Blog

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   நன்மை 
    ரிஷபம் – செலவு
    மிதுனம் – சாந்தம் 
    கடனம் – நலம் 
    சிம்மம் – ஆதாயம்  
    கன்னி – பொறுமை 
    துலாம் –   சோர்வு  
    விருச்சிகம் – பாராட்டு 
    தனுசு – உயர்வு 
    மகரம் –   வரவு 
    கும்பம் – சித்தனை
    மீனம் – சுகம் 
    சந்திராஷ்டமம்    – திருவாதிரை, புனர்பூசம்
     

  • March 30 Indraya Naal

    மார்ச் 30 – சித்தயோக நாள்
    விளம்பி வருடம் – பங்குனி 16
    30-மார்-2019 சனி  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    9.00 – 10.30    
    குளிகை    :    6.00 – 7.30
    எமகண்டம்    :    1.30 – 3.00                          
    திதி    :    தசமி          
    திதி நேரம்    :    தசமி    அ.கா    5.55
    நட்சத்திரம்    :    உத்திராடம்    மா    6.16
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    திருவாதிரை,புனர்பூசம்
    சூலம்    :    கிழக்கு
    பரிகாரம்    :    தயிர்
     

  • Nandhiyin kurukke poga koodathu

    சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் முதலில் நாம் வணங்க வேண்டும். சிவபெருமானின் வாகனமாக இருப்பது வெள்ளை நிறக்காளை. இதன் சிறப்பம்சங்கள் பல இருக்கின்றன. 

    சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும், சிறப்பு மிகு பெருமையும் கொண்டது. நந்தி என்றால் ‘மகிழ்ச்சி’ என்று பொருள். நான்கு மறைகளையும் நந்தியம் பெருமானுக்குத் தான், ஈசன் முதன் முதலில் கூறியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

    சிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எந்த காலத்திலும் நிலைத்து நிற்பது தர்மம் மட்டுமே. அந்த தர்மம் தான், இறைவனான சிவபெருமானைத் தாங்கி நிற்கிறது.

    கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும், வீழ்ந்து வணங்குவதும் கூடாது என்று சொல்வார்கள். ஏனெனில் நந்தியின் மூச்சுக் காற்று கருவறை சிவலிங்கம் மீது பட்டுக் கொண்டிருப்பதாக ஐதீகம். நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத் தான் ஈசன் சுவாசிக்கிறார். அதாகப்பட்டது.. தர்மம் தான் இறைவனின் சுவாசம்.

    சிலாத முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது.

    நந்தியம்பெருமானுக்கு ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன.

  • Thirupathy Dharshan

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இரண்டு மணி நேரத்தில் தரிசனம் செய்ய முடியும். ஆம் உரிய ஆவணங்கள் இருந்தால் இது சாத்தியம் தான். 

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையை காட்டினால், 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் முறை இருக்கிறது.  

    இலவச தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், தங்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டினால் 2 மணி நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிக்கும் முறை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    திருப்பதி மற்றும் திருமலையில்  அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பக்தர்கள் தங்கள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டையைக் காண்பித்து பயோ மெட்ரிக் அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அதில் குறிப்பிட்ட நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய முடியும். 

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   கவனம் 
    ரிஷபம் – பகை
    மிதுனம் – போட்டி 
    கடனம் – அமைதி
    சிம்மம் – திறமை 
    கன்னி – உற்சாகம் 
    துலாம் –   உழைப்பு  
    விருச்சிகம் – பக்தி 
    தனுசு – கோபம் 
    மகரம் –   சலனம் 
    கும்பம் – நன்மை  
    மீனம் – ஊக்கம் 
    சந்திராஷ்டமம்    – மிருகசீரிடம்,திருவாதிரை
     

  • March 29 Indraya Naal Eppadi

    மார்ச் 29 – இன்றைய நாள் எப்படி
    விளம்பி வருடம் – பங்குனி 15
    29-மார்-2019 வெள்ளி  
    கரிநாள்
    நல்ல நேரம்    :    9.00 – 10.30    
    ராகு    :    10.30 – 12.00    
    குளிகை    :    7.30 -9.00
    எமகண்டம்    :    3.00 – 4.30                          
    திதி    :    நவமி          
    திதி நேரம்    :    நவமி    அ.கா    4.10
    நட்சத்திரம்    :    பூராடம்    அ.கா    4.07
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    மிருகசீரிடம்,திருவாதிரை
    சூலம்    :    மேற்கு
    பரிகாரம்    :    வெல்லம்
     

  • Dyanam endral enna

    பதஞ்சலி முனிவரின் கருத்துப்படி “குறித்த ஒரு பொருளின் மீது மனத்தினை நிறுத்திவைக்கும் நிலையில் சிறிது நேரம் நிலைத்திருத்தல்” தியானம் எனப்படும்.

