Tag: பகவான்

  • 2016-08-06-15-56-20

    அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.

    இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன் கொண்டது. எம்மைச் சுற்றி அதிர்வுகள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே.

    எம்மை அறியாமலே அதிர்வுகளின் மத்தியில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எமது உடலானது இந்த அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளுகின்றது. திருநீறானது நல்ல அதிர்வுகளை ஏற்றுக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அந்தவகையில் உடலின் முக்கிய பாகங்களில் திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் காணப்படுகின்றது.
    மனித உடலில் நெற்றி ஒரு முக்கிய பாகமாகக் கருதப்படுகின்றது.

    நம் நெற்றியில் தான் வெப்பம் அதிகமாக வெளியிடப்படுகின்றது, உள் இழுக்வும்படுகின்றது. சூரியக்கதிர்களின் சக்தியை உட்கிரகித்து சரியான முறையில் உள்ளனுப்பும் அற்புதமான தொழிலை திருநீறு செய்யும். அதனால் தான் திருநீறை நெற்றியில் இடுவார்கள்.
    பசுமாட்டுச்சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு தனது உடலைத் தேற்றிச் சாணமிடும். அச்சாணம் தீயிலிடப்படும் போது ஏற்படும் இரசாயண மாற்றங்கள் உடலுக்கு மருத்துவத்தன்மையைக் கொடுக்கின்றது.

    இதைவிட இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வலைகளை உள்ளன. அதனால் அந்த இடத்தைப் பயன்படுத்தி மனவசியம் இலகுவாகச் செய்யமுடியும். அதனாலேயே மனவசியத்தைத் தடுக்க அந்த இடத்தில் திருநீறு, சந்தனம் போன்றவை இடப்படுகின்றன. சந்தனம் நெற்றியில் வெளியிடப்படும் வெப்பத்தை நீக்குகின்றது. நெற்றிப்பகுதியிலுள்ள frontal cortex என்னும் இடத்தில் அணியப்படும் சந்தனமானது வெப்பம் மிகுதியால் ஏற்படும் மூளைச்சோர்வை நீக்குகின்றது.

    சந்தனம் இரு புருவங்களுக்கும் இடையில் இடுகின்ற போது, முளையின் பின்பகுதியில் ஞாபகங்கள் பதிவுசெய்து வைத்திருக்கும் Hippocampus என்னும் இடத்திற்கு ஞாபகங்களை சிறப்பான முறையில் அனுப்புவதற்கு இந்த frontal cortex சிறப்பான முறையில் தொழிற்படும். உடலுக்குக் குளிர்ச்சியூட்டும் சந்தனத்தை நெற்றியிலும் உடலின் பல பாகங்களிலும் அணிவது வழக்கம்.
    நெற்றியின் இரு புருவங்களுக்கும் இடையிலுள்ள நெற்றிப் பொட்டிலே பட்டும்படாமலும் சுண்டுவிரலை நேராகப்பிடித்தால் மனதில் ஒருவகை உணர்வு தோன்றும். அந்த உணர்வை அப்படியே வைத்துத் தியானம் செய்தால் மனஒருமைப்பாடு தோன்றும், சிந்தனை தெளிவுபெறும், எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் நிலை தோன்றும். அந்த நெற்றிப் பொட்டு குளிர்ச்சியுடன் இருக்க வேண்டாமா? இதற்குச் சந்தனம் சரியான மருந்து.

    விபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்

    1. புருவ மத்தியில்(ஆக்ஞா சக்கரம்) வாழ்வின் ஞானத்தை ஈர்த்துக் கொள்ளலாம்.

    2.தொண்டைக்குழி(விசுத்தி சக்கரம்) நமது சக்தியை அதிகரித்துக் கொள்ளலாம்.

    3.நெஞ்சுக்கூட்டின் மையப்பகுதி தெய்வீக அன்பைப் பெறலாம். மேலும், பூதியை எடுக்கும் போது, மோதிரவிரலால் எடுப்பது மிகவும் சிறந்தது. ஏனென்றால், நம் உடலிலேயே மிகவும் பவித்ரமான பாகம் என்று அதைச் சொல்லலாம். நம் வாழ்வையே கட்டுப்படுத்தும் சூட்சுமம் அங்கு உள்ளது.

    ஆன்மீகத்தில் ஓர் அற்புதம்…
    நம் உடலின் அனைத்து நாடி நரம்புகளும் மூளையுடன் இணைக்கப் பட்டுள்ளன. உடலின் அநேக நரம்புகள் நெற்றிப் பொட்டின் வழியாகச் செல்கின்றன. ஆகவே நெற்றிப் பகுதி அதிக உஷ்ணமாகவே இருக்கும். நம் அடிவயிற்றில் நெருப்பு சக்தியிருக்கிறது. ஆனால் அந்த சூட்டின் தாக்கம் அதிகமாக உணரப் படுவது நெற்றிப் பொட்டில்தான். அதனால்தான் காய்ச்சல் என்றால் நெற்றியில் கைவைத்து உஷ்ணத்தின் தன்மையை அறிகிறோம். நமது மூளையையும், அதை இணைக்கும் நரம்புகளையும் குளிரச் செய்வதே நாம் நெற்றியில் பூசும் சந்தனக்குழம்பு செய்யும் தலையாய கடமை.

