Tag: 2ஆம்

  • November 2 2021 Rasipalan

    நவம்பர் 2 – பிரதோஷ நாள் ராசிபலன்….
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     முயற்சி
    ரிஷபம் –     செலவு
    மிதுனம் –     சாதனை 
    கடகம் –      மகிழ்ச்சி
    சிம்மம் –      விருப்பம்
    கன்னி –      சினம்  
    துலாம் –      நட்பு
    விருச்சிகம் –       நலம் 
    தனுசு –       பொறுமை 
    மகரம் –      வரவு
    கும்பம் –     அமைதி
    மீனம் –       சுகம்
    சந்திராஷ்டமம்    –    பூரட்டாதி

  • November 02 2021 Pradhosham

    நவம்பர் 2 – பிரதோஷம்
    பிலவ வருடம் – ஐப்பசி  16
     பிரதோஷம் 
    02-நவ-2021 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    திரையோதசி          
    திதி நேரம்    :    துவாதசி    கா    8.57
    நட்சத்திரம்    :    உத்திரம்    கா    10.00
    யோகம்    :    அமிர்த-சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    பூரட்டாதி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Karaikaal amayar puranam – Part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    கைப்பிடித்த காரிகையைக் 
    கடவுள் அம்சம் என உணர்ந்து கொண்ட பரமதத்தன் 
    ஏதேனும் 
    சாக்கு போக்கு சொல்லி புனிதவதியிடமிருந்து அன்றாடம் விலக ஆரம்பித்தான். 

    நீண்டநாள் 
    விலகவும் திட்டமிட்டான். 

    'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்னும் முதுமொழி அவன் நினைவுக்கு வந்தது.

    வணிகத்தைப் பெருக்குவதாக உறவினர்களிடம் சொல்லி பெரும்பொருள் ஈட்டு வர விரும்புவதாக 
    உறுதிபடக் கூறி அவர்களிடம் ஆசி பெற்றான்.

    புனிதவதியார் கூட மறுப்பேதும் சொல்லாமல் கண்ணீரோடும் 
    இனிமேலாவது 
    நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடும் 
    மீறி வந்த விம்மலோடும் அனுப்பிவைத்தார்.

    துறைமுகத்தில் 
    மரக்கலம் தயாராக இருந்தது.

    மனதார 
    குலதெய்வமாய் கருதிய 
    புனிதவதியாரை வணங்கிவிட்டு 
    கடல் வணிகர்கள் வழக்கமாக வணங்கும் வருண பகவானை துதித்து விட்டு 
    கடல் பயணம் மேற்கொண்டான் பரமதத்தன்.

    கணவன் போன 
    திசை வணங்கியபடி காத்திருந்தார் 
    கற்பு நெறியுடன் புனிதவதியார்.

    கணவன் திரும்ப வந்து கை பிடிப்பான்.
    அவன் மனதும் 
    தம்மிருவர் வாழ்வும் மாறும் என்ற 
    பெருத்த நம்பிக்கையோடு
    சிவ வழிபாட்டில் 
    பெருநேரம் கழித்தார்
    பெருமாட்டியார்.

    தினமும் 
    காலையில் கதிரவன் கடலில் எழுந்தான். மாலையில் மறைந்தான். மாலை முடிந்து 
    இரவு வந்தது.
    நிலவு வந்தது. 
    வளர்ந்தது. 
    தேய்ந்தது. 
    மறைந்தது.

    தீதறியா 
    புனிதவதியார் 
    கடலைப் பார்த்தபடி கடவுளைத் தியானத்தபடி கப்பல் வரும் 
    திசை நோக்கிக் காத்திருந்தார்.

    பரமதத்தன் 
    வரவே இல்லை.

    வெகு காலத்திற்குப் பின்-
    பின்னொரு நாள்
    பாண்டிய நாட்டில் பரமதத்தன் வசிப்பதாக காரைக்காலுக்கு 
    ஒரு வணிகத் 
    தகவல் வந்தது.

    ஊர்ஜிதம் செய்யப் போன உறவினர்கள் 
    பெற்ற செய்தி அதிர்ச்சியாய் இருந்தது.

    பெரும் பொருள் ஈட்டி தாயகம் திரும்பிய பரமதத்தன் 
    காரைக்கால் திரும்புவதைத் தவிர்த்து பாண்டிய நாடு சென்றிருக்கிறான்.

