்கமும் இடப்பக்கம் இருந்த பூதேவி நாச்சியார் வலப்பக்கம் மாறி அருள்பாவிக்க நேரிட்டது.

    அதனால்தான் திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும் ஆண்டாள் சன்னதி வலப்புறமும் இருக்கும்.
    முன்னோர்களுக்கு அமாவசையன்று தர்ப்பணம் செய்தால், செய்பவர்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதே போல இன்னொரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கான குழந்தை பேறு விஷயம்.

    திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இங்கு வந்து மரகவதவல்லி தாயாரை மனமுருக வேண்டுதல் செய்யவேண்டும். மடப்பள்ளியில் பயிறை வறுத்து கொடுப்பார்கள். அதனை பெற்றுக்கொண்டு கோவிலின் ஜடாயு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு வறுக்கப்பட்ட பயிறை ஈரத்துணியில் சுற்றி மடியில் வைத்துக்கொள்ளவேண்டும்.அன்றிரவு முழுவதும் கோவில் அருகே உள்ள மடத்தில் படுத்துறங்கவேண்டும்.

    காலையில் விழித்துப்பார்த்தால், வறுக்கப்பட்ட பயிறுகள் முளை விட்டிருக்கும். இப்படி ஆச்சர்யகரமான நிகழ்வு நடந்தால் அந்த பெண்ணுக்கு உடனே குழந்தை பேறு பாக்கியம் உண்டாகும் என்பது திருப்புட்குழி கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
    அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
    புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
    குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
    இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே என திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட திருத்தலம் இது..

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.

     

  • varutha-payaru-mulaikum-adisayam

    பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் அருகே 15 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை-பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையையொட்டி அமைந்துள்ளது திருப்புட்குழி என்ற புண்ணிய பூமி..

    ராவணன் சீதையை கடத்திசெல்லும்போது ஜடாயு என்ற அரச பறவை வழிமறித்து அவனுடன் போரிட்டது. ஆனால் வெல்லமுடியவில்லை. வெட்டப்பட்டு மரணத்தறுவாயிலிருந்த ஜடாயுவை அங்கே வந்த ராமபிரான் சந்திக்க, நடந்த சம்பவங்களை விவரித்தபடியே உயிரைவிடுகிறது. ஜடாயு விருப்பப்படி, அதற்கு ஈமக்கிரிகைகளை செய்து தீமூட்டி ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் ராமன் காட்சிஅளிக்கிறார். அப்போது வெப்பம் தாளாமல் ராமனின் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி நாச்சியார் இடப்பக்கமும் இடப்பக்கம் இருந்த பூதேவி நாச்சியார் வலப்பக்கம் மாறி அருள்பாவிக்க நேரிட்டது.

    அதனால்தான் திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும் ஆண்டாள் சன்னதி வலப்புறமும் இருக்கும்.
    முன்னோர்களுக்கு அமாவசையன்று தர்ப்பணம் செய்தால், செய்பவர்களுக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இதே போல இன்னொரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கான குழந்தை பேறு விஷயம்.

    திருமணமாகி குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், இங்கு வந்து மரகவதவல்லி தாயாரை மனமுருக வேண்டுதல் செய்யவேண்டும். மடப்பள்ளியில் பயிறை வறுத்து கொடுப்பார்கள். அதனை பெற்றுக்கொண்டு கோவிலின் ஜடாயு தீர்த்தத்தில் புனித நீராடிவிட்டு வறுக்கப்பட்ட பயிறை ஈரத்துணியில் சுற்றி மடியில் வைத்துக்கொள்ளவேண்டும்.அன்றிரவு முழுவதும் கோவில் அருகே உள்ள மடத்தில் படுத்துறங்கவேண்டும்.

    காலையில் விழித்துப்பார்த்தால், வறுக்கப்பட்ட பயிறுகள் முளை விட்டிருக்கும். இப்படி ஆச்சர்யகரமான நிகழ்வு நடந்தால் அந்த பெண்ணுக்கு உடனே குழந்தை பேறு பாக்கியம் உண்டாகும் என்பது திருப்புட்குழி கோவிலின் சிறப்பு அம்சமாகும்.
    அலங்கெழு தடக்கை யாயன் வாயாம்பற்கு அழியுமால் என்னுள்ளம் யென்னும்
    புலங்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் போதுமோ நீர் மலைக்கு யென்னும்
    குலங்கெழு கொல்லி கோமளவல்லி கொடி இடை நெடு மழைக் கண்ணி
    இலங்கெழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே என திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட திருத்தலம் இது..