    தலையில் ஏற்படும் வியர்வை, தலை மேல் விழும் பனித்துளிகள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் சிறுபகுதி கெட்டிப்பட்டுத் தலைப்பகுதியில் தங்கிவிடும். இதனால் தலைவலி, தூக்கமின்மை ஏற்படும். இப்படிப்பட்ட கெட்ட நீரை உறிஞ்சி வெளியேற்றவே விபூதி தரிப்பதன் நோக்கம். நெற்றிப்பகுதி அதிக சூடாவதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிருமித் தொற்றைத் தடுக்கவே மஞ்சள்; அதிலிருந்து தயாரிக்கப்படும் குங்குமம். குங்குமம், சந்தனம், விபூதி ஆகிய மூன்றும் சிறந்த கிருமிநாசினிகள். அதை மறந்து பெண்கள் இன்று மஞ்சள், குங்குமத்தை ஒதுக்கி வருகின்றனர். பெரும்பாலான பெண்கள் ஸ்டிக்கர் பொட்டையே நம்பியிருக்கிறார்கள். இப்படி ஆன்மீக செயல்கள் ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொரு அற்புதம் புதைந்துள்ளது.

  • 2016-08-06-13-00-12

    கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் ஆகஸ்டு 7 ஆம் தேதி நடைபெறும் திருக்கல்யாண விழாவை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் மிருத்தியுஞ்சய ஹோமம் நடைபெற்றது.

    கருவூர் ஸ்ரீ மகா அபிஷேகக்குழு சார்பில் 18 ஆம் ஆண்டு திருக்கல்யாண விழா வெள்ளிக்கிழமை மிருத்தியுஞ்சய ஹோமத்துடன் தொடங்கியது. தீர்க்க ஆயுள்,நோய்கள் வராமல் காப்பது ஆகிய பல்வேறு மேன்மைக்காக இந்த ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஆகஸ்டு 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் மூலமந்திர ஹஸ்த்ர மிருத்தியுஞ்சய ஜபஹோமம், பூர்ணாஹூதி,மஹா தீபாராதனை,மூல ஆலய மிருத்தியுஞ்சொரூப பசுபதீஸ்வரர் சுவாமிக்கு மஹா அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு ராஜகோபுரத்துக்கு மாலை சாத்துதலும்,கரூர் மேட்டுத்தெரு பெருமாள் கோயிலுக்கு பெண் வீட்டு சீர்த்தட்டு அழைக்கப்பட்டு,முக்கிய வீதிகள் வழியே பசுபதீஸ்வரர் கோயிலை வந்தடையும் நிகழ்ச்சியும், அரசு இசைப்பள்ளி குமார சாமிநாதன் குழுவினரின் தேவார இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

  • idayam-kakkum-irudayaliswarar

    திருநின்றவூர்… திருமால் நின்ற ஊர்…. 108 திவ்யஸ்தளங்களில் ஒன்றாக விலங்கும் பக்தவச்சல பெருமாள் கோயில் உள்ளதால் இந்த ஊர் திருநின்றவூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் இது மட்டும் விசேஷம் இல்லை… இந்த ஊரில் தான் இருதயத்தை காக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது இருதயாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு லிங்க ரூபமாய்க் காட்சி அளிக்கும் சிவபெருமான் அருள்பாலிப்பதாகக் கூறுகிறது ஸ்தல புராணம்.

    சிவன் இங்கு மட்டும் இருதயத்தைக் காப்பதாகக் கூறுவதற்கு ஓர் சுவையான புராணக் கதை உள்ளது.

    சிவன் இருதயாலீஸ்வராக எழுந்தருளியிருக்கும் கருவறையின் மேற்கூரையில் நான்கு பிரிவுகளுடன் இதய வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இதய நோயால் துன்புற்றிருப்பவர்கள் இவ்விறைவனை மனமுருக வேண்டிப் பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது ஐதீகம்.
    சிவபக்தர் ஒருவர் உடல் முழுவதும் திருநீறைத் தொடர்ந்து பூசிவந்ததால் பூசலார் என்று அன்புடன் மக்கள் அழைத்து வந்தனர். சிவனுக்கு ஒர் கோவிலைத் திருநின்றவூரில் அமைக்க வேண்டும் என்று அவருக்கு ஆவல் ஏற்றப்பட்டது. எனவே அவரது சிந்தையில் உதித்த சிவனுக்கு கற்பனையாலேயே திருக்கோவிலைக் கட்டத் தொடங்கினார்.
    பின்னர் தியானத்தில் அமர்ந்த அவர், ஆகம விதிகளின்படி ஆலயம் அமைய வேண்டும் என்பதால் பாவனையிலேயே கோவில் அமைக்கும் ஸ்தபதிகளை வரவழைத்துக் கலை நயம் மிக்க சிற்பங்களை உருவாக்கினார். பிராகாரங்களை எழுப்பினார். தச்சர்களை வரவழைத்து ஆலயத்தின் கதவுகளைக்கூடச் சிந்தனையிலேயே செதுக்கினார்.