    அங்கு 
    வசதியோடு வணிகம் மேற்கொண்ட அவனுக்கு வணிகர் ஒருவர் 
    பெண் தந்து மணம் முடித்திருக்கிறார்.

    அந்த இருமனம் இணைந்த திருமணத்தின் பயனாக 
    ஓர் அழகுக் குழந்தை பிறந்திருக்கிறாள்.

    அக்குழந்தைக்கு பரமதத்தன் இட்ட பெயர் 'புனிதவதி'.

    இத்தகவல்கள் காரைக்காலுக்கு வருவதற்கு முன்னரே உற்றார் உறவினரோடு சிவிகை ஏறி 
    பாண்டிய நாடு சென்று கணவனைக் 
    கைப்பிடித்து 
    அழைத்து வர கிளம்பியிருந்தார் புனிதவதியார்.

    புனிதவதியார் 
    பாண்டியநாடு 
    வரும் தகவல் பரமதத்தனுக்கு முன்னதாகவே
    தெரிய வந்தது. 

    இளம் மனைவியையும் தன் பெண் மகவையும் அழைத்துக்கொண்டு 
    நகர எல்லைக்கு வந்து காத்திருந்தான் 
    பரமதத்தன்.

    புனிதவதியாரைப் பார்த்ததும் மூவரும் வணங்கினர்.

    "உமது அருளாலே தான் இத்தனை நாள் வாழ்கிறேன்.

    இந்த பெண் குழந்தைக்கு உமது பெயரையே வைத்துள்ளேன்.

    தாங்கள் தான் என் குலச்சாமி"

    காலில் விழுந்து கதறினான்.

    கணவன் 
    காலடி விழுந்து கதறுவதைக் கண்டு அஞ்சி பயந்து புனிதவதியார் 
    பூங்கொடி போல் தத்தளித்தார்.

    ஒன்றும் புரியாத சுற்றத்தார் வியந்து பரமதத்தனைப் பார்த்தனர்.

    "ஏன் மனைவியின் 
    காலில் விழுகிறாய் ?" ஆச்சரியத்தோடு கேட்டனர்.

    "இவர் 
    மானிடப் பிறவி அல்ல. தெய்வப் பிறவி. 
    நற்பெரும் தெய்வம். 

    இதை அறிந்து தான் விலகி வந்தேன்.

    என் குழந்தைக்கு 
    இவர் பெயரைத் தான் சூட்டியுள்ளேன்.

    ஆகையால் தான்
    நான் இத்தெய்வத்தின்
    பொற்பாதங்களை வணங்கினேன்.

    நீங்கள் அனைவரும் வணங்குங்கள்.
    நிச்சயம்
    நல்லது நடக்கும்"
    என்று பரமதத்தன் 
    பக்திப் பரவசத்தோடு பகர உறவினர்கள் 
    திகைத்துப் போயினர்.

    பின் 
    நடந்ததையெல்லாம் கதைபோலச் சொன்னான் பரமதத்தன்.

    அதேநேரம் நடந்ததையெல்லாம் கவனித்திருந்த புனிதவதியார் 
    கண்மூடி 
    தியானத்தில் ஆழ்ந்தார்.

    ஈசனிடம் 
    நேரடியாக 
    கோரிக்கை வைத்தார்.

    "தேவாதி தேவனே …! 
    என் கணவருக்கு 
    இப்படி ஓர் எண்ணம் வந்திருக்கிறது.

    எல்லாம் உன் செயல்.

     இத்தனை நாள் அவருக்காகவே
    உடல் வளர்த்தேன். வனப்புடன் இருந்தேன்.

    இப்போது அவரது உள்ளக்கிடக்கை வெளிப்படை 
    ஆகிவிட்டது.
    நானும் பூரணமாகப் புரிந்து கொண்டேன்.

    இனி எதற்கு எனக்கு அழகுக் கோலம் ?
    ஈர்க்கும் வனப்பு 
    எனக்கெதற்கு ? 

    என் 
    தசைகளைச் சுருக்கி 
    உன் 
    பூதகணங்களைப் போல் பேய்கணம் போல் 
    ஆக்கி விடு.

    பூத வடிவை மாற்றி 
    பேய் வடிவு தந்துவிடு."