    – ஏழுமலை வெங்கடேசன்

     

  • 2016-08-07-07-06-59

    கிருஷ்ணா புஷ்கரம் விழாவையொட்டி, விஜயவாடாவில் திருப்பதி ஏழுமலையான் மாதிரி கோயில் கட்டப்பட்டுள்ளது.
    ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வரும் 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கிருஷ்ணா புஷ்கரம் எனப்படும் புனித நீராடும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகளில் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

    இவ்விழாவையொட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில், விஜயவாடா பொதுப் பணித்துறை மைதானத்தில் எழுமலையானின் மாதிரி கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் ஆகம விதிகளின்படி திறக்கப்பட்டது. திருமலையில் ஏழுமலையானுக்கு நடைபெறும் சுப்ரபாத சேவை உட்பட அனைத்து சேவைகளும் திருப்பதி மாதிரி கோயிலிலும் நடைபெறும்.

    இதேவேலையில் கிருஷ்ணா புஷ்கரம் விழாவுக்காக ஆந்திராவுக்கு மட்டும் பல மாநிலங்களைச் சேர்ந்த 3 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 4,000 சிறப்பு பஸ்களை இயக்க ஆந்திர அரசும் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தென் மத்திய ரயில்வேயும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கிருஷ்ணா நதிக்கரையின் பல இடங்களில் பக்தர்கள் நீராடுவதற்காக நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பவித்ர சங்ராமம் எனப்படும் இடத்தில் மட்டும் ஒரே நேரத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தினமும் 7.5 லட்சம் பக்தர்களுக்கு இலவசமாக மோர், குடிநீர், உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2016-08-07-07-06-59

    கிருஷ்ணா புஷ்கரம் விழாவையொட்டி, விஜயவாடாவில் திருப்பதி ஏழுமலையான் மாதிரி கோயில் கட்டப்பட்டுள்ளது.
    ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் வரும் 12 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை கிருஷ்ணா புஷ்கரம் எனப்படும் புனித நீராடும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகளில் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.

    இவ்விழாவையொட்டி, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில், விஜயவாடா பொதுப் பணித்துறை மைதானத்தில் எழுமலையானின் மாதிரி கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் ஆகம விதிகளின்படி திறக்கப்பட்டது. திருமலையில் ஏழுமலையானுக்கு நடைபெறும் சுப்ரபாத சேவை உட்பட அனைத்து சேவைகளும் திருப்பதி மாதிரி கோயிலிலும் நடைபெறும்.

    இதேவேலையில் கிருஷ்ணா புஷ்கரம் விழாவுக்காக ஆந்திராவுக்கு மட்டும் பல மாநிலங்களைச் சேர்ந்த 3 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 4,000 சிறப்பு பஸ்களை இயக்க ஆந்திர அரசும் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தென் மத்திய ரயில்வேயும் திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    கிருஷ்ணா நதிக்கரையின் பல இடங்களில் பக்தர்கள் நீராடுவதற்காக நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும், பவித்ர சங்ராமம் எனப்படும் இடத்தில் மட்டும் ஒரே நேரத்தில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் புனித நீராடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

    தினமும் 7.5 லட்சம் பக்தர்களுக்கு இலவசமாக மோர், குடிநீர், உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 60 ஆயிரம் அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். 10 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். மேலும் 1,400 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2016-08-07-04-27-14

    பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, ஃபேஸ்புக் நிறுவனர் Mark zuckerberg-ஐ சந்தித்தது நமக்கு எல்லாம் தெரியும். ஆனால் அப்போது தனது மனம்கவர்ந்த இந்திய கோவில் பற்றி மார்க் நம்ம பிரதமரிடம் என்ன சொன்னார் என்று உங்களுக்குத் தெரியுமா..