    இரவு, பகல் பாராமல் இருதயத்திலேயே கோயில் எழுப்பும் இனிய பணியில் ஈடுபட்டார். இறுதியில் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறித்து, கையிலைநாதனை அங்கே குடியேறுமாறு மனம் உருக வேண்டினார்.
    இது இப்படி இருக்க அதே காலகட்டத்தில் காஞ்சியில் சிவனுக்கு ஒரு கோயிலைச் சிறப்புறக் கட்டி முடித்திருந்தான் ராஜசிம்ம பல்லவன். மன்னன் அமைத்த கோவில் அல்லவா? இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த கும்பாபிஷேக நாளுக்கு முதல் நாள் இரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், தான் அதே தினத்தில் திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தர் எழுப்பியுள்ள ஆலயத்தில் எழுந்தருளப் போவதால், வேறொரு நாளில் பல்லவன் கும்பாபிஷேகம் நடத்திக் கொள்ளலாம் என்று கூறி மறைந்தார்.
    கண் விழித்த பல்லவ மன்னனுக்கு ஆச்சரியம்… பல ஆண்டுகள் இரவு பகல் பாராது தான் நிர்மாணித்த ஆலயத்தைவிட திருநின்றவூர் ஆலயத்தின் சிறப்பை அறிய விரும்பினான்.
    பின்னர் தான் நிர்மாணித்த ஆலய கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு மந்திரி பிரதானிகள் புடைசூழ திருநின்றவூரை அடைந்தான் பல்லவமன்னன்.
    ஊரோ பரபரப்பு ஏதுமின்றி அமைதியாக இருந்தது. மன்னன் திடீரென்று வந்ததால் ஊர் மக்கள் கூடினர்.

    அவர்களிடம் பூசலார் குறித்தும் அவர் நிர்மாணித்த திருக்கோவில் குறித்தும் விசாரித்தான் மன்னன். ‘‘பூசலாரா? அவர் சிவனேன்னு மரத்தடி யில் உட்கார்ந்து தியானம் பண்ணிட்டிருக்காரே தவிர, கோயில் ஏதும் கட்டின மாதிரி தெரியலையே ’’ என்று பதில் கிடைத்தது.
    பூசலார் இருந்த மரத்தடியை அடைந்த மன்னனும் மற்றையோரும் அங்கு ஓர் அதிசயக் காட்சியைக் கண்டனர். கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் தெய்வீக ஒளி வீசியது. அங்கே மானசீகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆலயத்தில் வேள்வியும், மற்ற மங்கலச் சடங்குகளும் மனதளவில் நடந்தேறுவதை அனைவராலும் காண முடிந்தது. நல்ல நேரத்தில் தனக்கான சந்நிதியில் சிவன் அனைவரும் பார்க்கக் குடியேறினான். கைலாசநாதனைக் கண்குளிரத் தரிசிக்கும் பாக்கியத்தினை மன்னனுடன், ஊர் மக்கள் கண்டனர். பல்லவ மன்னனோ, அவர் இதயத்தில் எழுப்பிய அதே கோயிலை நிலவுலகில் நிர்மாணிக்க அனுமதி கோரினான். பூசலார் சம்மதித்ததால் இததிருக்கோவிலை மன்னன் நிர்மாணித்தான்.

    இருதயாலீஸ்வரர் திருக்கோயில் சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் திருநின்றவூரில் அமைந்துள்ளது. பூசலாரின் இதயத்தில் எழுந்தருளிய காரணத்தால் சிவனுக்கு இருதயாலீஸ்வரன் என்று பெயர். அம்பாள் திருநாமம் மரகதாம்பிகை.

  • 2016-08-06-12-08-39

    திருநின்றவூர்… திருமால் நின்ற ஊர்…. 108 திவ்யஸ்தளங்களில் ஒன்றாக விலங்கும் பாக்தவச்சல பெருமாள் கோயில் உள்ளதால் இந்த ஊர் திருநின்றவூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஊரில் இது மட்டும் விஷேடம் இல்லை… இந்த ஊரில் தான் இருதயத்தை காக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்குப் பரிகாரத் தலமாக விளங்குகிறது இருதயாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு லிங்க ரூபமாய்க் காட்சி அளிக்கும் சிவபெருமான் அருள்பாலிப்பதாகக் கூறுகிறது ஸ்தல புராணம்.

    சிவன் இங்கு மட்டும் இருதயத்தைக் காப்பதாகக் கூறுவதற்கு ஓர் சுவையான புராணக் கதை உள்ளது.

    சிவன் இருதயாலீஸ்வராக எழுந்தருளியிருக்கும் கருவறையின் மேற்கூரையில் நான்கு பிரிவுகளுடன் இதய வடிவம் செதுக்கப்பட்டுள்ளது. இதய நோயால் துன்புற்றிருப்பவர்கள் இவ்விறைவனை மனமுருக வேண்டிப் பிரார்த்தனை செலுத்தினால் அந்நோய்களிலிருந்து விடுபடுகிறார்கள் என்பது ஐதீகம்.
    சிவபக்தர் ஒருவர் உடல் முழுவதும் திருநீறைத் தொடர்ந்து பூசிவந்ததால் பூசலார் என்று அன்புடன் மக்கள் அழைத்து வந்தனர். சிவனுக்கு ஒர் கோவிலைத் திருநின்றவூரில் அமைக்க வேண்டும் என்று அவருக்கு ஆவல் ஏற்றப்பட்டது. எனவே அவரது சிந்தையில் உதித்த சிவனுக்கு கற்பனையாலேயே திருக்கோவிலைக் கட்டத் தொடங்கினார்.
    பின்னர் தியானத்தில் அமர்ந்த அவர், ஆகம விதிகளின்படி ஆலயம் அமைய வேண்டும் என்பதால் பாவனையிலேயே கோவில் அமைக்கும் ஸ்தபதிகளை வரவழைத்துக் கலை நயம் மிக்க சிற்பங்களை உருவாக்கினார். பிராகாரங்களை எழுப்பினார். தச்சர்களை வரவழைத்து ஆலயத்தின் கதவுகளைக்கூடச் சிந்தனையிலேயே செதுக்கினார்.