    உணர்ச்சி பொங்க வேண்டி நின்றார்.

    புனிதவதியாரின் வேண்டுதலை 
    எப்போதும் 
    செவிமடுக்கும் செஞ்சடையன் 
    உடனே 
    திருவருள் புரிந்தார்.

    புனிதவதியார் பெண்மைக்கும் அழகிற்கும் ஆதாரமான ஊன் சதை வனப்பை உதறிவிட்டு வெறும் எலும்புக் கூடாய் 
    பேயாய் மாறி நின்றார்.

    ஆம் ….
    மயிலினம் தன் 
    சிறகுகளை உதிர்ப்பது போல்
    இந்த அழகு மயில்
    சதைகளை தசைகளை உதிர்த்தது.

    இதைக்கண்ட உறவினர் "பேய்' என அலறியவாறே அஞ்சி ஓடினர்.

    ஆனால் 
    பரமதத்தன் 
    மனம் தெளிந்து 
    பயம் விலகி 
    வணங்கி நின்றான்.

    அக்கணம் 
    விண்ணவரும் மண்ணவரும் 
    தோன்றி வணங்கினர்.

    வானம் 
    மலர்மழை பொழிந்தது.

    தேவ துந்துபிகள் தேவகானம் இசைத்தன.

    தேவர்களும் முனிவர்களும் 
    தம்மை மறந்து 
    ஆரவாரம் செய்தனர்.

    சிவகணங்கள் 
    ஆனந்தக் கூத்தாடின.

    இவற்றைக் கவனித்த உறவினர்கள் 
    பயம் நீங்கி 
    புனிதவதியாரைச்
    சூழ்ந்து வணங்கினர்.

    பேய்கணமாய் மாறிய புனிதவதியாருக்கு  இறையருளால் 
    உடல் வனப்பு 
    மாறினாலும் 
    குரல் இனிமையும் 
    தமிழ் புலமையும் 
    குன்றாதிருந்தது.

    கண்மூடிக் கனிந்துருகி "புவியாளும் இறைவா….
    உன்னுடைய அழகான திருவடிகளைப் போற்றும் நல்ல 
    சிவ பூதகணங்களில் ஒன்றானேன்."
    என்று பெருமிதத்தோடு கூறிவிட்டு…. 

    அற்புதத் திருவந்தாதியையும் இரட்டை மணிமாலை யையும் 
    பாடி அருளினார்.

    இதனைத் தொடர்ந்தே இறைவன் 
    புனிதவதியார் பிறப்பதற்கு முன்பே இரண்டாவது பெயர் என 
    குறித்து வைத்திருந்த 'காரைக்கால் அம்மையார்' என்ற புனித 
    பெயரைப் பெற்றார்.

    பாண்டிய எல்லையிலிருந்து 
    பேய் வடிவோடு திருக்கயிலாயம் 
    பயணப்பட விருப்பப்பட்டார் காரைக்கால் அம்மையார்.

    வழியில் 
    பார்த்தவர் எல்லாம் பயந்து ஓடினர். 

    காரைக்கால் அம்மை கவலை கொள்ளவில்லை. கயிலை மன்னன் திருநாமத்தை உச்சரித்தபடி 
    பயணம் தொடர்ந்தார்.

    'தன்னை யார் 
    அறிந்தால் என்ன ?
    என்ன பயன் ?
    இறைவன் 
    அறிவானாகில் போதும்' என எண்ணியபடி 
    எதற்கும் கலங்காது 
    பல நாள் பயணத்தில் கயிலாய மலையை அடைந்தார்.

    திருக்கயிலாய மண்ணை காலால் மிதிப்பது தவறு என கருதிய 
    காரைக்கால் அம்மையார் கயிலைநாதனை வேண்டியபடி 
    தலையால் நடக்கலானார்.

    வெள்ளி மலையை தலையால் ஏறினார் சிவன் அருளாலே 
    அவன் தாள் 
    வணங்கியபடியே.

    'திருவருள் 
    துணை செய்தால் தான்  சிவத்தை அடைய முடியும்' என்ற வேதவாக்கு காரைக்கால் அம்மையார் பயணத்தில் உண்மையானது .