    பலர் தாம் தியானம் செய்வதாக நினைத்துக்கொண்டு தாரணையே செய்கின்றனர். இது தியானத்தின் முதற்படியாகக் கருதப்படுகின்றது. இந்நிலையில் மனம் அசைவற்று நிறுத்தப்படுகின்றது. அசைவற்று நிற்கும் மனம் அப்படியே நிலைத்து நிற்கும் போது தியானமாக மாறுகின்றது. (ணிலீனீitation) இதனையே பதஞ்சலி முனிவர் “தத்ர ப்ரத்யயைகதானத த்யானம்” என யோகசூத்திரத்தில் குறிப்பிடுகின்றார்.

    மனம் தான் வேறு நினைக்கின்ற பொருள்வேறு, என்றில்லாமல் அதுவாகவே அது மாறுதல் தியானத்தின் ஆரம்பம் உதாரணம், தாமரைப்பூவை நினைத்துத் தியானம் செய்பவர் தானே தாமரை மலராகி அதன் மணம், குணம் போன்ற அனைத்துத் தன்மைகளையும் அறிந்தவராவார். மனத்திற்கு அப்பாற்பட்டது தியானம்.

    தியானம் ஆரம்பத்தில் மனதின் செயற்பாடாக இருந்த போதிலும் இறுதியில் அதன் செயற்பாடு அற்றுப் போகின்றது.

    தியானம் செய்பவர் தன்னை மறந்தவராகின்றார். இது தூக்க நிலைபோன்று இருக்கும். ஆனால் வழமையான நித்திரைக்கும் தியானத்திற்கும் வேறுபாடு உண்டு. நித்திரை சாதாரண உணர்வு நிலை, தியானமோ உணர்வுக்கு அப்பாற்பட்ட நிலை. அதாவது மனதைக் கடந்து உணர்வு பிரிந்து உள்முகப்படும் நிலை. இந்நிலையில் புதுவித அனுபவங்களையும் இன்பங்களையும் பெறலாம்.
     

  • Vasthu Tortoise

    வாஸ்து சாஸ்திரம் என்பது, ஒரு நிலத்தில் கட்டிடம் கட்டுவதற்குரிய முறைகளையும், அதன் தத்துவங்களையும் விளக்கும் ஒரு வேதம் சார்ந்த  அறிவுத்துறையாகும். 

    சீன வாஸ்து எனும் ஃபெங்க்சுயி முறையில் ஆமை எப்படித் தன் ஐந்து உறுப்புகளையும் (தலை மற்றும் கால்கள்) உள்ளடக்கிக்கொண்டு எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்கிறது. வாஸ்து சாஸ்திரப்படி நீண்ட ஆயுளையும்,  விருப்பங்கள் உடனடியாக நிறைவேறுவதையும் ஆமை குறிக்கிறது.
     
    ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் விளங்காது என்ற சொல்வழக்கு உண்டு. ஆனால், உலோகத்தால் செய்யப்பட்ட ஆமையை, நீர் நிறைந்த ஒரு குவளையில் இட்டு, வீட்டினுள் வடக்கு திசையில் வைத்தால் சகல தோஷங்களையும் நீக்கும். 

    வடக்கில் படுக்கை அறை  அமைந்திருக்குமானால், வெறும் உலோக ஆமையைப் பராமரிக்கலாம். இப்படிச் செய்வதால் பொருளாதார மேம்பாடு, பகைவரை வெல்லுதல், நீண்ட ஆயுள்,  பொறுமை முதலான பல பலன்களை நம்மால் ஈட்ட முடியும்.
     
    ஆமை மட்டும் இல்லை, ஆமையின் கூர்மாவதாரத்தில் தோன்றிய வலம்புரி சங்கு, காமதேனு, கற்பகவிருக்ஷம் ச்யமந்தக மணி, ஐராவதம், உச்சிஸ்ரவைஸ்  என அனைத்துமே வாஸ்து தோஷம் போக்கும் பொருட்களாகும்.

  • Rasi Palangal

    இன்றைய ராசி பலன்கள்
    மேஷம் –   பொறுமை 
    ரிஷபம் – நஷ்டம் 
    மிதுனம் – நிறைவு
    கடனம் – கவனம்   
    சிம்மம் – ஆதரவு 
    கன்னி – கவலை
    துலாம் –   உற்சாகம்  
    விருச்சிகம் – பயம் 
    தனுசு – சிந்தனை
    மகரம் –   சிக்கல்
    கும்பம் – அனுகூலம் 
    மீனம் – சாதனை
    சந்திராஷ்டமம்    – ரோகிணி, மிருகசீரிடம்
     

  • March 28 Indraya Naal Eppadi

    மார்ச் 28 – இன்றைய நாள் எப்படி?
    விளம்பி வருடம் – பங்குனி 14
    28-மார்-2019 வியாழன்  
    நல்ல நேரம்    :    10.30 – 12.00    
    ராகு    :    1.30 – 3.00    
    குளிகை    :    9.00 – 10.30
    எமகண்டம்    :    6.00 – 7.30                          
    திதி    :    அஷ்டமி          
    திதி நேரம்    :    அஷ்டமி    இ    2.48
    நட்சத்திரம்    :    மூலம்    ம    2.19
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    ரோகிணி,மிருகசீரிடம்
    சூலம்    :    தெற்கு
    பரிகாரம்    :    தைலம்