    இரவு, பகல் பாராமல் இருதயத்திலேயே கோயில் எழுப்பும் இனிய பணியில் ஈடுபட்டார். இறுதியில் கும்பாபிஷேகத்துக்கான நாள் குறித்து, கையிலைநாதனை அங்கே குடியேறுமாறு மனம் உருக வேண்டினார்.
    இது இப்படி இருக்க அதே காலகட்டத்தில் காஞ்சியில் சிவனுக்கு ஒரு கோயிலைச் சிறப்புறக் கட்டி முடித்திருந்தான் ராஜசிம்ம பல்லவன். மன்னன் அமைத்த கோவில் அல்லவா? இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகத்திற்காக நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. இந்த கும்பாபிஷேக நாளுக்கு முதல் நாள் இரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், தான் அதே தினத்தில் திருநின்றவூரில் பூசலார் என்ற பக்தர் எழுப்பியுள்ள ஆலயத்தில் எழுந்தருளப் போவதால், வேறொரு நாளில் பல்லவன் கும்பாபிஷேகம் நடத்திக் கொள்ளலாம் என்று கூறி மறைந்தார்.
    கண் விழித்த பல்லவ மன்னனுக்கு ஆச்சரியம்… பல ஆண்டுகள் இரவு பகல் பாராது தான் நிர்மாணித்த ஆலயத்தைவிட திருநின்றவூர் ஆலயத்தின் சிறப்பை அறிய விரும்பினான்.
    பின்னர் தான் நிர்மாணித்த ஆலய கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு மந்திரி பிரதானிகள் புடைசூழ திருநின்றவூரை அடைந்தான் பல்லவமன்னன்.
    ஊரோ பரபரப்பு ஏதுமின்றி அமைதியாக இருந்தது. மன்னன் திடீரென்று வந்ததால் ஊர் மக்கள் கூடினர்.

    அவர்களிடம் பூசலார் குறித்தும் அவர் நிர்மாணித்த திருக்கோவில் குறித்தும் விசாரித்தான் மன்னன். ‘‘பூசலாரா? அவர் சிவனேன்னு மரத்தடி யில் உட்கார்ந்து தியானம் பண்ணிட்டிருக்காரே தவிர, கோயில் ஏதும் கட்டின மாதிரி தெரியலையே ’’ என்று பதில் கிடைத்தது.
    பூசலார் இருந்த மரத்தடியை அடைந்த மன்னனும் மற்றையோரும் அங்கு ஓர் அதிசயக் காட்சியைக் கண்டனர். கண்மூடி அமர்ந்திருந்த பூசலாரின் இதயப் பகுதியில் தெய்வீக ஒளி வீசியது. அங்கே மானசீகமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த ஆலயத்தில் வேள்வியும், மற்ற மங்கலச் சடங்குகளும் மனதளவில் நடந்தேறுவதை அனைவராலும் காண முடிந்தது. நல்ல நேரத்தில் தனக்கான சந்நிதியில் சிவன் அனைவரும் பார்க்கக் குடியேறினான். கைலாசநாதனைக் கண்குளிரத் தரிசிக்கும் பாக்கியத்தினை மன்னனுடன், ஊர் மக்கள் கண்டனர். பல்லவ மன்னனோ, அவர் இதயத்தில் எழுப்பிய அதே கோயிலை நிலவுலகில் நிர்மாணிக்க அனுமதி கோரினான். பூசலார் சம்மதித்ததால் இததிருக்கோவிலை மன்னன் நிர்மாணித்தான்.

    இருதயாலீஸ்வரர் திருக்கோயில் சென்னையிலிருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் திருநின்றவூரில் அமைந்துள்ளது. பூசலாரின் இதயத்தில் எழுந்தருளிய காரணத்தால் சிவனுக்கு இருதயாலீஸ்வரன் என்று பெயர். அம்பாள் திருநாமம் மரகதாம்பிகை.

  • 2016-08-05-13-47-05

    ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் ஆடிப்பூர தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீஆண்டாளின் கோயிலில், இந்த ஆண்டு ஜூலை 28-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவின் 5-ம் திருநாளான ஆகஸ்டு 1-ம் தேதி காலை ஸ்ரீபெரியாழ்வார் மங்களாசாசனம் நடைபெற்றது.

    ஏழாம் திருநாளான புதன்கிழமை இரவு கிருஷ்ணன்கோவிலில் ஸ்ரீஆண்டாள் மடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பதாம் திருநாளான வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிகளுக்கு ஏகாந்த திருமஞ்சனம் நடைபெற்றது.