    உலகமாதா 
    உமாதேவியார் 
    ஒரு பெண்மணி 
    பேய் வடிவில் 
    தலையால் 
    தம்மை நோக்கி வருவதைக் கண்டு ஆச்சரியத்தோடு உமையொருபாகனிடம் சுட்டிக் காட்டினார்.

    முக்காலமும் உணர்ந்த
    முக்கண்ணர் புன்னகைத்தபடி

    "வருபவர் நமது அன்பிற்குரியவர். 

    வேண்டி 
    இவ்வுருவம் பெற்றவர்.

    என் அன்பு குழந்தை."
    என்று உமையிடம் சொன்னார்.

    உமாதேவியார் அம்மையாரின் 
    அன்பை வியந்து பாராட்டினார்.

    காரைக்கால் அம்மையார் அருகில் வந்ததும் "அம்மையே…!" என்று அன்போடு அழைத்தார் 
    அடியார்க்கினியர்.

    காரைக்கால் அம்மையார் "அப்பா….!" என கூறியவாறு எம்பெருமானின் 
    தாமரைத் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.

    "இங்கு நம்மிடம் வேண்டுவது யாது ?
    நாம்  தரத் 
    தயாராக உள்ளோம்." என்றார் கயிலைப்பெருமான் எல்லை இல்லா கருணையோடு.

    நான்கு வரங்கள் கேட்டார் நற்றமிழ் அன்னையார்.

    "உம்மீது 
    இன்ப அன்பு வேண்டும்.

    என்றென்றும் இறவாத பிறவாமை வேண்டும்.

    மீண்டும் பிறப்பு உண்டேல் உம்மை என்றும் மறவாது இருக்க வேண்டும்.

    நீவீர் ஆனந்த நடனம் ஆடும் போது அடியேன் உன் திருவடியின் கீழ் மகிழ்ந்து பாடிய வண்ணம்  இருக்க வேண்டும்"

    என்று கனிந்துருகி கண்ணீர் மல்கக் கேட்டார் காரைக்கால் அம்மையார்.

    "அம்மையே…! தென்திசையில் பழையனூர் திருவாலங்காட்டில்
    நாம் நடனம் ஆடுவோம்.

    அங்கு 
    நீ சென்று 
    என் நடனம் கண்டு ஆனந்தப்பட்டு 
    எம்மை எப்போதும் பாடிக்கொண்டிரு."
    ஆசி தந்தார் 
    ஆதி சிவனார்.

    அதன்படி 
    திருவாலங்காடு தலத்திற்குத்
    தலையாலே 
    வைராக்கியத்தோடு நடந்து வந்தார்
    காரைக்கால் அம்மையார்.

    ஆங்கு 
    ஆலங்காடு ஆலயத்தில் ஆண்டவனின் 
    நடனக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்து 
    தொழுது வணங்கி 'கொங்கை திரங்கி' என்ற முத்திருப்பதிகத்தைப் 
    பாடி மகிழ்ந்தார்.

    திருஞான சம்பந்தர் 'தோடுடைய செவியன்' என்ற தேவாரப் பதிகம் பாடுவதற்கு 
    பல ஆண்டுகளுக்கு முன்னரே 
    'கொங்கை திரங்கி' என்ற திருப்பதிகத்தை தேவாரத்திற்கு தோற்றுவாய் போல் பாடியருளினார் காரைக்கால் அம்மையார் என்று இன்றும் போற்றுகின்றார்
    சைவச் சான்றோர்.

    ஆனந்த கூத்தனின் ஆனந்தக் கூத்தை 
    முன் வணங்கி பெருங்காதல் எழுந்தோங்க பெரிதும் வியப்பெய்தி 
    இத் திருப்பதிகம் 
    பாடி முடித்தார்.

    கூத்தபிரான்
    ஆடும் திருக்கூத்தை சேவடிக்கீழ் என்றும் நீங்காது அமர்ந்து பாடும் வரம் பெற்றதால் இன்றுவரை  இறவாது பாடிய வண்ணமே திருவாலங்காடு தலத்தில் அருட்காட்சி தருகிறார் காரைக்காலம்மையார்.

    சிவபெருமானால் "அம்மையே"
    என அழைக்கப்பட்ட பெருமை வேறு 
    எவருக்கும் இல்லை என்பது 
    காரைக்கால் அம்மையாரின் 
    அருட் சிறப்பு.