    ஃபேஸ்புக் தொடங்கிய காலகட்டத்தில் மார்க் அடுத்தடுத்து நிறைய சிக்கல்களை சந்தித்தாராம். அப்போது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிவுறுத்தியபடி இந்தியாவில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு சென்று வந்தவுடன் ஃபேஸ்புக் நிறுவனம் பல முன்னேற்றங்களை சந்தித்ததாக மார்க் மோடியிடம் கூறியிருக்கிறார். 

    மார்க்கின் மனதிற்கு இதமளித்த அந்த ஆசிரமம் உத்தர்கண்ட் மாநிலத்தில் இருக்கிறது. அதன் பெயர் ‘கைஞ்சி தாம்’. இங்கு ஒரு அனுமன் கோவிலும் உள்ளது. 2 நாட்கள் இந்த ஆசிரமத்தில் தங்கியும் இருந்திருக்கிறார் மார்க் சூக்கர்பெர்க்.

    1970ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், இந்த ஆசிரமத்தோடு இணைந்திருக்கும் கோவிலுக்கு சென்று அனுமனை தரிசித்த பிறகு தன் வாழ்வில் பல முன்னேற்றங்களை சந்தித்தாராம்.

    உத்தர்கண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலமான நைனிடாலில் இருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் குமோன் மலையில் அமைந்திருக்கிறது கைஞ்சி தாம்.

    இந்த ஆசிரமத்தை நிறுவியவர் Neem Karoli Baba. இவர் இப்போது உயிருடன் இல்லை. 1973ஆம் ஆண்டு சமாதி அடைந்துவிட்டார். 

    1973ஆம் ஆண்டு  Neem Karoli Baba மறைந்த பிறகு அவருக்கு ஆசிரமத்தின் உள்ளேயே கோவில் அமைக்கப்பட்டு அவருடைய சிலை 1976ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

    யார் கைஞ்சிதாம் செல்வதாக இருந்தாலும் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். மூத்த சாது ஒருவரிடம் சான்று பெற்றுச் சென்றால் 3 நாட்கள் அந்த ஆசிரமத்தில் தங்கவும் முடியும்.

    ஆன்மீக தலைவர்கள் Ma Jaya, Ram Dass, இசையமைப்பாளர்கள் Jai Uttal and Krishna Das, மனிதநேய ஆர்வலர் Larry Brilliant, எழுத்தாளர் Yvette Rosser and Daniel Goleman  ஆகியோர் இவருடைய தீவிர பக்தர்கள். வருடத்தின் பல மாதங்கள் குளிர் காரணமாக மூடப்பட்டிருக்கும் இந்த ஆசிரமம் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே திறந்திருக்கும். ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்சும் இந்த ஆசிரமத்தின் ஸ்டார் பக்தர்களில் ஒருவர்.

    மார்க்கிற்கு தொழில் வளர்ச்சி கொடுத்த இந்த ஆசிரமத்திற்கு நீங்களும் முடிந்தால் ஒரு தடவை போய் வாருங்கள்…

    – ஹேமா ராக்கேஷ்

     

     

    தந்தி தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர். ஆவணப் பட இயக்குனரும் கூட.. தர்மபுரி தொட்டில் குழந்தைகள் திட்டத்தை மையமாக வைத்து இவர் இயக்கிய பூந்தளிர்கள் என்ற ஆவணப்படம் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளது. முகநூலில் சாதனை பெண்களை அடையாளப்படுத்த ஆராதனா என்ற பக்கத்தில் பல சாதனை பெண்கள் குறித்து கட்டுரைகளை எழுதி வருகிறார்.

  • 2016-08-06-15-56-20

    அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

    இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

    எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இந்த அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் காணப்படுகின்றது.
    மனித உடலில் நெற்றி ஒரு முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது.

    நம் நெற்றியில் தான் வெப்பம் அதிகமாக வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை உட்கிரகித்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனால் தான் திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
    பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணமிடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

    இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

    சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் அணிவது வழக்கம்.
    நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

    விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

    1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

    2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

    3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

    ஆன்மீகத்தில் ஓர் அற்புதம்…
    நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

    தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். இப்படி ஆன்மீக செயல்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு அற்புதம் புதைந்துள்ளது.