    தனித்தனி தோளுக்கினியான்களில் புறப்பாடு நடைபெற்று திருத்தேர் எழுந்தருளல் நடைபெற்றது. பின்னர் காலை 8.05 மணிக்கு தேரோட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் தேரை நான்கு ரத வீதிகளின் வழியே வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

  • 2016-08-05-13-17-02

    ஆடிப் பூரம் ஆடிமாதம் பூர நட்சத்திரத்தில்தான் அம்மன் தோன்றினாள். தன் பக்தர்களை குழந்தைகளாக பார்த்தாலும் அம்மனுக்கு ஒரு கவலை இருந்தது. அதாவது திருமணமான எல்லா பெண்களையும் போல தானும் தாய்மை அடையவில்லையே என்று மனம் ஏங்கினாள். முருகனும், விநாயகனும் மற்றும் உன்னுடைய பக்தர்களும் உனக்கு குழந்தைகள்தான் என்று ஈசன், அம்மனை சமாதானம் செய்தாலும் அம்பாள் ஆறுதல் அடையவில்லை. அதனால் புட்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் நிறைமாத கர்ப்பிணியான வடிவத்தில் காட்சி தந்தாள். இதனால் தேவலோக பெண்கள் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அலங்காரம் செய்தார்கள். இதனால் அம்மனின் மனம் குளிர்ந்தது.

    ஸ்ரீமகாவிஷ்ணு, விநாயகர் முன் தோப்புகரணம் போட்டதால் இன்றுவரை விநாயகர் முன் நாம் தோப்புகரணம் போடுவதுபோல, அம்மனுக்கு தேவலோகத்தினர் வளைகாப்பு நடத்தி, வளையல் அணிவித்து அம்மனை மகிழ்வித்ததால் இன்றுவரை அம்பாளின் பக்தர்களாகிய நாமும் அம்பாளுக்கு வளையல்களை அணிவித்து அம்மனின் மனதை சந்தோஷப்படுத்துகிறோம். அதுபோலவே இன்னும் ஒரு சம்பவமும் இருக்கிறது.

    வளையல் அணியவே புற்றில் இருந்த வெளியே வந்த அம்மன் பொதுவாகவே பெண்களுக்கு கைநிறைய கலர் கலராக வளையல் அணிந்து அழகு பார்க்க ஆசைப்படுவார்கள். அம்மனுக்கும் அந்த ஆசை இருக்காதா?. அவளும் பெண்தானே. சக்திதேவி தன் ஆசையை எப்படி நிறைவேற்றிக்கொண்டாள் தெரியுமா? ஒரு வளையல் வியாபாரி ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வளையல்களை விற்க வருவது வழக்கம். ஒருநாள் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்த வளையல்களில் பாதி விற்றுவிட்டார் மீதி இருந்த வளையலை மறுநாள் விற்கலாம் என்று நினைத்தார். பெரியபாளையம் வரும்போது அவருக்கு மிகுந்த களைப்பு ஏற்பட்டது. நடக்க முடியாத அளவில் சோர்வடைந்தார். இதனால், அங்கு இருந்த ஒரு வேப்பமரத்தடியில் வளையல்களை வைத்துவிட்டு அந்த வளையல் வியாபாரி அங்கேயே தூங்கிவிட்டார். நல்ல தூக்கம். சில மணி நேரத்திற்கு பின் கண் விழித்து பார்த்தபோது, தன் அருகில் வைத்திருந்த வளையல்கள் காணாமல் போயிருப்பதை கண்டு பதறினார். சுற்றுமுற்றும் தேடினார். கிடைக்கவில்லை.
    கவலையுடன் தன் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்றுவிட்டார். அன்றிரவு, அந்த வளையல் வியபாரியின் கனவில் அம்மன் தோன்றினாள். “நான் ரேணுகை பவானி. நீ கொண்டு வந்த வளையல்கள் என் கைகளை அலங்கரித்து இருக்கிறது பார். என் மனதை மகிழ்வித்த உனக்கு வரங்கள் அளிக்கிறேன். பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தின் அடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்.” என்றாள் அம்பாள். தான் கண்ட கனவை தன் நண்பர்களிடத்திலும், உறவினர்களிடத்திலும் சொன்னார் வியாபாரி. அத்துடன் சென்னைக்கு அவர்களை அழைத்து வந்து, பெரியபாளையம் மக்களிடத்திலும் தான் கண்ட கனவை பற்றி சொன்னார்.

    இதன் பிறகுதான் பெரியபாளையத்தில் சுயம்புவாக தோன்றிய அம்மனுக்கு ஆலயம் கட்டி வழிபாடு செய்தார்கள். அம்மனுக்கும் கைநிறைய வளையல் அணியவேண்டும் என்று ஆசை ஏற்பட்டதால்தான் அந்த வளையல் வியாபாரி வைத்திருந்த வளையல்களை எடுத்துக்கொண்டார் அம்பாள். வளையல் அணிய வேண்டும் என்ற ஆசையால்தான் புற்றில் இருந்தும் வெளிப்பட்டாள். அம்மனுக்கு அணிவித்த வளையல்களில் இரண்டு வாங்கி பெண்கள் அணிந்துகொண்டால், குடும்பத்தில் சுபிக்ஷங்கள் ஏற்படும். பிள்ளை வரம் வேண்டுபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். அகிலத்தின் நாயகி சந்தோஷப்பட்டால் அகில உலகமே மகிழ்சியடையும். அதேபோல ஆண்டாள் தோன்றிய தினம் ஆடிபூரம். இந்த நன்னாளில் ஆண்டாளை தரிசித்து பூமாலை, வளையல்களை கொடுத்து வணங்கி ஆண்டாளின் ஆசியை பெற்ற வளையல்களில் இரண்டு வளையல்களை அணியலாம். அதேபோல ஆண்கள் ஆண்டாளுக்கு அணிவித்த மலர்களை சிறிது வாங்கி தங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டாலும் நல்ல முயற்சிகள் வெற்றி பெறும். மங்களங்கள் யாவும் கைக்கூடும்.