    அறுபத்து மூவரில் 
    மூவரே பெண்டிர்.

    இசைஞானியார்.
    மங்கையற்கரசியார்.
    காரைக்கால் அம்மையார் ஆகிய அம்மூவரில்
    இயல் இசையில் வல்லவர் காரைக்கால் அம்மையார் என்பது 
    அம்மையின் தமிழ் சிறப்பு.

    'பேயார்க்கும் அடியேன்..' இது சுந்தரர் வாக்கு .

    அம்மை அடிமலர் வாழ்க !

    (காரைக்கால் அம்மையார் புராணம் -நிறைவுற்றது)

  • October 2 2021 rasipalan

    அக்டோபர் 2 –  ஏகாதசி நாள் ராசிபலன் ….. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     நன்மை 
    ரிஷபம் –     பயம் 
    மிதுனம் –      கவனம்   
    கடகம் –      ஆதரவு
    சிம்மம் –      மகிழ்ச்சி 
    கன்னி –      தோல்வி
    துலாம் –      லாபம்
    விருச்சிகம் –       செலவு
    தனுசு –       சுகம் 
    மகரம் –      கவலை
    கும்பம் –     வெற்றி
    மீனம் –       சிக்கல்
    சந்திராஷ்டமம்    –    உத்திராடம் 

  • October 2 Puratasi 3rd saturday

    அக்டோபர் 2 – புரட்டாசி 3வது சனிக்கிழமை
    பிலவ வருடம் – புரட்டாசி 16
    காந்தி ஜெயந்தி, 
    02-அக்-2021 சனி  ஸபர்24
    கரிநாள்
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    இ    8.51
    நட்சத்திரம்    :    ஆயில்யம்    ந.இ    2.19
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    உத்திராடம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Kulachirai Nayanar puranam part 2

    – "மாரி மைந்தன்" சிவராமன்

    சைவத்தை வளர்ப்பதற்கும் 
    சமயத்தை அழிக்க நினைப்போரை 
    வேரொடு வேராய் 
    அழிக்க வல்லவருமான சமய ஞான வீரரை தரிசிக்க 
    ஆவல் கொண்டனர்
    மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும்.

    அன்னை உமையவளிடம் ஞானம் பெற்ற ஞானசம்பந்தரரை மதுரைக்கு 
    அழைத்து வந்தால் அஞ்ஞான இருளை அழித்துவிடலாம் என்பதில் 
    உறுதியாய் இருந்த குலச்சிறையார் 
    அரசியாரிடம் கலந்துரையாடி திருமறைக்காடு விரைந்தார்,
    ஞானசம்பந்தரைத் தரிசித்து 
    பாண்டிய நாட்டிற்கு அழைத்து வர.

    வழியில் எதிரே 
    ஒரு சிவிகை.
    சிவிகையைச் சுற்றி 
    'சிவ சிவ ' என
     ஒலித்தவாறு 
    அடியவர் கூட்டம்.

    சிவிகையினுள்
    அன்பொழுக 
    அருள் பெருக அமர்ந்திருந்தார் ஆளுடைய பிள்ளை.

    திருஞானசம்பந்தரைப் பற்றி நிறையக் 
    கேள்விப் பட்டிருந்த 
    குலச்சிறையார் குதிரையிலிருந்து அவ்விடத்திலேயே இறங்கி கைகூப்பியபடி
    நிலமிசை வீழ்ந்தார்.

    'யார் இவர் ?'
    என அருகிருந்தோரிடம் கேட்டறிந்த 
    சிவஞானச் செல்வர் சிவிகையில் இருந்து இறங்கி வந்து 
    குலச்சிறையாரை 
    தோள் தூக்கி
    ஆசி தந்து
    ஆரத் தழுவினார்.

    நலம் 
    விசாரிப்புக்குப் பின்பு
    நாடு பற்றி பேச்சு எழுந்தது.

    சமணத்தால் 
    நாடு படும் பாடு குறித்து குலச்சிறையார் விவரிக்க
    நிலைகுலைந்து போனார் ஞானசம்பந்தர் பெருமான்.

    சைவம் தழைக்கவே 
    தான் தேசசஞ்சாரம் செய்வதாகக் கூறிய ஞானசம்பந்தர் 
    பாண்டிய நாட்டிற்கு 
    வர ஆர்வம் காட்டினார். உடனே சம்மதித்தார்.

    விடைபெற்று  
    பரிமேலேறி
    காற்றை விட வேகமாக பாண்டியநாடு விரைந்து பட்டத்தரசியிடம் நடந்ததைக் கூறி
    வரவேற்பு ஏற்பாடுகளில் மனத் துள்ளலோடு ஈடுபடலானார்.

    பாண்டிய நாட்டின் பட்டத்தரசி மங்கையர்க்கரசியார்
    எல்லை வரை சிவிகையில் 
    வந்து 
    எல்லையில்லா பக்தியோடும் நம்பிக்கையோடும் ஞானசம்பந்தரரை
    வணங்கி வரவேற்றார்.

    முதல் அமைச்சர் குலச்சிறையார் முறைப்படி 
    அரசனிடம் சொல்லிவிட்டு
    மகாராணியோடு வந்து
    ஞானக் குழந்தையை
    முகமலர்ந்து வரவேற்றார். 

    ஞானசம்பந்தர் மதுரையிலேயே சிலகாலம் 
    தங்க ஏற்பாடாயிற்று.

    சமணர்களால் சம்பந்தருக்கு தீங்கேதும் நேர்ந்துவிடும் என்பதை யூகித்த
    முதலமைச்சர் குலச்சிறையாருக்கு 
    பலத்த காவலுக்கு
    ஏற்பாடு செய்திருந்தார்.

    ஞானசம்பந்தரை
    மதுரையம்பதி உறையும் சொக்கநாதரைத் 
    தரிசிக்க வைத்து 
    தானும் உடனிருந்து பெரும் பாக்கியம் பெற்றார்
    குலச்சிறையார்.

    ஞானசம்பந்தர் 
    தனது 
    இணையற்ற அருளாற்றலால் மன்னனின் மனதை மாற்றி 
    சமணத்திலிருந்து சைவத்திற்கு மாற்றிவிட்டால் 
    'தங்கள் கதி அதோ கதி'
    என அஞ்சிய சமணர்கள் கொடும் திட்டம் தீட்டினர்.

    பாண்டிய வீரர்களின் கட்டுக் காவலை மீறி ஞானசம்பந்தர் தங்கியிருந்த மடத்திற்கு 
    தீ வைத்தனர் 
    தீய மனதோர்.

    சமணர்கள் வைத்த 
    பெரும் தீ 
    அனல் விழியனின் 
    அருள் புதல்வனை 
    என்ன செய்துவிடும் ?

    எம்பிரானை எண்ணி 
    ஒரு பதிகம் பாடி
    'தீ எய்தவரையே 
    சென்று சேரட்டும்' என கோபம் காட்டினார் ஞாலமும் அறிந்த ஞானசம்பந்தர்.

    அவர் வாக்கு சற்றும் பொய்க்காமல் 
    அப்பெருந்தீ 
    அரசனின் வயிற்றைச் சென்றடைந்தது.

    மன்னன் தீராத 
    வெம்மை 
    நோயில் வீழ்ந்தான். பெரும் நெருப்பு தீண்டிய புழுவாய் துடித்தான்.

     சமணர்கள் சமணத்துறவிகள் தாங்கள் அறிந்திருந்த அனைத்து மருந்துகளையும் மந்திரங்களையும் பிரயோகித்துப் பார்த்தனர்.

    வெம்மை
    கூடியதே தவிர குறைந்தபாடில்லை.
    கோபம் கொண்டு
    சமணர்களை நோக்கி மன்னன் வீசிய வார்த்தைகள் வெம்மையாய் சுட்டன.

    இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மாதரசி மகராசியாரும் முதலமைச்சர் குலச்சிறையாரும் மன்னனிடம் திருஞானசம்பந்தரின் மகத்துவங்களை எடுத்துச்சொல்லி 
    அவரை அழைத்து வர அனுமதி கேட்டனர்.

    சமணமே 
    பெரிதெனக் கருதி 
    அதுகாறும் 
    சமணம் தழுவி 
    அரசாண்டு வந்த மன்னன் 
    வெம்மை நோயைக் கூட தீர்க்க முடியாத 
    பொய் மதம் 
    சமணம் 
    என வெறுத்து ஞானசம்பந்தரைத் தரிசிக்க 
    விருப்பம் தெரிவித்தான்.