  • 2016-08-05-08-16-52

    ஆண்டாள் அவதரித்த திருநாளான ஆடிப்பூரம் அம்மன் கோயில்களில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
    ஆடிப்பூரம்… ஆடி மாதத்தில் ‘பூரம்’ நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் தினமே ஆடிப்பூரம். இது அனைத்து அம்மனுக்கும் உரிய திருநாளாக போற்றப்படுகிறது.
    ஆண்டாள் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூரை, ‘கோதாதேவி அவதார ஸ்தலம்’ என்றும் அழைப்பதுண்டு. இதனால் ஆடிப்பூரத்தன்று திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.

    இந்நாளில் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் தேரோட்டமும் நடைபெறும். மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். புனிதமான இந்த தினத்தில் அம்பிகை பூப்பெய்தினாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அம்பிகைக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தல் சடங்கும் நடத்தி பக்தர்கள் வழிபடுவார்கள்.

    வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பூரம் வருவது கூடுதல் சிறப்பு. ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த போது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. வடமாநிலங்களில் ‘கோதாதேவி’ என்று அழைப்பர்.
    ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வைணவ கோவில்கள் உள்ளிட்ட பல கோவில்களில் அம்பாளுக்கு வளைகாப்பு, விளக்கு பூஜை என சிறப்பு வழிபாடு இன்று நடத்தப்படுகிறது.
    மேலும், சித்தர்கள், யோகிகள் இந்நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

  • 2016-08-05-07-34-54

    ஆன்மீகத்தின் முக்கிய அம்சம் இறைவனும், சகலமும் அவனே என சரணாகதி அடைவதும்தான். ஆனால் ஆன்மீக விவகாரத்தில் இறைவனை எவ்வழியில் யார்யார் எப்படியெப்படி காண்கிறார்கள் என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்.
    பெருமாள், முருகன், காளி, சிவன் லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, மீனாட்சி என பல வடிவங்களில் சொல்லப்படும் இறைசக்தியை, சிலர் மறுப்பார்கள். அதுவும் அப்பட்டமான உண்மையே..அதாவது, ‘’எல்லாவற்றையும் மிஞ்சிய சக்தி உண்டு. ஆனால் அதன் வடிவம் இப்படித்தான் என்று வரையறைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது’’ என்பதே இதன் பின்னணி.
    உதாரணத்திற்கு ஏதாவது உருவக்கடவுளைப்பற்றி விவாதிக்கையில், அந்த கடவுளின் சக்தி, எல்லை போன்றவை பற்றி கேள்விகள் எழும். அகில உலகத்தையும் ஒரு கடவுள் ஆட்டிப்படைக்கிறார் என்றால், ஒவ்வொரு நாட்டிலும், எத்தனையெத்தனையோ கடவுள்கள் எப்படி உருவாகமுடியும். சிவன்தான் மனித குலத்தை படைக்கிறார் என்றால் அவர் ஏன் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் ஆட்கொள்ளமுடியவில்லை?
    இப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளெல்லாம் தேவையில்லை என்பதே இறைவனே இல்லாத நிறைபக்தி நிலை.
    உலகில் பெரும்பாலான குற்றங்களை தடுப்பது அரசோ, காவல்துறை மீதான பயமோ அல்ல. யாரும் பார்க்கமுடியாத, கண்டுபிடிக்கமுடியாத குற்றங்கள், மோசடிகள் போன்றவற்றை ஒரு மனிதன் தவிர்ப்பது, அவனை ஆட்டிப்படைக்கும் மனசாட்சியால் மட்டுமே.
    வறுமையோடும் பசியோடும் இருப்பவர்கள், தனியாக இருக்கும் ஒரு குழந்தையின் வசமுள்ள விலையுயர்ந்த ஆபரணங்களை சுலபமாக களவாடிவிடமுடியும். கொள்ளை புத்தி கொண்ட ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலானோர் அப்படி செய்யாததற்கு காரணம், அப்படி செய்வது பாவம் என, யாருடைய உந்துதலும் இன்றி மனசாட்சி தடுப்பதாலேயே.
    மற்றவர்களிடமிருந்து பணம், பொருள் உட்பட பல விஷயங்களை பிறர் கண்டறியாதவகையில் அபகரிக்கும் வாய்ப்பு, எடுத்துப்போகும் வாய்ப்பு எல்லோருக்குமே கிடைக்கும். ஆனால் அப்படி செய்கிறோமா? தெருவில் கேட்பாரற்று கிடக்கும் ஒரு முக்கிய பொருளைக் கண்டால் அதன் உரியவரிடம் சேர்க்கத்தான் பெரும்பாலானோரின் மனது துடிக்கும். இதுதான் மனசாட்சியின் மகிமை.
    இப்படி எல்லாவகையிலும் குற்றங்களை தடுத்தும் நல்ல புத்திகளை கொடுப்பதுமான மனசாட்சியும், தன்னம்பிக்கையும் சேர்ந்த ஒரு அம்சம்தான் நம்முள் ஒளிந்திருக்கும் அற்புதமான ஆற்றல்.
    கடவுள் நமக்கு அள்ளியும் கொடுக்கவும் மாட்டார்.. நம்மிடமிருந்து பறிக்கவும் மாட்டார். நம்மை ஆசிர்வதிக்கவும் மாட்டார்..தண்டிக்கவும் மாட்டார்.. ஏனெனில் கடவுள் என்ற ஒருவரே கிடையாது. நம்முள் இருக்கும் மனசாட்சியும், ‘இனி நடக்கும் எதுவும் நல்லதாகவே நடக்கும்’ என்ற பலத்தை தரும் தன்னம்பிக்கையும் கலந்த ஒரு அரூபமே, மகா சக்தி என்கிற சிந்தனை.
    கும்பிடுகிற கோவிலில் உள்ள சாமி எதுவாக இருந்தாலும், அது நம்முடைய உள்தோற்றதை பிரதிபலிக்கும் முகக் கண்ணாடிதான்.
    வழிபாடு என்ற பெயரில் நாம் சரணாகதி அடைகிறோம். நம்முடைய தவறுகளை மனம்விட்டு ஒப்புக்கொண்டு மனதை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யமாட்டேன் என திருத்திக்கொள்கிறோம். நாம் கும்பிடும் சாமி நமக்கு நல்லதே செய்யும் என அடியோடு நம்புகிறோம்..
    எப்பேர்பட்டவரும் கோவிலுக்குள் வழிபடும்போது சரணாகதி அடையாமல் ‘’நான் வந்திருக்கிறேன்..எனக்கு நீ அருள் புரிந்தே தீரவேண்டும்’’ என்று அகங்காரத்துடன் வழிபடுவதே கிடையாது.. சர்வ நாடிகளும் ஒடுங்கிவிடும் தருணம்.
    நமக்குள் இருக்குள் ஆற்றலை நாமே வழிபட்டுக்கொள்வதுதான் இறைவனில்லா ஆனால் ஈடுஇணையில்லா பக்தி.