    வந்தார் 
    ஆளுடைய பிள்ளை.

    கனிவாய் பார்த்து புன்னகையால் 
    ஆசி கூறி 
    வெண்ணீறைக் கையிலெடுத்து உடலெங்கும் பூசி விட்டார் சிவநாமம் அர்ச்சித்தபடி.

    என்ன மாயமோ அக்கணமே 
    பாண்டியனின் நோய் பறந்தோடிப் போனது.

    மன்னன்
    மனதில் இருந்த அஞ்ஞான இருளும் அகன்று போனது.

    தீரா நோய் 
    தீர்க்கப்பெற்ற அனுபவத்தால் சைவத்தின் 
    பெருமையை உணர்ந்த 
    பாண்டிய மன்னன் அடுத்தகணமே
    சைவம் தரித்தான்.

    ஞானசம்பந்தரின் திருவடிகளில் 
    தன் நெற்றி பதித்து கண்ணீர் வடித்தான்.

    அது நாள் வரை தன்னையும் 
    தன் குடிகளையும் 
    நம்பவைத்து 
    மதம் மாற்றிய சமணர்களுக்குத் 
    தக்க தண்டனை தர முடிவெடுத்தான்.

    அதற்குள்ளாகவே மன்னன்  ஞானசம்பந்தரால்
    குணமான செய்தி பாண்டிய நாடெங்கும் பரவிவிட்டது.

    பயந்துபோன 
    சமணத் துறவிகள் ஞானசம்பந்தரை வம்பிழுக்கும் நோக்கில் வாதப் போருக்கு அழைத்தனர்.

    மூன்று வகை வாதங்களான
    சுர வாதம் 
    அனல் வாதம் 
    புனல் வாதம் 
    அறிவு தெளிய நடந்தேறின.

    முதல் இரண்டு வாதங்களில் 
    தோல்வி கண்ட சமணர்கள் 
    'புனல் வாதத்தில் தோற்றால் வேந்தனே எங்களைக் கழுவேற்றலாம்' என 
    மார் தட்டினர்.

    ஆனால் அதிலும் ஞானசம்பந்தர் 
    வெற்றிக் கொடி நாட்டினார்.

    முதலமைச்சர் குலச்சிறையார் 
    வாதம் புரிந்து தோற்ற 
    சமண குருமார்களையும் ஓடி ஒளிந்த சமணர்களையும் ஒருவரைக் கூட 
    விடாமல் பிடித்து 
    கழுவேற்றினார்.

    அப்படி 
    கழுவேற்றப்பட்டு 
    மாண்ட சமணர்களின் எண்ணிக்கை 
    எட்டாயிரமாம்.

    அதன் பின்னர் 
    பாண்டிய மன்னன் அரசியாருடன் சேர்ந்து குலச்சிறையார் ஆலோசனையுடன் செய்த 
    சிவப் பணிகள் 
    பல்லாயிரம் இருக்கும்.

    அதனால் 
    பாண்டிய நாட்டில் 
    சமணம் பூண்டோடு அழிந்தது.
    சைவம் தழைத்தது.

    'வந்த வேலை 
    இறை விருப்பப்படி முடிந்துவிட்டது'
    எனக் கருதி
    சில நாட்களில் ஞானசம்பந்தர் 
    சோழநாடு புறப்பட்டார்.

    குலச்சிறையாருக்கு ஞானசம்பந்தருடனேயே சோழநாடு சென்று 
    சமயப் பணி தொடர 
    ஆசை மிகுந்தது.

    ஞானசம்பந்தர் 
    புறப்படும் தருணம் வரை 
    அவரது சம்மதத்திற்காக காத்திருந்தார். கண்ணசைவுக்காக
    முகம் பார்த்திருந்தார்.

    ஞானசம்பந்தரோ "இங்கிருந்தபடியே 
    சைவம் தழைக்க 
    சமயப் பணியாற்றுங்கள். சிவநெறி போற்றி இருங்கள்." எனக் கனிவோடு 
    உத்தரவிட்டு விட்டு மகிழ்வோடு விடைபெற்றார்.