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.

     
     
  • 2016-08-05-07-34-54

    ஆன்மீகத்தின் முக்கிய அம்சம் இறைவனும், சகலமும் அவனே என சரணாகதி அடைவதும்தான். ஆனால் ஆன்மீக விவகாரத்தில் இறைவனை எவ்வழியில் யார்யார் எப்படியெப்படி காண்கிறார்கள் என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும்.
    பெருமாள், முருகன், காளி, சிவன் லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, மீனாட்சி என பல வடிவங்களில் சொல்லப்படும் இறைசக்தியை, சிலர் மறுப்பார்கள். அதுவும் அப்பட்டமான உண்மையே..அதாவது, ‘’எல்லாவற்றையும் மிஞ்சிய சக்தி உண்டு. ஆனால் அதன் வடிவம் இப்படித்தான் என்று வரையறைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது’’ என்பதே இதன் பின்னணி.
    உதாரணத்திற்கு ஏதாவது உருவக்கடவுளைப்பற்றி விவாதிக்கையில், அந்த கடவுளின் சக்தி, எல்லை போன்றவை பற்றி கேள்விகள் எழும். அகில உலகத்தையும் ஒரு கடவுள் ஆட்டிப்படைக்கிறார் என்றால், ஒவ்வொரு நாட்டிலும், எத்தனையெத்தனையோ கடவுள்கள் எப்படி உருவாகமுடியும். சிவன்தான் மனித குலத்தை படைக்கிறார் என்றால் அவர் ஏன் அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் ஆட்கொள்ளமுடியவில்லை?
    இப்படிப்பட்ட சிக்கலான கேள்விகளெல்லாம் தேவையில்லை என்பதே இறைவனே இல்லாத நிறைபக்தி நிலை.
    உலகில் பெரும்பாலான குற்றங்களை தடுப்பது அரசோ, காவல்துறை மீதான பயமோ அல்ல. யாரும் பார்க்கமுடியாத, கண்டுபிடிக்கமுடியாத குற்றங்கள், மோசடிகள் போன்றவற்றை ஒரு மனிதன் தவிர்ப்பது, அவனை ஆட்டிப்படைக்கும் மனசாட்சியால் மட்டுமே.
    வறுமையோடும் பசியோடும் இருப்பவர்கள், தனியாக இருக்கும் ஒரு குழந்தையின் வசமுள்ள விலையுயர்ந்த ஆபரணங்களை சுலபமாக களவாடிவிடமுடியும். கொள்ளை புத்தி கொண்ட ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலானோர் அப்படி செய்யாததற்கு காரணம், அப்படி செய்வது பாவம் என, யாருடைய உந்துதலும் இன்றி மனசாட்சி தடுப்பதாலேயே.
    மற்றவர்களிடமிருந்து பணம், பொருள் உட்பட பல விஷயங்களை பிறர் கண்டறியாதவகையில் அபகரிக்கும் வாய்ப்பு, எடுத்துப்போகும் வாய்ப்பு எல்லோருக்குமே கிடைக்கும். ஆனால் அப்படி செய்கிறோமா? தெருவில் கேட்பாரற்று கிடக்கும் ஒரு முக்கிய பொருளைக் கண்டால் அதன் உரியவரிடம் சேர்க்கத்தான் பெரும்பாலானோரின் மனது துடிக்கும். இதுதான் மனசாட்சியின் மகிமை.
    இப்படி எல்லாவகையிலும் குற்றங்களை தடுத்தும் நல்ல புத்திகளை கொடுப்பதுமான மனசாட்சியும், தன்னம்பிக்கையும் சேர்ந்த ஒரு அம்சம்தான் நம்முள் ஒளிந்திருக்கும் அற்புதமான ஆற்றல்.
    கடவுள் நமக்கு அள்ளியும் கொடுக்கவும் மாட்டார்.. நம்மிடமிருந்து பறிக்கவும் மாட்டார். நம்மை ஆசிர்வதிக்கவும் மாட்டார்..தண்டிக்கவும் மாட்டார்.. ஏனெனில் கடவுள் என்ற ஒருவரே கிடையாது. நம்முள் இருக்கும் மனசாட்சியும், ‘இனி நடக்கும் எதுவும் நல்லதாகவே நடக்கும்’ என்ற பலத்தை தரும் தன்னம்பிக்கையும் கலந்த ஒரு அரூபமே, மகா சக்தி என்கிற சிந்தனை.
    கும்பிடுகிற கோவிலில் உள்ள சாமி எதுவாக இருந்தாலும், அது நம்முடைய உள்தோற்றதை பிரதிபலிக்கும் முகக் கண்ணாடிதான்.
    வழிபாடு என்ற பெயரில் நாம் சரணாகதி அடைகிறோம். நம்முடைய தவறுகளை மனம்விட்டு ஒப்புக்கொண்டு மனதை சுத்தப்படுத்திக்கொண்டு மீண்டும் தவறு செய்யமாட்டேன் என திருத்திக்கொள்கிறோம். நாம் கும்பிடும் சாமி நமக்கு நல்லதே செய்யும் என அடியோடு நம்புகிறோம்..
    எப்பேர்பட்டவரும் கோவிலுக்குள் வழிபடும்போது சரணாகதி அடையாமல் ‘’நான் வந்திருக்கிறேன்..எனக்கு நீ அருள் புரிந்தே தீரவேண்டும்’’ என்று அகங்காரத்துடன் வழிபடுவதே கிடையாது.. சர்வ நாடிகளும் ஒடுங்கிவிடும் தருணம்.
    நமக்குள் இருக்குள் ஆற்றலை நாமே வழிபட்டுக்கொள்வதுதான் இறைவனில்லா ஆனால் ஈடுஇணையில்லா பக்தி.