    திருஞானசம்பந்தரின் திருவாக்கே
    இறைவாக்கு என உணர்ந்த 
    குலச்சிறையார் பல்லாண்டு 
    சிவப் பணிகள் செய்து ஒரு நன்நாளில் 
    மதுரையம்பதியிலேயே முக்தியடைந்தார்.

    சிவபுரியில் 
    சிவபிரான் அருகில் தேவகணங்களுடன் அவர்களில் ஒருவராய் 
    பேரருளோடு 
    திகழத் தொடங்கினார். இன்றும் 
    அருள் சுரந்து கொண்டிருக்கிறார்.

    குலச்சிறையாரை  'பெருநம்பி' எனப் போற்றுகின்றனர் தாங்கள் அருளிய பதிகங்களில் 
    நம்பியாரூராரும் ஒட்டக்கூத்தரும்.

    இது 
    குலச்சிறையாருக்கு கிடைத்த 
    இறையம்சம் கொண்ட
    நாயனார் விருது.

    நம்பி என்றால் 
    ஆண்களில் மேன்மையானவர் 
    என்று பொருள்.

    'குணம் கொடு 
    பணியுங் குலச்சிறை' எனப் போற்றுகிறார் மாணிக்கவாசகர்.

    'பாண்டிய நாடு முழுதும் சமண இருள் 
    கவிழ்ந்த போது 
    ஆணில் ஒருவரும் பெண்ணில் ஒருத்தியுமே சைவத்தில் நிலைத்து நின்று காத்தவர்கள்.

    ஆணில் 
    குலச்சிறை நாயனார்.
    பெண்ணில் மங்கையர்க்கரசியார் ' என்று நன்றியோடு புகழ்மாலை சூட்டுகிறார்   வாரியார் சுவாமிகள்.

    'பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன் ' 
    – சுந்தரமூர்த்தி நாயனார்.

  • September 02 2021 Rasi palan

    செப்டம்பர் 2 – ஏகாதசி நாள் ராசிபலன் …..
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     பாராட்டு 
    ரிஷபம் –     நற்செயல்
    மிதுனம் –      மேன்மை 
    கடகம் –      புகழ்
    சிம்மம் –      மகிழ்ச்சி
    கன்னி –      உற்சாகம் 
    துலாம் –      பொறுமை 
    விருச்சிகம் –       போட்டி 
    தனுசு –       வரவு
    மகரம் –      சினம் 
    கும்பம் –     ஆதாயம்  
    மீனம் –       ஜெயம் 
    சந்திராஷ்டமம்    –    கேட்டை, மூலம்

  • September 02 2021 Smartha egadaasi

    செப்டம்பர் 2 – ஸ்மார்த்த ஏகாதசி
    பிலவ வருடம் – ஆவணி 17
    02-செப்-2021 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    முழுவதும்    0.00
    நட்சத்திரம்    :    திருவாதிரை    ம    2.57
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    கேட்டை,மூலம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்
     

  • August 2 – Aadi karthigai naal rasi palan

    ஆகஸ்ட் 2 – ஆடி கார்த்திகை நாள் ராசிபலன்…. 
    இன்றைய ராசி பலன்
    மேஷம் –     வெற்றி
    ரிஷபம் –     நலம் 
    மிதுனம் –      அமைதி 
    கடகம் –      நட்பு
    சிம்மம் –      ஜெயம் 
    கன்னி –      யோகம்  
    துலாம் –      சாந்தம்   
    விருச்சிகம் –       வரவு
    தனுசு –       எதிர்ப்பு 
    மகரம் –      பயம் 
    கும்பம் –     பொறுமை   
    மீனம் –       நன்மை 
    சந்திராஷ்டமம்    –    சித்திரை, சுவாதி

  • August 2 Aadi Karthigai

    ஆகஸ்ட் 2 – ஆடி கார்த்திகை
    பிலவ வருடம் – ஆடி 17
     கார்த்திகை 
    திருத்தணி முருகன் தெப்பம்
    02-ஆக-2021 திங்கள்  
    நல்ல நேரம்    :    6.00 – 7.30    
    ராகு    :    7.30 – 9.00    
    குளிகை    :    1.30 – 3.00
    எமகண்டம்    :    10.30 – 12.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    நவமி    ம    12.07
    நட்சத்திரம்    :    கார்த்திகை    ந.இ    12.40
    யோகம்    :    மரண-அமிர்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    சித்திரை,சுவாதி
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்