    – ஏழுமலை வெங்கடேசன்

    தமிழின் மூத்த ஊடகவியலாளர். சன், ஜீ டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். வளர்ந்து வரும் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிலவற்றிற்கு ஆலோசகராக இருப்பவர். சமூக நிகழ்வுகள் குறித்த தனது ஆழமான பார்வையை சமூக ஊடகங்களில் ஆணித்தரமாக பதிவு செய்யத் தவறாதவர். இதன் மூலம் ஃபேஸ்புக்கில் மிகப்பெரிய வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர்.

     
     
  • 2016-08-04-17-51-36

    விராலிமலையில் அறுபத்தி ஆறாம் ஆண்டு அருணகிரிநாதர் விழா ஆகஸ்டு 5 ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது. 

    விராலிமலையில் அருணகிரிநாதருக்கு கோயில் அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் 66 ஆண்டுகளாக தொடர்ந்து விழா எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வரும் ஆகஸ்டு 5-ஆம் தேதி தொடங்கி 4 நாள்கள் நடைபெறுகிறது.
    மாலை 5 மணிக்கு விழா பேருரையுடன் தொடங்கும் முதல் நாள் நாள் நிகழ்வில் திருபுகழ் எனும் தலைப்பில் சுந்தரம் ஆன்மீக சொற்பொழிவாற்றுகிறார், அதனைத் தொடர்ந்து ஆர். காஷ்யாப் குழுவினரின் பக்திபாடல் கச்சேரியும், திருப்பதி தேவஸ்தான இசைக்கல்லூரி ஆசிரியர் காளகஸ்தி முனிக்குமார் நாதஸ்வரம், விராலிமலை ஆர்எம்ஜெ. கார்த்திக் சிறப்புதவுல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
    2-ஆம் நாள் மாலை 7 மணிக்கு விராலிமலை வேந்தன் என்றத் தலைப்பில் மனம் சேர சந்திரகாசனின் சமய சொற்பொழிவும், எம். ஜெயகுமாரின் சாக்ஸ போன் இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது

    3-ஆம நாள், மங்கள இசையுடன் தொடங்கும் விழாவில் கந்தன் கருணை எனும் தலைப்பில் ம. எழிலரசியின் ஆன்மீகச் சொற்பொழிவும், கோவிந்தராஜன் குழுவினரின் லயநாத இன்ப இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    4-ஆம் நாள், விடையாத்தியுடன் விழா நிறைவடைகிறது.3 நாள்களும் விழா மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 12 மணிவரை நடைபெறும். விழா நாள்களில் மலை மீது உள்ள முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
    விராலிமலை அருள்மிகு சுப்பிரமணியர் மலைக்கோயிலில் அருணகிரிநாதருக்கு அஷ்டமாசித்தி(கூடுவிட்டுகூடுபாயும் வித்தை) தந்தருளிய சிறப்பு பெற்றத்தலமாகும், அதோடு இங்கோயிலில் நாரத மாமுனிக்கு சாபவிமோச்சனம் தந்தருளியதாகவும் கூறப்படும் இத்தலம் 207 படிகள் கொண்டதாகும் முருகன் ஆறுமுகங்களுடன் வள்ளி,தெய்வானை சமேதகராக மலைமீது அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.